Saturday, February 21, 2009

74. எல்லா கடவுள்களும் இந்த வரிசைக்கு வாங்க !!

சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் நடந்த மோதல் தொடர்பாக, வக்கீல்களைக் கைது செய்யக்கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக நீதிபதிகள் கூறினர். இது தொடர்பாக உள்துறைச் செயலரும் உத்திரவாதம் தந்துள்ளார்.

வக்கீல்கள் பொறுமையாக இருந்து ஒத்துழைக்க வேண்டுமென்று நீதிமன்றம் வேண்டிக் கேட்டுக் கொண்டது.

உள்துறைச்செயலரும், காவல் துறையும் தந்துள்ள உறுதிமொழிகள் :
  1. காயமடைந்த வக்கீல்கள், சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்யவில்லை.
  2. முறையான புலன் விசாரணைக்குப் பின், தலைமை நீதிபதிக்குத் தெரிவித்த பின் தேவைப்பட்டால் எதிர் காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்
  3. சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக விடுதலை செய்வோம்.
  4. நேற்று முந்தினம் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி கைது செய்யப்பட்டவர்கள், சரண்டர் செய்யப்பட வேண்டியவர்களை, ஹைகோர்ட்டில் சகஜ நிலை திரும்புவதை உறுதி செய்ய சொந்த ஜாமீனில் விடுவிப்போம்.
  5. சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் அரசின் செலவில் (அரசு மருத்துவமனையிலா அல்லது அரசு செலவில் தனியார் மருத்துவமனையிலா என்று தெரியவில்லை) சிகிச்சை
    அளிக்கப்படும்.
  6. சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவோம்.

இந்த உத்தரவாதங்களைப் பதிவு செய்த பெஞ்ச், இதைப் பின்பற்றவேண்டும் என்றும் தவறினால், கோர்ட் உத்தரவை மீறியதாகக் கருதப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இவனுங்க என்ன “வானத்துலேருந்து குதித்து” வந்தவங்களா? வக்கீல்களுக்கென்று தனிச் சட்டம் எப்போ வந்தது. இதே சட்ட திட்டங்கள் மற்ற தொழிலாளர்கள் கலவரம் செய்தபோது (இனிமேல் தயவுசெஞ்சு செய்யாதீங்கையா !!) எப்போவாவது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதா?

நீதிபதிகளை நம்ப முடியவில்லை!!


எழுத்தாளர்கள் (”சாரு கொஞ்சம் (வழக்கம் போலவே) ஓவர்!!) :

இது “தமிழ் எழுத்தாளர்கள் படைப்புக்கள் நாட்டுடமையாக்கம்” என்ற தலைப்பில் சாரு நிவேதிதா எழுதிய இடுகையிலிருந்து (மறுபடியும் சாருவா? மறுபடியும் சினேகாவா? சீமாச்சு இது அடுக்காது !!)


.... மேலும் பரிவுத்தொகை கொடுக்க இவர்கள் யார்? வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பொதுமக்களின் சேவகர்கள் கடவுள் ஸ்தானத்தில் இருக்கும் எழுத்தாளர்களின் மீது பரிவு காட்டுவதா? என்ன வேடிக்கை இது?

’ நான் கடவுள் ’ படத்தில் ஒரு காட்சி வருகிறது. குழந்தைகளையும், பெண்களையும், உடல் நலிவுற்றவர்களையும் கடத்திப் பிச்சை எடுக்க வைக்கும் நாயர் என்பவனை ருத்ரன் என்ற அகோரி அடித்து உதைத்துக் கொன்று தின்றும் விடுகிறான்.

அகோரிகள் பிரேதங்களை உண்பார்கள்.

ருத்ரனை போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறது.

” தம்பி, நீ யாரு? ” என்று கேட்கிறார் நீதிபதி.

“நான் கடவுள் ” என்கிறான் ருத்ரன்.

