Tuesday, November 28, 2006

37. தமிழ் C தெரியுமா உங்களுக்கு...?

தேன்கூடு நடத்திய போட்டியில் நண்பர் சிறில் அலெக்ஸ் முதல் பரிசு பெற்றிருக்கிறார்..


அவர் கதையை முதல் முறை படித்துச் சிரித்து பின்னர் என் மனைவிக்கும் வாய் விட்டுப் படித்துக் காட்டினேன்.

நன்றாக வந்திருந்தது.. வாழ்த்துகள் சிறில்.

பக்கத்தில் நின்றிருந்த என் 4 வயது மகள் திடீரென்று

"Daddy.. Now I know how to put Tamil C"


4 வயசு தானே.. இப்பத்தான் 1.2..3.. 100 வரையும் .. ABCD யும் எழுதுகிறாள்..


அதற்கே தடுமாறுகிறது இதில் தமிழ் C யாம்.. "சி" எல்லாம் எப்படி போடுவாள்... எனக்கே சந்தேகம் தான்...


"எங்கே போடு பார்ப்போம்?"




என் தோளைக் கட்டிக் கொண்டு.. அவள் போட்டது..



ஆங்கில C மேலேயும் கீழேயும் வட்டங்களுடன்..



சிறிலின் பக்கத்திலுள்ள தேன் தலைப்பிலிருந்த தமிழ் இரட்டைக் கொம்பை.. அவள் தமிழ் C என்று புரிந்து கொண்டு விட்டாள்..




Saturday, November 25, 2006

36. இரண்டு வருஷத்துக்கு அப்புறம்....??!!

சென்ற வருடம் நான் புதியதாக 19 அங்குல தட்டை முகப்பு கணினித் திரை (ஹிஹி.. Flat Panel monitor... சுருக்கமாக த.மு.க.திரை) வாங்கிய பின்பு என்னுடைய பழைய 17 அங்குல குஷ்பூ மானிட்டரை basement-ல் சும்மா போட்டு வைத்திருந்தேன். இது போன்று இன்னும் ரெண்டு பழைய கம்ப்யூட்டர்களும் கீழே கிடக்கின்றன.

நண்பர் ஒருவர் கம்ப்யூட்டர் திரை சின்னதாக இருப்பதாக புலம்பிக்கொண்டிருந்த போது நைசாகப் பேசி நம்ம பழைய 17 அங்குல மானிட்டரை அவரிடம் தள்ளி விட்டு விட்டேன். அப்பாடா ஒரு குப்பை ஒழிந்தது என்று நிம்மதியாக இருந்தது.. இது நடந்தது 6 மாதங்களுக்கு முன்பு.

இன்னிக்கு அந்த நண்பர் வாயெல்லாம் பல்லாக வீட்டுக்கு வந்திருந்தார். ThanksGiving Day Sale-ல் இரவு ஒரு மணிக்கு கடை வாசலில் தவமிருந்து சகாய விலைக்கு ஒரு 20 அங்குல த.மு.க.திரை வாங்கி விட்டாராம்.. உண்மையாகவே ஒரு பெரிய புன்னகையுடனும் சிவந்த கண்களுடனும் (இரவெல்லாம் கண் விழித்திருக்கிறாரே..) வீட்டுக்கு வந்தார்.. " உங்க பழைய மானிட்டரை நீங்களே எடுத்துக்குங்க.. உங்க பாடு.. என் வீட்டில் இடமில்லை " என்று வம்பு பண்ண வந்தவருக்கு.. நல்ல சாப்பாடு போட்டு.. திமிரு படமும் போட்டுக் காட்டி "பழைய மானிட்டரை என்ன வேண்டுமானலும் பண்ணு ராஜா.. என் கண்ணுல மட்டும் காட்டீடாதே.." என்று சமாதானப்படுத்தி அனுப்பு வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...

எலக்ட்ரானிக் குப்பையெல்லாம் என்ன பண்ணுவதென்று அமெரிக்காவே திணறிக்கிட்டிருக்கு. இந்த மானிட்டர் மற்றும் கம்ப்யூட்டர் பொட்டி மாதிரியான landfill எல்லாம் நிலத்தடி நீரில் வேதி விஷங்களைக் கலந்துடும் என்று பயப்படுகிறார்கள். இந்த மானிட்டர் மாதிரியான குப்பைகளையெல்லாம் கப்பலில் ஏற்றி சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பி அங்கு அவர்கள் அதை பிரித்தெடுத்து ஒரு வழி பண்ணுகிறார்கள். இந்தக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் இளந்தொழிலாளிகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதனால் வரும் தொல்லைகளெல்லாம் இலவச இணைப்பு மாதிரி.. இதெல்லாம் பத்திப் படிக்கும் போது தான்...

நம்ம தமிழ்நாடு முதல்வரின் புரட்சிகரமான திட்டமான இலவச டீ.வி நினைவுக்கு வந்தது. டெல்லி கம்பெனிகளிடமிருந்து 25 லட்சம் (ஆமாம் 25 லட்சம்..) டீவிக்கள் ஆர்டர் பண்ணப் போகிறார்களாம்.. நமது தமிழர்களுக்கு டெல்லியிலிருந்து டேப்ரிகார்டர் வாங்கிய அனுபவமெல்லாம் மறந்து விட்டது போலும். "இது டெல்லி செட்டு சார்.. இது வரைக்கும் (ஒண்ணுமில்லே ஒரு ரெண்டு வாரம் தான்...) உழைச்சதே பெரிய விஷயம்.. தலையைச் சுத்து வீசியெறிஞ்சுட்டு வேற ஏதாவது நல்லதா வாங்குங்க...." என்று இளப்பமாக நம்மையும் நம்ம "National" டேப்ரிகார்டரையும் ஒரு மாதிரியாகப் பார்த்த பெரிய மெக்கானிக்கெல்ல்லாம் உண்டு...

