Tuesday, May 11, 2010
98. மாநகர மேயருடன் சீமாச்சு...
Tuesday, April 27, 2010
97. சீமாச்சுவின் தாம்பூலம் - 28 ஏப்ரல் 2010

நான் படித்த எங்கள் ஊர் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளியில் இதுபோல நிறைய ஆசிரியர்கள் மாணவர்க்ளின் முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தார்கள்.. எனக்கு அமைந்த ஒவ்வொரு ஆசிரியருமே நான் பெற்று வந்த வரம் தான்.
Monday, April 26, 2010
96. உலகம் பல விதம்..
அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை
அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு
அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்
புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்; அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்
பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்; அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்
ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்
மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது
சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது
சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு; அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு
மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்
எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்
இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்
உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்; ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்
நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்
ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்
அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது
அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்
காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்
ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்
அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்
கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்
மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்
வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான்
இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை
ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்
மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..
உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை
நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்
பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்
மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்
மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்
தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது
பழமொழியில் உமி கிடையாது
கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்; மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்
சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும்
உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்
ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்
ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்
தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை
குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை
ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்
ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை
மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்
ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை
திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும் ஒரு விலாங்கும் இருக்கும்
கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார்
பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள் ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்
காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்
பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்
கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா
சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?
உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையத்துல போயி உடும்பு பிடிப்பானா ?
உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்
சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்
பழைய இஞ்சியில் காரம் அதிகம்
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்
பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்
மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்
சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம் விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்
தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்
போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்
தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது
பின் குறிப்பு: மேலேயுள்ளவை பழமொழிகளின் தொகுப்பு மட்டுமே. அவற்றில் என் கருத்தென்று எதுவும் இல்லை. குறிப்பாக, மனைவி, திருமணம், மங்கையர் ஆகியவற்றின் மேல் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை
Wednesday, April 14, 2010
95. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு..
சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனபோது அவர் வீட்டில் ஒரு பெரிய அட்டைப்பெட்டி முழுக்கத் தமிழ்ப்பட டிவிடிக்கள் இருந்தன. அசுவாரசியமாகக் குடைந்து கொண்டிருந்தபோது சிக்கினார் மீண்டும் ஸ்வர்ணமால்யா. படத்தின் பெயர் "சாரி எனக்குக் கல்யாணமாயிடிச்சி". ஏடாகூடமான படமாயிருக்கும் போலருக்கே என்று வீட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு பார்த்தால் (ஹையா.. நானும் உலக சினிமாவெல்லாம் பார்க்கிறேனே... அமெரிக்காவில் உட்கார்ந்து பார்த்தால் எல்லா தமிழ்ப்படமும் இங்கு உலகசினிமாதான்..) ஒரு முழுநீள பாக்யராஜ் படம் போலத்தான் இருந்தது. ஸ்வர்ணமால்யா படு டீஸண்டாக நடித்திருந்தார். பாண்டு, எம். எஸ் பாஸ்கர் இன்னும் ஒரு நடிகர் மூவருக்கும் சபலிஸ்டான கேரக்டர்கள். கதை சாதாரணமான கதை தான். குழந்தைகள் எல்லாம் தூங்கின பிறகு மனைவியுடன் திட்டு வாங்காமல் தைரியமாகப் பார்க்கலாம்..

Tuesday, April 06, 2010
94. உங்க கிட்டே ஒரு ரூபாய்/டாலர் இருக்குமா?

சில சமயங்கள்ல மக்கள் விதவிதமா யோசிக்கிற விஷயம் வியப்பா இருக்கு. ஒரே சிச்சுவேஷன், இரண்டு பேரு இரண்டு விதமாச் செஞ்சது நியாயமாவேப் பட்டது. உங்களுக்கும் இந்த விதமான சூழ்நிலை (கடன் கேட்ட போதோ, அல்லது கொடுக்கும் போதோ அல்லது மறுக்க முடியாம மாட்டிக்கிட்ட போதோ) இருந்திருந்தால் சொல்லுங்க..Wednesday, March 24, 2010
93. இந்த அனுபவம் தனியொரு விதம் ..