உடனே அவனை சித்தப் பிரமை பிடித்தவன் என்று நினைத்துக் கொள்ளும் நீதிபதி, போலீஸ்காரரை நோக்கி “ஏய்யா இப்படி கண்ட கண்ட ஆளுங்களையெல்லாம் இழுத்துண்டு வந்து நிறுத்தறே? ” என்று திட்டிவிட்டு, ருத்ரனைப் பார்த்து

“உன் விலாசம் என்ன? ” என்று கேட்கிறார்.

அதற்கு ருத்ரன் “நான் பஞ்ச பூதங்களிலும் இருப்பேன் ” என்கிறான்.

அந்த ருத்ரனைப் போன்றவர்கள் எழுத்தாளர்கள். (பிணந்தின்னிகளா சாரு ? )அவர்கள் சிருஷ்டிகர்த்தாக்கள். தேசம், மொழி, இனம், மதம், சாதி போன்ற எதற்கும் கட்டுப்படாதவர்கள். அவர்களுக்குப் போய் ஒரு சராசரி
மனிதன் பரிவுத்தொகை கொடுக்க முடியுமா?


கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு உண்டியலில் காசு போட்டு விட்டு வருகிறீர்கள். அதை பரிவுத் தொகை என்றா சொல்வீர்கள்? காணிக்கை ஐயா, காணிக்கை. இந்த உலகம் வாழ்வதற்கும், நீங்கள் ஜீவித்து இருப்பதற்கும் காரணமான கடவுளுக்குக் காட்டும் நன்றியின் ஒரு குறியிடே உண்டியலில் போடும் காசு. அதேபோல், இந்த மொழியும், இம்மொழி சார்ந்த கலாச்சாரமும், நாகரீகமும் செத்துப் போய் விடாமல் ஜீவித்திருக்க வைப்பவனே எழுத்தாளன். ( This is too much!! ) முடிந்தால் அவனுக்குக் காணிக்கை செலுத்துங்கள்; பரிவுத் தொகை தராதீர்கள்.


oOo

இவனுங்க யாருமே என் கண்ணோட்டத்தில் கடவுள்கள் இல்லை. சிலர் சில நேரங்களில் மட்டும் “மனிதனும் தெய்வமாகலாம்” என்ற நோக்கில் சிலருக்குக் கடவுள்களாகக் காட்சி தருகிறார்கள்.. அந்த வரிசையில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மனித நேயத்துடன் உதவுபவர்கள் ( வேறு யார் யார்னு நீங்க பின்னூட்டத்துல சொல்லுங்க ) , செயற்கரிய செய்யும் பெரியவர்கள் மட்டுமே கடவுள்களாக என் கண்ணுக்குத் தெரிந்தவர்கள்.


“நான் தான் கடவுள்” என்று நினைத்துக் கொண்டு அராஜகம் செய்பவர்களோ அல்லது சுய பிரஸ்தாபம் செய்து கொண்டிருப்பவர்களோ கடவுள் என்று நான் நினைப்பதில்லை !!


பின்குறிப்பு 1 : என்னை வாழ்த்த நினைக்கும் கடவுள்கள் வாழ்த்திக் கொள்ளலாம்.

பின்குறிப்பு 2: எனக்குத் தெரிஞ்சு சினேகா ரசிகர்கள் நிறைய பேருக்கு சினேகா கடவுளாக இருக்கிறார்... சில பேருக்கு (அபிஅப்பா?) தீபா வெங்கட், (நாமக்கல் சிபி?) நயன் தாரா போல..

2 comments:

இலவசக்கொத்தனார் said...

அரசியல்வியாதிகளுக்குத் தனிச்சட்டம், என இருக்கும் பொழுது வக்கீல்களுக்கு இருந்தால் என்ன?

ஆமாம், இந்த செல்வகணபதி கேசை இந்த அரசு வாபஸ் வாங்கினதைப் பத்தி ஒண்ணும் சொல்லலையா?

அறிவிலி said...

இன்னும் எத்தனை சினேகா படம் ஸ்டாக் வெச்சுருக்கீங்க?

சும்மாதான், சாருவை பத்தி நெறைய எழுதலாமேன்னு கேட்டேன்.