அவனுக்கு எங்க தெரியப் போகுது...ராணிமுத்து-மாதப் பதிப்பில் அந்த "தமிழ்நாட்டு சுடோகு" மாதிரியான கஷ்டமான கணிதப் புதிரை விடுவித்து.. "இது செங்கல்லா இருக்கக்கூடாதே" யென்ற ஆயிரம் பிரார்த்தனைகளுடன்.. போஸ்ட் மேனிடம் 250 ரூபா (தபால் செலவு மட்டும் தான்..) வி.பி.பி (யாரு சார் கண்டுபிடிச்சா இதை..?) கட்டி வாங்கி .. ரெண்டே வாரத்துக்குள் உயிரை விட்ட டேப்ரிகார்டர் அது..

இது போதாதென்று.. என் அக்கா வேலைக்குப் போன புதிதில் "ஃபாரின் செட்" என்று சொல்லி 1000 ரூபாய்க்கு சிவப்பு கலரில்..ஒரு டூ-இன் - ஒன் "டெல்லி செட்டை" வாங்கி வந்தார்கள்.. ரெண்டு நாள் அது பாடியது என்று கூட சொல்ல முடியாது.. அதில் கேட்ட பாட்டெல்லாம் உண்மையில் பக்கத்து வீட்டு ரேடியோவில் பாடியதோ என்ற சந்தேகம் கூட எனக்கு ரொம்ப நாள் இருந்தது.. ரொம்ப நாள் அது பாடவில்லை.. என் அக்கா மனம் புண்படக்கூடாதென்று அப்பா தான் அதுக்கு 10 ரூபாய் (தண்டம்) விலையில் வாங்கிய ஒரு சின்ன டர்க்கி டவலைப் போர்த்தி டீபாய் மேல் வைத்திருந்தார்கள்...



இப்போ இதெல்லாம் போய 25 லட்சம் (ஆமா.. 25 லட்சம்) டெல்லி டீவீக்களாம்.. என்னதான்.. அது பாடும்.. ஆடும்.. சன் டீவீ மட்டுமாவது காட்டும் என்ற நம்பிக்கயெல்லாம் இருந்தாலும்.. ஒரு வருஷம் டர்க்கி டவலெல்லாம் போத்தி வெச்சுருந்தாலும்...ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் அது நிச்சயம் குப்பை தான்... மக்களுக்கும் அது பழகிப் போயிடும்..




எல்லாரும் குப்பையில சகட்டு மேனிக்குப் போடப்போற (நாமதான் எதையும் proper ஆ dispose செய்யக் கத்துக்கிறதில்லையே..) இந்த டீவிக்க்களால நமது சுற்றுப்புறமும் ..நிலத்தடி நீரும் எப்படி யெல்லாம் பாதிக்கப் படப்போகுதோ.... அதுக்கும் முன்னாடி.. குப்பையில கெடக்குற டீவியை வெச்சு வெளையாடறேன்னு சொல்லி எத்தனை புள்ளங்க.. (எதிர்கால எலக்ட்ரானிக் இஞ்சினீயர்கள்...) ஷாக் அடிச்சு அவதிப் படப் போறாங்களோ..


ஆண்டவனே.. என் நாட்டைக் காப்பாற்று...என்று வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை...

பழைய கம்ப்யூட்டர் குப்பைகளை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பதை விளக்கும் ஒரு உரல்: இங்கே..

Tuesday, November 14, 2006

35. ஜக்கம்மா நல்ல சேதி சொல்றா.....



சாமியோவ்... அம்மோவ்..

நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..

ஊருல கூடிய சீக்கிரம் ஒரு நல்ல காரியம் நடக்கப் போவுது..

எங்க ஊரைச் சேர்ந்த (மயிலாடுதுறை) ஒரு பிரபலமான வலைப்பதிவருக்கு

தை பிறந்தவுடன் வழி பிறக்கப் போகுதாம்...

எல்லாம் முடிவாயிடிச்சாம். ...

இனிமேல் கடற்கரையில மணலை எண்ணிக்கிட்டுத் தனியா நடக்க வேண்டாமாம்.. கூட துணைக்கு அவுங்களும் வருவாங்களாமாம்....

எங்க இயக்கக் கொள்கைப் படி வரதட்சணையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டாராம்!!!



ஆண்டவன் அருளில் கூடிய சீக்கிரம் பத்திரிக்கை வச்சிடுவாராம்..

அய்யா... அம்மா எல்லாரும் மாயவரத்துக்கு அவசியம் வரணுமுங்கோ....


ராஜா.. என் வாழ்த்தே முதல் வாழ்த்தாக இருக்கட்டும்....
எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ செல்வ முத்துக் குமரசுவாமி அருளுவார்...

உன் மனசுக்கும்.. தர்மங்களுக்கும் பெரிய வாழ்வு கிடைக்கும் ராஜா.....

வாழ்த்துக்கள்!!!!

Sunday, October 15, 2006

33. ஏங்க இப்படியெல்லாம் இருக்காங்க...