- தன்னை உயர்த்திய பள்ளியையும் ஆசிரியரையும் பெருமையாய் நினைக்கும் மாணவரையும்,
- தன்னலம் கருதாத ஆசிரியரையும்,
- தன் மாணவனைப் பெருமையாக மடியில் ஏந்திய பள்ளியும்,
- தன் மகன் அவரின் தந்தை பெயரில் செய்த நற்கொடையைப் பெருமையாகத் திறந்து வைக்கும் தாயையும்,
- எல்லாரும் வணங்கியே பார்த்திருந்த தன் தந்தை, ஒரு பெரிய வங்கியின் CEO ஆன தன் தந்தையே பொதுமேடையில் காலில் விழுந்து பெருமையுடன் வணங்கும் ஒரு எளிமையான ஆசிரியரைப் பார்த்த மகளும், மகனும்..
- ”இவரெல்லாம் நம்ம ஸ்கூலில் படிச்சாரா.. நாமளும் நல்லாப் படிச்சா இவர் மாதிரி கோட் போட்டுக்கிட்டு வந்து நம்ம வாத்யாரைப் பார்க்கலாமா” என ஆச்சரியம் பொங்க பார்க்கும் இந்நாள் மாணவர்களும்..
![]() |
| From DBTR-Seetharaman-Visit082009 |
Tuesday, March 02, 2010
92. நித்யானந்தர், வைகோ, மருத்துவர், சீமாச்சு,,,

சீமாச்சு.. Monday, February 22, 2010
91. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு



ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(
இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.
டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.
அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை
Tuesday, February 16, 2010
90. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு
oOo oOo
பள்ளி நாட்களின் சோகம் என்று சொன்னால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியர் இறப்பது ஒன்று. ஜவஹர் சென்றிருந்த போது வியாழக்கிழமை அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஆசிரியர் ரவிக்குமார் (வயது 52) இரண்டு நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர மாரடைப்பால் மறைந்துவிட்டார்.. எங்கள் பள்ளியின் மேல்நிலை வகுப்புக்களுக்கான பொருளியல் ஆசிரியர் அவர். மாணவர்களிடையே (அதுவும் III Group மாணவர்களிடையே) நல்ல ஆசிரியர் என்று பெயரெடுப்பது ரொம்ப கடினம். பத்தாவது வகுப்பில் மார்க் குறைந்து மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களின் பெரும்பான்மையர் பொருளியல் வகுப்பில் சேருவர். அவர்களிடையே நல்ல பெயர் எடுக்க வேண்டிய நிலை என்பது மிகக் கடினம். அந்த மாணவர்களிடையே பாசமாகவும், ந்ல்ல ஒரு ஆசிரியராக்வும் போதித்து நல்லன்பைப் பெற்ற திரு ரவிக்குமார் இப்பொழுது எங்களிடையே இல்லை என்பது மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது. அவரது ஒரே மகளுக்கு முதல் குழந்தை பிறந்து இன்றுடன் 10 நாட்கள் தான் ஆகிறது. பிறப்ப்பையும் இறப்பையும் ஒரு சேர சந்தித்த் அந்த ஆசிரியர் குடும்பம் மன நிம்மதியை விரைவில் அடைய பிரார்த்திக்கிறேன்..
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் திரு ரவிக்குமாரின் மாணவர்கள் மிகவும் வருத்த்த்திலிருக்கிறார்கள்,. இந்த சொந்த சோகத்தையும் மீறி அவர்கள் தேர்வில் நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண் பெற்று அந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பைப் நிறைவு செய்யவேண்டும்..

இதேபோல் 1980 ஆம் ஆண்டு நான் பள்ளியில் படிக்கும் போது எனக்கு வேதியியல் போதித்த் திரு மஹாதேவய்யர் என்ற ஆசிரியர் கல்வியாண்டின் இடையில் டிசம்பர் மாதம் 3ம் தேதி காலமானார். எனக்கு ரொம்ப சோகமாக இருந்தது. அவர் இறப்பு செய்தி கேள்விப்பட்டதில் இருந்து 3 நாட்கள் அவர் வீட்டு வாசலில் தான் நாங்கள் 500 மாணவர்களும் இருந்தோம்.. அவர் உடலை இடுகாட்டுக்குக் கொண்டு சென்ற போது பெய்த் மெல்லிய மழைத் தூறலில் நாங்கள் எல்லா மாணவர்களும் அவருடனேயே சென்று அவரை வழியனுப்பி வைத்தது மற்க்க முடியாதத்து..
