Friday, December 18, 2009

88. கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள் !!

நம்ம தம்பி விவசாயி இளா பதிவுல போயி அவரோட ஆணிவேர் என்ற சிறுகதையைப் படிச்சேன். ரொம்ப நல்ல கதை. ஊர் பாசத்தையும் சொந்தங்களின் வலிமையையும் பத்தி அழகா எழுதியிருக்கார்.

அங்கிருந்து இந்த காசாங்காடு ஊரின் வலையகத்துக்குச் செல்ல நேர்ந்தது.. ரொம்பவே அசத்திட்டாங்க. அவங்க ஊரைப் பத்தின எல்லா விஷயங்களும்.. எல்லா விஷயங்களும்னா.. எல்லாமுமே அங்க இருக்கு.. அதுவும் அழகா வகைப்படுத்தி.. என்னமா.. அசத்தியிருக்காங்க..

இப்படியே நம்ம எல்லா கிராமங்களைப் பத்தியும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..

சில பேர் ஆர்வக்கோளாறில (MS உதயமூர்த்தி ஐயா பாணியில் சொல்லணுமா சோடா பாட்டில் உற்சாகம்) ஆரம்பிப்பாங்க. ஆரம்பத்தில இருந்த அந்த சுறுசுறுப்பு அப்புறம் குறைஞ்சுப் போயி அப்புறம் வலைப்பக்கங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது.. அது போல இல்லாமல் 2008 அக்டோபர் மாசத்துலேயிருந்து ஆரம்பிச்சி முந்தாநாள் இறந்து போன நடுத்தெரு செட்டியார் வீட்டு மாசிலாமணி ஐயா வீட்டு செய்தி வரை இணையத்துல எழுதியிருக்காங்க..



படிக்கப் படிக்க ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. அவசியமா காசாங்காடு Global Village (அப்படித்தான் சொல்றாங்க) இணையத்தளத்துக்குப் போயிப் பாருங்க. அவ்வளவு நல்லா இருக்கு.. http://www.kasangadu.com/

ஊரில் உள்ள பள்ளிகள், கோவில்கள், தெருக்கள், அரசு அலுவலகங்கள், திருமண மண்டபம் எல்லாம் போட்டோக்களோட போட்டிருக்காங்க..

ஊராட்சி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களெல்லாம் இருக்கு. போக்குவரத்து வசதிகள், ஊரில் உள்ள வீட்டுப் பெயர்கள் எல்லாம் இருக்கு..

டிசம்பர் மாசம் ஒண்ணாம் தேதி கிராமத்துல ஒரு தெருவுல தண்ணி வராம இருந்து மறுபடியும் சரி பண்ணினாங்களாம்.. அந்த செய்தியும் அங்க இருக்குங்க...


ஊரில் உள்ள தெருக்கள் எல்லாம் அவ்வளவு சுத்தமா இருக்கு... பள்ளிக்கூடங்களெல்லாம் அவ்வளவு அழகா இருக்கு.. இதெல்லாம் பார்க்க ஒரு மகிழ்ச்சிதான்..

ஊருக்குள்ள எவ்வளவு ஒற்றுமையிருந்தால் இவ்வளவும் நடந்திருக்கும் !!

இன்னும் பெரிய ஆச்சரியம் எதிலுமே ஊராட்சித் தலைவர் பெயரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சி பெயரும் இல்லை..

ஊருக்குள்ள அரசியல் கட்சிகளை நுழைய விடாமல் இருந்தால் ஊர் ஒற்றுமையாகவும் இருக்கும் .. ஊரும் நல்ல முன்னேற்றம் அடையும்.



காசாங்காடு கிராம மக்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

உங்களைப் போல நாங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்..