சில நாட்களாக ஒரு புதிய இடத்தில் ஒரு புதிய வேலை...

பழைய வேலையை விட்டாச்சு.. ஒரு வருஷத்துக்கும் கொஞ்சம் மேல குப்பை கொட்டியாச்சு.. புதிய வேலை புதிய இடத்தில்.. வேலையைப் பத்தி அப்புறம் பார்ப்போம்..



இன்னும் குடும்பம் இங்கு வந்து சேரவில்லை. வர கொஞ்சம் காலமாகலாம்.. புதிய இடத்தில் தனிக்குடித்தனம் தான் இன்னும் 4 மாதங்களுக்கு.. அப்பப்ப வார இறுதியில் வீட்டுக்குப் போய் வரலாம்.. வீட்டுக்குப் போவதை விட தனிக்குடித்தனத்தில் உட்கார்ந்து படித்தால் புது வேலையில் இன்னும் கொஞ்சம் திறமை காட்டலாம்..முன்னேறலாமென்று இந்த வாரம் போகவில்லை..

oOo

அமெரிக்கா வந்து.. 13 வருடங்களுக்கு மேல ஆகிவிட்டதால்.. இப்பொழுது புதிதாக வருபவர்களை பாசமுடன் நேசித்து வழி நடத்தும் பொறுப்பு இருப்பதாக நமக்குள்ளேயே ஒரு நினைப்பு.. சமயத்தில் அது தப்பாகப் போவதும் உண்டு.. வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஏதாவது புதிதாகக் கற்றுக் கொள்வதற்கே என்று நினைப்பதால்.. தவறுகள் எல்லாம் ஆண்டவன் அருளில் நமக்கு ஏணிப்படிகள் தான்..

சென்ற வாரம் மதியம் ஒரு இந்திய உணவகத்துக்குச் சாப்பிடப் போனேன். தட்டை வைத்துக் கொண்டு தனியாக உட்கார வேண்டாமேயென்று தனியாக அமர்ந்திருந்த ஒரு இந்திய இளைஞன் (25 வயது இருக்கும்.. மராட்டியர்) என்பவர் அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே சாப்பிட்டேன்.. என் கம்பெனிக்கு அருகில் உள்ள இன்னொரு கம்பெனியில் வேலை செய்கிறாராம்.. இந்தமாதிரி இந்திய இளைஞர்கள் வந்து அமெரிக்காவில் கலக்குவதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு தற்பெருமை உண்டு.. ஆஹா நம்ம ஊரு இளைய தலைமுறை இவ்வளவு வளர்ந்திருக்கிறதேயென்று..

அதனால்.. பரஸ்பரம் தொலைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு.. தவிரவும் ஏதாவது உதவி .. தொழில் ரீதியிலோ.. அல்லது தனிப்பட்ட முறையிலோ தேவையென்றால் தயங்காமல் அழைக்குமாறு சொல்லியிருந்தேன்..

oOo

இன்று ஞாயிற்றுக்கிழமை.. இரவு 9 மணியிருக்கும்.. அந்தத் தம்பியிடமிருந்து போன் அழைப்பு.. ஆஹா.. 'பையன் எள்ளுன்னா எண்ணெயா இருக்கானே..' அப்படின்னு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டேன்..

'அண்ணே உங்களுக்கு நிறைய ஃப்ரீ டயம் இருக்கா... அப்படீன்னா ஒரு தொழில் வாய்ப்பு இருக்கு.. பயன் படுத்திக்கிறீங்களா?' என்றான்..


காலர் இன்னும் உயர்ந்தது..

'பையன் தொடர்ந்து விவரிக்க விவரிக்க.. அது ஆம்வே போன்ற ஒரு Multi Level Marketing விஷயம் என்று புரிந்த்து..

'ராஜா.. ரொம்ப சந்தோஷம்.. இந்த மாதிரி விஷயமென்றால் இனிமே எனக்கு போன் பண்ணாதே.. ராஜா.. முன்னேர்ற வழியைப் பாரு' என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்..

கனத்த நெஞ்சுடன் பையனின் தொடர்பு எண்களை என் தொலைபேசியிலிருந்து அப்புறப் படுத்தினேன்.

ஏங்க இப்படியெல்லாம் இருக்காங்க?

Sunday, September 03, 2006

32. அகரம் இப்போ சிகரம் ஆச்சு...




தலை சாய்க்க இடமாயில்லை !!
தலை கோத விரலாயில்லை !!
இளங்காற்று வரவாயில்லை!!
இளைப்பாறு பரவாயில்லை!!




நம்பிக்கையே நல்லது.........................
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளதூ...............


இன்று இருமுறை கேட்டு ரசித்த பாடல்..

Tuesday, August 22, 2006

31. சிறு பிள்ளைக் குறும்புகள்....


நன்பரின் மகன் ரமணா.. மூன்று வயது தான் ஆகிறது..

நிமிடத்துக்கு நூறு விஷமம் குறைவில்லாமல் செய்வான். எப்பொழுதுமே பெரியவர்களை 'இப்ப என்ன விஷமம் செய்யப்போறானோ' என்ற ஒரு திகிலுடன் தான் வைத்திருப்பான்.

நேற்று எதுவும் அதிகம் பேசாமல் குடுகுடுவென்று ஓடிக்கொண்டிருந்த பையனை நண்பர் மனைவி சந்தேகத்துடன் துரத்தினார். வீட்டில் நிறைய விருந்தினர்கள் வேறு. அவனை கவனிக்க நேரமிருந்ததில்லை.