இந்த பாதிப்பு எவ்வளவு நாட்கள் இருந்ததென்றால்.. நான் படித்த இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு நான் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்ட்டம் (படங்கள் ஜவஹர் பதிவில்) கட்டிக் கொடுத்த் போது கட்டடத்துக்கு பெயர் வைக்கும் நேரம் வந்த போது நான் எழுதிக்கொடுத்த பெயர் "ஸ்ரீ மஹாதேவய்யர் நினைவரங்கம்" என்பது. அந்தக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அவரது மகனை அழைத்து கௌரவித்தது மறக்கவியலாதது. தன் கணவர் மறைந்து 22 வ்ருடங்கள் கழித்து (எல்லோரும் அவரை மறந்து விட்டார்களோயென்று நினைத்த பொழுது) அவர் பெயரில் அவர் மாணவர் ஒரு கட்டடம் திறந்து வைத்தது நினைத்து அவ்ரது மனைவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி..
oOo oOo
வாலண்டைன்ஸ் நாளன்று ஒரு மயிலாடுதுறை "மாப்பிள்ளை" நண்பர் வீட்டில் பழமைபேசி ஐயாவுடன் விருந்து நடந்த்து. ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து உபசரித்த நண்பரின் குடுமப்த்தினரின் விருந்தோம்பல் மறக்க முடியாதது. நண்பர் ஒரு மருத்துவர். நரம்பியல் நிபுணர். அவரே அவர் கைப்பட சில பதார்த்தங்கள் செய்து சுடச்சுட பரிமாறினது மறக்க் முடியாத்தது..
எனக்க்கு சுரேஷ் என்ற சின்னாளப்பட்டிக்கார நண்பர் ஒருவர் உண்டு.. இரவு எத்த்னை மணிக்கு அவர் வீட்டுக் கதவு தட்டினாலும்.. அவர் கேட்கும் முதல் வார்த்தை "சாப்பிட்டியா மச்சி.. ஏதாவது சாப்பிடறியா?" என்பது தான். "பசிக்குது என்று சொல்லிவிட்டால்" உடனே அடுப்பு மூட்டி சமைத்துப் போட்டு பக்கத்தில் இருந்து பரிமாறிவிட்டுத் தான் அடுத்த காரியமே..
மயிலாடுதுறையாகட்டும், சவுதி அரேபியாவாகட்டும்.. நியூ ஜெர்ஸியோ, சார்லெட்டோ எந்த இடமாக இருந்தாலும் என்னைச் சுற்றி நல்ல நண்பர்களைத் தந்த அந்த இறைவனுக்கு நன்றி..
எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு !!
Wednesday, January 20, 2010
89. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு
எங்கள் பள்ளிக்கூடத்தைப் (DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை) பொறுத்தவரையில் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டுக்கான முக்கியப்பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளேன். கடந்த 108 வ்ருடங்களில் (எங்க ஸ்கூலுக்கான வயசுங்கோவ்) எங்க ஸ்கூலில் படித்துச் சென்ற முன்னாள் மாணவர்களையும் அவர்தம் சந்ததிகளையும் தொடர்புகொண்டு அவர்களிடமிருந்த நிதிபெற்று எங்கள் ஸ்கூலை பெரிய கட்டமைப்பு வசதிகளுடன் கட்ட வேண்டிய பொறுப்பு எனக்கும் எங்கள் நிர்வாகக் குழுவினருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் என் முயற்சிகளனைத்தும் இதைச் சார்ந்தே அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் பேசுவதே ரொம்ப சுவாரஸ்யமானதாக இருக்கிறது. "என் கூட 1980-ல 9A படிச்ச சரசு இப்ப எங்க இருக்காங்க தெரியுமா சார்?" என்ற முன்னாள் தோழிகள் பற்றிய ஆட்டோகிராப்தனமான கேள்விகளை, முன் வழுக்கை விழுந்து இரண்டு மூன்று குழந்தைகளுடன் இருக்கும் 30-40 வயது முன்னாள் மாணவர்களிடமிருந்து கேட்கும் போது.. என்னதான் ஃபோனில் பேசினாலும் அவர்களின் கண்களில் தெறிக்கும் பளிச்..பளிச் களைக் உணரமுடிகிறது.. இன்னும் சுவாரசியங்கள் விரியும் கதைகள் கிடைக்கலாம்.. எல்லாவற்றையும் சொன்னவர்களும் ரசிக்கும் விதமாக "தாம்பூலத்தில்" எழுதலாமென்றிருக்கிறேன்..
