Monday, May 14, 2007

45. ரொம்பக் காஸ்ட்லி முத்தங்கள் !!


தமிழகத்தில் இந்த வருடம் +2 தேர்வுகளில் ரம்யா, ரூபிகா என்ற மாணவிகள் முதலிடம் வந்துள்ளனர்.

ரம்யா 1200 க்கு 1182 மதிப்பெண்களும் ரூபிகா 1180 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.

இந்த மதிப்பெண்கள் எடுத்த்தின் பின்னால் உள்ள உழைப்புதான் எத்தனை !!

நானும் இதுபோல் எடுக்க வேண்டும் என்று முயற்சித்து ஒரு சில மதிப்பெண்களில் இந்த முதல் ரேங்க்கைக் கோட்டை விட்டவன் என்ற முறையில் அதன் பின்னாலுள்ள உழைப்பையும் தியாகத்தையும் உணர முடிகிறது...





எத்தனை தூக்கமில்லாத இரவுகள்..

எத்தனைத் தியாகங்கள்.. அந்தந்த வயசுக்கு மீறிய தியாகங்கள்.. சாதாரண் ஆசைகளைக் கூட 'தேர்வுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம்' என்று ஒத்திப்போடுவதற்கு முன் எத்தனை ஏக்கங்களைப் புறந்தள்ள வேண்டியிருந்திருக்கும்.

எல்லாம் எதற்காக.. இந்த ஓரு தருணமும்... அந்த பெற்றோரின் பெருமித முத்தத்திற்காகவும் தானே !!!

நன்றாக படித்து இன்று வெற்றி வாகை சூடியுள்ள ரம்யாவுக்கும் ரூபிகாவிற்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள் !!

என்னைப் போன்று.. குறைவில்லாமல் உழைத்து, இந்த முதலிரண்டு இடங்களைக் கோட்டைவிட்ட அனனத்து மாணவ நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் !!!

நன்றாகப் படியுங்கள்.. உங்களின் தேவை நாட்டிற்குத் தேவை !! உங்களைப் போன்றவர்களின் எதிர் காலத்தில் தான் நம் நாட்ட்டின் எதிர்காலமும் உள்ளது...