அதிகம் பேசாமல் ஓடியவனை மிரட்டி அருகே இழுத்து.. வாய்க்குள் விரலை விட்டால..

வாயிலிருந்து ஒரு குட்டி ஸ்படிக லிங்கம்.


நிஜமாகவே ஒரு ஸ்படிக லிங்கம்..

வந்த விருந்தினர்களெல்லாம் 'பையன் இப்பவே வாயிலிருந்து லிங்கமெல்லாம் எடுக்கிறானே... வருங்காலத்தில்.. பெரிய பாபா (பாஸ்டன் பாலாஜி இல்ல.. சத்திய ஸாயிபாபா) மாதிரி வருவானாக்கும்' என்று ஒரே பக்தியுடன் கூடிய பாராட்டு மழை...


(பையன் யாரும் கவனிக்காத போது பூஜை அறைக்குள் சென்று லிங்கத்தை வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டு இருந்திருக்கிறான்)


oOo

இதே ரமணாவின் இன்னொரு லீலை...

அபார்ட்மெண்டின் வாட்ச்மேன் பையனுக்கு 22 வயது.. இந்த வயதுக்கேயுரிய காதல் எண்ணங்கள்.. அவனின் காதல் கனவுகள் பற்றி வந்தவர்களுடன் எப்பொழுதோ கதைத்திருக்கிறார் நண்பரின் மனைவி.. "வாட்ச்மேன் பையன் 'அனிதா' ன்னு யாரையோ லவ் பண்ணுகிறானாம்.. அதனால் பெரியதாக A என்று போட்ட டாலர் வைத்து செயின் போட்டிருக்கிறான் கழுத்தில்" என்று பேசிக்கொண்டிருந்திருக்கிறார்..

இதெல்லாம் முடிந்து ஒரு நாள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த ரமணாவை வாட்ச் மேன் பையன் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அவன் செயினை பிடித்து இழுத்து.. டாலரை பிடித்து இழுத்து விளையாடிய குழந்தை சொன்னது..


'A for..'

'A for...'

'A for ... Anitha'

oOo

என் இளைய மகளின் (சூர்யா) நான்காவது பிறந்த நாள் சமீபத்தில் நடந்து முடிந்தது. பிறந்த நாள் பற்றி பல விதமான கற்பனைகள் அவள் மனதில் (நமக்கே இந்த வயசில் இருக்கிறதே.. )



முதல் நாள் இரவில் அவள் அம்மாவுடன் நடத்திய உரையாடல்..

'நாளைக்குத் தான் எனக்கு பர்த் டேயா?'

'ம்ம்ம்ம்'

'காலையிலே நான் தூங்கி எழுந்தவுடனேயே பர்த் டே வந்து விடுமா?;

'ம்ம்ம்ம்'

'நிறைய கிப்டெல்லாம் வாங்கித்தருவியா?'

'ம்ம்ம்ம்'

'காலையிலே எழுந்திருக்கும் போது எனக்கும் Snow White மாதிரி hair எல்லாம் long ஆ வளர்ந்திருக்குமா...?"


'!!!!!!!"

Monday, August 14, 2006

30. எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்


நேற்று என் காங்கிரஸ் நண்பரிடம் பேசி அநியாயத்தைக் கேட்க நேரிட்ட பாவத்தை இந்த காமராஜ் திரைப்பட்ம் பார்த்து தீர்த்துக் கொண்டேன்!!

காமராஜ் 1975 அக்டோபர் 2 அன்றே காலமாகி விட்டாராம். அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்திருப்பேனாயிருக்கும். காந்தி ஜெயந்தி அன்று காலமானாராகையால் பள்ளிக்கூடம் லீவு விட்டாங்களா என்னவென்று நினைவில்லை (நான் என்ன டோண்டு சாரா?- எல்லா சமீபத்தையும் நினைவு வெச்சுக்கறதுக்கு). காமராஜைப் பத்தி நான் அறிந்திருந்தது வெகு குறைவு. அவர் நினைவாக எனக்குத் தெரிந்தது அந்த மதிய உணவு மட்டுமே. அதுவும் சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளே யாதலால் என்னால் மதிய உணவுக்குப் பேர் கொடுக்க முடியவில்லை.

காலையில் 11 மணிக்கெல்லாம் வகுப்பில் உள்ள பெரிய பசங்கள் மதிய உணவு 'கிண்டுவதற்கென்று' ஸ்பெஷல் பர்மிஷனோடு அலுமினியக் கரண்டியும் கையுமாக அலைவார்கள். எப்பொழுதும் ஒரே மெனுதான். ஒரு மாதிரியாக ஒரு கோதுமை சாதம். சாப்பிட முயன்றதில்லை.

அந்தத் திட்டத்தின் பின்னாலான் ஒரு பெரிய தத்துவத்தை இத்தனை நாளும் கேள்விப் பட்டிருக்கிறேனேயொழிய உணர்ந்ததில்லை.