இப்போதைக்கு என் பதிவைப் படிக்க இன்னும் 10 சிறப்பு வாசகிகள் (நம்புங்க சார்..) கெடச்சிருக்காங்க...

oOo oOo
மயிலாடுதுறையிலிருக்கும் போது வருஷா வருஷம் எதிர்பார்க்கிற திருவிழான்னா.. ஐப்பசி மாதத்து கடைமுகமும் தேரும் தான். ச்சின்னவயசில இந்த 10 நாட்களும் ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். எங்க ஊரு மகாதானத்தெருவில் இரண்டு பக்கமும் கிட்டத்தட்ட அரைக்கிலோமீட்டருக்கு திருவிழாக்கடைகள் பரப்பியிருக்கும்.. எல்லா விதமான விளையாட்டுச் சாமான்களும் ("எதையெடுத்தாலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்" வகையறாக்கள்.. நான் சொல்வது 1980-களில்) கிடைக்கும்.. அப்பொழுது ஆசைப்பட்டதென்றால் ஒரு பக்கட் தண்ணீரில் தானாக ஓடும் ஒருச் சின்னக் கப்பல் (ஓடம்?) போன்ற பொம்மைதான்.. சிவப்பும் கருப்பும் கலந்த திமுக கொடி கலரில் இருக்க்ம்.. தகரத்தில் செய்யப்பட்டிருக்கும்.. பின்னால் ஒரு சூடம் கொளுத்தி வைக்கவேண்டும்.. கொஞ்சம் மண்ணெண்ணை ஊத்திவிட்டால்.. கப்பல் வாயகன்ற பாத்திரத்திலுள்ள தண்ணீரிலோ அல்லது பக்கெட்டிலோ "டுட்..டுட்.." என்ற சத்தத்துடன் ஓடும்.. அந்தக் கப்பல் அப்பொழுதெல்லாம் 2 ரூபாய்தான்.. அப்போதைய என் பொருளாதாரத்துக்கு அது ரொம்பவே அதிகம்..
அப்பொழுதெல்லாம் அந்த ஆப்பிள் பலூன் 30 காசுதான்.. வாங்க ஆசை மட்டுமிருக்கும்.. எப்பொழுதோ அப்பாவிடம் கேட்டது நினனவிருக்கு.. இந்த முறை ஊருக்குப் போனபோது (30 வருஷம் கழித்து)... ஆசையாக ஆப்பிள் பலூன் ஒன்று எங்கிருந்தோ வாங்கி வந்து கொடுத்தார்.. சிரிப்பு வந்தது.. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்று தெரியவில்லை.. கொஞ்ச நேரம் என் சைக்கிளில் கட்டி வைத்திருந்துவிட்டு ஒரு குழந்தையிடம் கொடுத்துவிட்டேன்..
சில சமயம் எப்பொழுதோ கேட்ட அல்லது ஏங்கிய சில விஷயங்கள் ரொம்ப காலதாமதமாக நட்க்கிறது..
இது போல் 1980 களில் எனக்கொரு முக்கியமான தேவையிருந்தது.. ஒரு என்னுடைய இந்தத் தேவையினால்..பலன் என்னவோ எங்க ஊரு சாமிங்களுக்குத்தான் ..மூன்று வருடங்களுக்கு என்க்கு இது தான் பிரார்த்தனை.. தினமும் கோவிலுக்குச் சென்று விடுவேன்... சிலசமயம் பல கோயில்களுக்கு.. காவிரிக்கரை மங்கள் வினாயகர் பிள்ளையார், மலைக்கோவில் முருகன், ஐயப்பன், சேந்தங்குடி துர்க்கையம்மன், வள்ளலார் கோவில் மேதா தக்ஷிணாமூர்த்தி, திருவிழந்தூர் ஆஞ்சநேயர் எல்லார் கிட்டேயும் அப்ளிகேஷன் போட்டிருந்தேன்.. அருணா சூடம் வில்லைகள்.. நடராஜ் கற்பூரக் கட்டிகள்.. வாங்கி எல்லாருக்கும் ஏத்தியிருக்கேன்.. இந்த எல்லா சாமிகளும் எனக்கு ரொம்ப கடன் பட்டிருக்காங்க.. ஏன்னா.. என் பிரார்த்தனனகளையெல்லாம் கேட்டுவிட்டு .. என் ஸ்லோகமெல்லாம், சூடமெல்லாம் வாங்கிக்கிட்டு அப்பொழுதெல்லாம் ஒண்ணுமே செய்யலை.. "சீமாச்சு.. வேற் ஏதாவது வேலையிருந்தாப் போயிப் பாரு" ன்னு வெரட்டி விட்டுட்டாங்க....
30 வருஷம் கழித்து எல்லா சாமிக்கும் இப்போத்தான் என் பிரார்த்தனை நினைவுக்கு வந்த மாதிரி.. எல்லாம் சேர்ந்து இப்போ "அதை நிறைவேற்றவா" என்று காலிங் பெல் அடிக்கிறாங்கள்.. அதெல்லாம் ஒண்ணு வேணாம்-னு சாமிக்கிட்டே சொல்லி அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சி..
ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சுது.. அப்பா வாங்கிக்கொடுத்த ஆப்பிள் பலூனுக்கும் ஆண்டவன் முருகன் வேணுமான்னு கேட்ட பழைய பிரார்த்தனைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.. ஆப்பிள் பலூன்களுக்கு வயசாவதில்லை...
oOo oOo
சமீபத்தில் ஒரு அறுபது வயது பெரியவரைச் சந்தித்தேன்.. ஒரு பார்ட்டியில்.. அவர் பீர் உட்பட எந்த விதமான மதுபானமும் அருந்துவதில்லையென்று சொன்னார்.. அவர் சொன்ன காரணம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்தது..
அவர் காலேஜ் படிக்கும் நாட்களில்... ஒரு நாள் வர் காலேஜ் கிளம்பிக் கொண்டிருந்த போது அவரின் அம்மா சிகரெட், மது பற்றிய கேட்டார்களாம்.. தன் மகன் எங்கே அதெல்லாம் ஆரம்பித்து விடப்போகிறானோ என்ற் ஒரு கவலையில் அந்தப் பேச்சு வந்ததாம்.. அப்பொழுது அவர் சொன்னாராம் "இன்னும் அதெல்லாம் தொடவேண்டிய தேவை எனக்கு வரவில்லை.. நிச்சயம் வராதென்று நம்புகிறேன்.." என்று சொன்னாராம்.. பெரிய்ய வாக்குறுதியெல்லாம் இல்லை.. அது ஒரு சாதாரண் உரையாடல் தான்..
அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்புவதற்குள் ஏதோ ஒரு விபத்தில் அவர் அம்மா கோமாவுக்குச் சென்று சில நாட்களில் இறந்து விட்டார்..
அம்மாவுடன் தனக்கு ஏற்பட்ட அந்தக் கடைசி உரையாடலின் நினைவாக அவர் இன்னும் (கிட்டத்தட்ட 45 வருடங்களாக) சிகரெட், மது இரண்டும் தொடுவதில்லையாம்..
அவர் விவரித்த விதம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.. அம்மாவுடனான.. அவரின் அன்பும் அதன் மேலான் மரியாதையும் புரிந்தது..
நானும் ஒரு "அம்மா செல்லம்.. அம்மா பையன் தான்.."
oOo
ஆதவன் படம் நன்றாக இருந்தது.. ஊரிலேயே (கோவையில் செண்ட்ரல் தியேட்டரில்) ஒரு முறை பார்த்துவிட்டிருந்தாலும் இங்கு வந்து வீட்டிலும் குடும்பத்துடன் பார்த்தேன்..
நயன் தாரா "Its ....OK" என்று முகத்தைச் சுழட்டிச் சொல்லுமிடங்களில் ரீவைண்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்ததில்ல் தங்கமணி முகத்தில் அனல் பறந்தது...
இதுக்கெல்லாம் பயப்படுற் ஆளாயென்ன நாம?