இந்தப் படம் பார்க்க வேண்டுமென்று இரண்டு வருடங்களாக நினைத்திருந்தாலும்... இந்த படத்தின் வினியோக உரிமை எடுத்துள்ள நம்ம விருதுநகர் முருகன் ஞானவேல் (நியூஜெர்சியில் வசிப்பவர்) என் நெருங்கிய நண்பராதலால் அவரிடமிருந்து DVD விலைக்கு வாங்கிவிட எப்பொழுதோ சொல்லி வைத்திருந்தும் ( முருகன் சார்.. அதைக் கொஞ்சம் இப்படி அனுப்பி வையுங்க சார்!!) அவரைச் சந்திக்க வாய்ப்புகிடைக்கவில்லை.

எப்படியோ படத்தின் வீடியோ கேசட் கடையில் பார்த்ததுமெ எடுத்து வந்து விட்டேன்.
ஆரம்பத்திலிருந்து ஒரே மூச்சில் பார்த்து விட நினைத்தாலும் இரண்டு சிட்டிங்கில் தான் பார்க்க முடிந்தது...

எவ்வளவு ஒரு தங்கமான மனிதர்..

"படிப்பு சொல்லிக் கொடுக்கறதுக்கு காசு வாங்கறது தாய்ப்பாலை காசுக்கு விக்கிறதுக்குச் சமம்ண்ணேன்..."

"எப்பவும் நாமளே ஜெயிச்சுக்கிட்டிருக்க முடியுமான்னேன்... அவங்களும் ஜெயிக்கட்டும்ணேன்... அது தான் ஜனநாயகம்ணேன்..."

"குழந்தைங்க.. பொய் சொல்ல மாட்டாங்கன்னேன்.."

"சுதந்திரம் வாங்கியும் இவ்வளவு வருஷங்களாகியும் ஜனங்க பட்டினியைப் போக்க முடியலையே..."

அவரின் ஒவ்வொரு வசனங்களின் பின்னால் உள்ள ஒரு தெய்வீக மனதை தரிசிக்க முடிந்தது.

அவரை.. அவரின் வெள்ளையுள்ளத்தை.. பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை...
இத்தனை நாள் அவரை பத்தி விவரமாக அறிந்து கொள்ளாமைக்கு வெட்கப் பட்டேன்..

படம் பார்க்கும் போது சில இடங்களில் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை!!

பார்த்து முடித்த உடன் மூன்று எண்ணங்கள் தோன்றின...

1. இந்தியாவுக்குச் சென்றிருக்கும் மனைவிக்குப் போன் பண்ணி ஒரு அழகான காமராஜ் படம் எடுத்து வர வேண்டும்.

2. காமராஜ் பற்றிய நல்ல புத்தகங்கள் எடுத்து வரச்சொல்ல வேண்டும் (தம்பி .. ரஜினி ராம்கி.. கொஞ்சம் வாங்கி அனுப்ப முடியுமா ராஜா..?)

3. நம்ம விருதுநகர் முருகன் சார் கிட்ட சொல்லி ஒரு 10 DVD வாங்கி எனக்குத் தெரிந்த தமிழ் இளைஞர் பட்டாளத்தை அவசியம் பார்க்கச் சொல்ல வேண்டும்.

இந்த இனிய சுதந்திர நன்னாளில் பெருந் தலைவர் காமராஜர் பற்றி அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லோரும் அவசியம் ஒரு முறை இந்தப் படத்தைப் பாருங்க.. ! காமராஜ் ஆட்சின்னா என்னன்னு புரியும்..

Saturday, August 12, 2006

29. இப்படியெல்லாமும் நடக்குது தான்!!

தமிழகத்தில் ஒரு ச்சின்ன ஊரில் உள்ள நண்பர் குடும்பத்துடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் குடும்பத்தின் நலன் கருதி ஊரும் பேரும் வெளியிட விரும்பவில்லை.


மிக ஏழ்மை நிலையில் உள்ள குடும்பம்தான். ஊரில் நண்பர் வளர்ந்து வரும் அரசியல்வாதி. (இந்திரா) காங்கிரஸ்காரர். காலையிலும் மாலையிலும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு கட்சி ஆபீஸே கதியென்று கிடப்பவர்.

நண்பரின் மனைவி காங்கிரஸ் கட்சி சார்ந்த வார்டு கவுன்சிலர். அங்கங்கே அவ்வப்பொழுது கிடைக்கும் கமிஷன் மட்டுமே வருமானம். (ஆமாம் இதில் எவ்வளவு வருமானம் வரும்? எனக்குத் தெரியாது!). கணவன், ஒரு மனைவி (அரசியல்வாதியில்லையா.. அதனால் அந்த 'ஒரு' தேவைபடுகிறது) ஒரு பையன் (இவனைப் பற்றிய சம்பவம் தான் இப்பொழுது..) மற்றும் இரண்டு பெண்கள். சொல்லத்தக்க சேமிப்புகள் என்று எதுவும் கிடையாது!!

நான் 7-8 வருடங்களாக நிதியுதவி செய்து படித்து வரும் நிறைய மாணவர்களில் இவனும் ஒருவன். இவனின் மூன்றாவது வகுப்பிலிருந்து இவனின் பள்ளிச்செலவுகள் அனனத்தும் என்னைச் சார்ந்தவை. சாதாரணமாக நன்முறையில் படிக்கும் ஒரு மாணவன். அவ்னின் மதிப்பெண்களில் எனக்கு அவ்வளவாக எதிர்பார்ப்புகள் இல்லையென்றாலும்.. அந்தக் குடும்பத்திலிருந்து ஒரு பையன் படித்து வளர்ந்து முன்னேற வேண்டுமென்பது என் ஆசை.

பையன் இந்த வருடம்தான் மெட்ரிகுலேஷனில் பத்தாவது தேர்வு எழுதியிருந்தான். சாதாரணமாக பிள்ளைகள் தேர்வு எழுதி ரிசல்ட் வந்தால் எனக்கு செய்திகள் வரும்தான். நானும் ஆர்வமாக இதெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொள்ளும் வகைதான். பையனின் தேர்வு முடிவுகள் எனக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அதனால் பேச்சினூடே விசாரிக்க வேண்டியதாகிவிட்டது.

நண்பரின் மனைவியிடம் (கவுன்சிலர் அம்மா) நடந்த உரையாடலின் ஒரு பகுதி... உரையாடலில் பையனின் பெயர் அவனின் நலம் கருதி மாற்றப்பட்டுள்ளது.

'அப்புறம் என்னங்க விசேஷம்?"

"ஒண்ணும் இல்லீங்க.. நம்ம அருணுதான் இப்படிப் பண்ணிட்டான்!!"

"ஏன் அவனுக்கு என்ன ஆச்சு..?"

"இல்லே.... இப்பத்தான் பரிட்சை எழுதியிருக்கான். இந்த வாரம்தான் மார்க்கு வரும் போலத்தெரியுது"

"அப்படியா.. எல்லாருக்கும் மார்க் வந்திருச்சி போலத்தெரியுதே.. ஏன் இவனுக்கு மட்டும் தாமதம் ஆகுது?"

"இல்லைங்க.. இவனுக்கு ஒரு பேப்பர்ல ஒரு மார்க்குல போயிட்டுது.. மறுபடியும் எழுதியிருக்கிறான்.. அதான் தாமதம்"

"அப்படியா.. எனக்குச் சொல்லவேயில்லீங்களே... நிறைய பேர் மார்க்.. பாஸ் எல்லா விவரமும் சொன்னாங்க.. இவன் விஷயம் மட்டும் நமக்கு வரவேயில்லீங்களே.. இதான் காரணமா?"

"ஆமாங்க ! வெளியில சொல்லவே வெட்கமா இருக்குங்க!! அதான் சொல்லலை.. இல்லேன்னா நானே போன் பண்ணிச் சொல்லிருப்பேனுங்களே"

"பரவாயில்லையே! அதனால என்ன? மறுபடியும் எழுதினா பாஸ் பண்ணிட்டுப் போறான்! இன்னும் நல்லாப் படிச்சிருக்கலாம்... மாமா ரொம்ப வருத்தப்பட்டாங்க-ன்னு சொல்லிடுங்க!!"

"இல்லைங்க.. இவனுக்கு ஒரு மார்க்குல போயிடிச்சின்ன உடனே பள்ளிக் கூடத்துலேருந்து டீச்சரெல்லாம் வீட்டுக்கே வந்துட்டாங்க !!"

(எனக்கு இது ஒரு ஆச்சரியமான செய்திதான்!! பையன் பெயிலானா டீச்சரெல்லாம் இப்ப வீட்டுக்கே வந்துடறாங்களா.. நாங்க படிக்கிற காலத்துல பையனோட அப்பா அம்மா வெல்லாம் தானே பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்க்கணும்?)

"அப்படீங்களா?"

"அப்புறம்.. மெட்ராஸெல்லாம் போய் டைரக்டரை எல்லாம் பாத்து ஏதாவது செய்ய முடியுமான்னெல்லாம் முயற்சி பண்ணினோம்.. நெறய செலவெல்லாம் ஆச்சு"

"அப்படீங்க்ளா?"

"இவங்க அப்பா மெட்ராஸ்ல அமைச்சர் பொன்முடியெல்லாம் வேற பாத்தாங்க.. அவர் மூலமா ஏதாவது செய்ய முடியுமான்னெல்லாம் முயற்சி பண்ணினோம்!! இவனுக்காக பண்ணாத செலவெல்லாம் இல்லீங்க!!"

"அப்படீங்களா?"

"அப்புறம் தான் இதெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரிஞ்சுது. இதெல்லாம் பண்ணியிருக்கக் கூடாதோ?"

"ஏங்க! வேஸ்ட்டுன்னுதான் தெரிஞ்சுதா? தப்புன்னெல்லாம் தெரியலையா?"

"ம்ம்ம்ம்ம்"

"நாங்களெல்லாம் படிக்கும் போது பையன் படிக்கணும்னு எங்க அப்பா அம்மாவெல்லாம் ரா முழுக்க முழிச்சிக்கிட்டு எங்களைப் படிக்க வைக்க எல்லா தியாகமும் செய்வாங்க!! அவன் பரிச்சைக்குப் படிக்கும் போது நீங்க இதெல்லாம் பண்ணின மாதிரி தெரியல.. இப்ப போய் இப்படி பண்ணினேன்னு சொல்றீங்களே?"

"இல்லீங்க.. பள்ளிக் கூடத்துல தான் அவங்க சொன்னாங்க.. மினிஸ்டரைப் பாருங்க அப்படீன்னாங்க.. அதான் செஞ்சோம்"

"இப்ப பள்ளிக்கூடத்துலயே இதெல்லாம் சொல்றாங்களா?"

"ஆமாம்.. இவனும் பாஸ் பண்ணிட்டா.. பள்ளிக்கூடம் பேரு நல்லாயிடுங்களே! அதுக்காக சொன்னாங்களா யிருக்கும்!!"

"இப்படி சொன்னாங்களே.. இதைச் செய்யலாமான்னு நீங்க யோசிச்சீங்களா? இல்ல .. என்னைத் தான் நீங்க கேட்டீங்களா?"

"இல்லீங்க.. தோணலீங்க.. பையனுக்கு ஒரு வருஷம் வேஸ்டாயிடுமோன்னு தான் இப்படி செஞ்சோம்..."

இவ்வளவு அக்கறையாயிருக்கிற நீங்கள் அவன் படிக்கும் போது அவன் பக்கத்துலயிருந்து சொல்லிக் கொடுத்து ஊக்கப் படுத்தியிருக்கலாமில்லே!!"

"ம்ம்ம்ம்ம்"

"இப்ப நீங்க செஞ்சதெல்லாம் தர்மத்தைத் தாண்டிய செயல்கள்!! தயவு செஞ்சு இனிமே இப்படியெல்லாம் செய்யாதீங்க... அப்படி செஞ்சுட்டு என் கிட்டே நட்பு பாராட்டி உதவி கேட்டெல்லாம் வராதீங்க!! ரொம்ப நன்றிங்க!!"

oOo

அவர்கள் மனம் புண்படக் கூடாது என்று வேறு விஷயங்களைப் பேசி உரையாடலை மிதமாக முடித்தேன்.

இதுல எனக்கு என்ன புரிஞ்சுது?

இப்பல்லாம் மக்களுக்குத் தப்பு எது, தர்மம எதுன்னே யோசிக்கத் தெரியலயா இல்ல யோசிக்க விரும்ப மாட்டேங்கறாங்களா?

அமைச்சர் பெருமக்களெல்லாம் எல்லோருக்கும் அணுகும் முறையில இருந்தாலும் மக்கள் அவர்களை ஒரு நியாயமான ப்ரச்சினைகளுக்காக அணுகுவதில்லையோ?

இது தப்பாயிருந்தாலும் என் நண்பரே இன்னும் கொஞ்சம் பணம் தள்ளியிருந்தா இதுவும் நடந்திருக்குமோ?

என் நண்பரே இதை "நான் EVKS இளங்கோவன் கோஷ்டி ங்கிறதால் இத பொன்முடி எனக்கு செஞ்சு கொடுக்கல... நான் வாசன் கோஷ்டியா இருந்தா செஞ்சிருப்பானுங்க... திமுக பொன்முடி நினைச்சிருந்தா என் பையனுக்கு ஒரு வருஷம் மிச்சமாயிருக்கும்" அப்ப்டீன்னு திசை திருப்பியிருக்கலாமோ ? (தன் பையன் சரியாகப் படிக்காததோ அல்லது இவர் அவன் படிக்கும் போது அவன் மேல் கவனம் செலுத்தாததோ ஒரு ப்ரச்சினையேயில்லை என்று ஒரம் கட்டப்பட்டிருக்குமோ?)

அரசியல்வாதிங்கிறதால அவர் எப்படி வேணும்னாலும் திசை திருப்பலாம..

நான் படிக்க வெச்ச.. படிக்க வைக்க நிதியுதவி செய்கிற ஒரு பையன் பெயிலானதில் எனக்கு வருத்தங்கள் இருந்தாலும்... அவனின் பெற்றோர்களின் தவறான் அணுகுமுறைகள் தோல்வியடைந்ததில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் தெரிகிறது.

இன்னும் அந்தப் பையனிடம் நான் பேசவில்லை..பேசினால்..
"அம்மா அப்பாதான் இப்படித் தவறாக முயற்சி செஞ்சாங்கன்னா..நீ வேணாம்னு தடுத்திருக்க வேண்டாமா?" என்று கேட்க வேண்டும்.

அடுத்த தலைமுறையின் மீது எனக்கு இன்னும் நம்பிக்கையிருக்கிறது!!!

Friday, August 11, 2006

28. இப்ப நீங்க எங்க இருக்கீங்க?


1994-ல் ஏப்ரல் மாதத்தில் அட்லாண்டா நகரில் முதன்முதலில் வந்து இறங்கியதால்.. நமக்கு முதலில் அடைக்கலம் கொடுத்த ஊர் ஆச்சேயென்று அட்லாண்டா மேலே ஒரு பாசமேயிருந்தது. அப்பொழுது திருமணமும் ஆகியிருக்கவில்லை.


கொஞ்சம் கொஞ்சமாக இந்தியக் கண்ணிப் பொறியாளர்கள் அமெரிக்காவில் தலை காட்ட ஆரம்பித்திருந்த நேரம் அது.

நானும் என் நண்பர்கள்...முன்னாள் வகுப்புத் தோழர்கள் என்று பலரை எனது கம்பெனிக்கு அடையாளம் காட்டி H1B விசாக்கு அப்ளை பண்ணி நிறைய பேரை அட்லாண்டாவிற்கு அழைத்து வந்திருந்தேன். அது தவிரவும் புதிதாக அங்கேயே சேர்ந்த நண்பர்களால் அந்த ஒரு இடத்தில் மட்டுமே எனக்கு 20-30 பேர் நண்பர்களாக இருந்தார்கள்... அவர்களுடன் மிக எளிதாக நேரம் போவதான பொழுதுபோக்கு வசதி இருந்தது...

யாருக்குப் ப்ராஜெக்ட் பார்ப்பதானாலும் அவர்கள் கம்பெனியில் முடிந்தவரை அட்லாண்டாவிலேயெ பாருங்க.. வேற எங்கேயும்னா.. சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று சொல்லிவிடுவார்கள்... கூடுமானவரை நண்பர்கள் ஒரே இடத்தில் இருக்கலாமல்லாவா? அவர்களும் தலையாட்டிவிட்டு வெளியில் பாஸ்டன், நியூஜெர்சி, கலிபோர்னியா என்று தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் (நாம சொல்றதை யாரு கேக்கறாங்க?)

அப்பொழுதெல்லாம் (இப்பொழுது மட்டும் என்னவாம்?) எல்லாரும் ப்ராஜெக்ட் பார்ப்பதனால் குறைந்தது 6 மாதம் அல்லது ஒரு வருஷம் அல்லது அதற்கு மேல் செல்லும் ப்ராஜெக்டாகப் பாருங்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு இடத்திலும் போய் அந்த ஊரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, அபார்ட்மெண்ட் பார்த்து வாடகை எடுத்து செட்டிலாகி ஒரு பழகுவதற்கு ஒரு 2 மாசம் ஆகலாம். அதற்குள் ப்ராஜெக்ட் முடிந்துவிட்டால் மறுபடியும் இந்த வேலைகளை இன்னொரு இடத்திலிருந்து ஆரம்பிப்பதென்பது ஒரு பெரிய கடி.

இந்த விஷயத்தில் என்னுடைய அணுகுமுறையே தனி.

அப்பொழுது திருமணமாகியிருக்கவில்லையாதலால் எனது மொத்த சொந்தமே இரண்டு சூட்கேஸுகளுக்குள் அடங்கிவிடும். தேவைக்கு அதிகமாக எதுவும் சொத்து சேர்ப்பதில்லை. அப்படியே ஒரு ஊரில் ஏதாவது வாங்கினால் அதை அந்த ஊரிலேயே அறைத் தோழர்களுக்கோ அல்லது வேறு நண்பர்களுக்கோ அன்பளிப்பாகவோ அல்லது (நான் மீண்டும் கேட்கும் வரை) பயன்படுத்தும் உரிமையையோ தந்துவிடுவது உண்டு. இவ்வாறு நான் விட்டுவந்தது மிக அதிகம். சில நூறு தமிழ்ப் புத்தகங்களும் அதில் அடக்கம்.

நான் என் கம்பெனியில் கேட்கும் ப்ராஜெக்ட் வகைகள் தனி. எனக்கு அதிக பட்சமாக 6 வாரத்துக்கு மேல் எந்தவித ப்ராஜெக்ட்டும் பார்க்காதீர்கள் என்று சொல்லிவிடுவது உண்டு. இந்தமாதிரி ப்ராஜெக்ட்களில் ஒரு வசதியென்னவென்றால்.. ஓட்டலின் அறை வாடகை, வாடகைக் கார், மற்றும் இதர செலவுகள் கம்பெனியோ அல்லது வாடிக்கையாளரோ தந்து விடுவார்கள். நமக்கு கைக்காசு பைசா செலவழியாது. சமயங்களில் வாரத்துக்கு இருபதிலிருந்து முப்பது மணிநேரம் ஓவர்டைமும் கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனிக்கும் இதில் வருமானம் அதிகம். அதனால் அந்த கம்பெனிக்கு நான் ஒரு செல்லப் பிள்ளையாகவே இருந்தேன் (அப்பொழுது..)

1995-ல் ஜூன் மாதத்தில் இப்படித்தான் ஒரு முறை நான் பாஸ்டனில் சென்று மாட்டிக்கொண்டென். எனக்கென எல்லா வசதிகளும் உள்ள ஒரு தனி அறை.. அதில் நான் மட்டுமே. வேலையிலிருந்து வந்தவுடன் பொழுது போகாமல் என் அட்லாண்டா நண்பர்களுக்குப் போன் செய்து பேசிக்கொண்டிருப்பேன். (அப்பொழுது இண்டர்நெட்டில் அவ்வளவு வளர்ச்சி கிடையாது. யாஹூ, கூகுள், ச்சாட், ப்ளாக் எல்லாம் பிறக்காத நேரம். ஏன் .. செல்போன் கூட இவ்வளவு மலிவாகக் கிடையாது.. அதெல்லாம் ஒரு கனவு சமாச்சாரம் மட்டும் தான்)

தினமும் மாலை வந்தவுடன் பாஸ்டனிலிருந்துகொண்டு அட்லாண்டா நண்பர்களுக்குப் போன்.. அப்படியொன்றும் பெரிய விஷயங்களெல்லாமில்லை.. வெறும் வெட்டி அரட்டை தான்.. தினமும் ஒரு இரண்டு மணி நேரம் இப்படியே எல்லாருக்கும் போன் போட்டுபேசிக் கொண்டிருப்பது தான் ஒரே பொழுதுபோக்கு.

அப்பொழுது தான் ஒரு நாள் மனசுக்குள் ஒரு மின்னல் அடித்தது.

நாம என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? - மனசுக்குள் ஒரு கேள்வி.

ஏன்? ஒண்ணும் தப்பா தெரியலையே... நண்பர்கள் கிட்டதானே பேசிக்கிட்டிருக்கோம்..

இங்க பாஸ்டனில் நாம இருக்கும் போது.. அட்லாண்டா நண்பர்கள் கிட்ட என்ன தினசரி பேச்சு?

ஏன் பேசினால் என்ன?

பேசக்கூடாதூன்னு சொல்லலை? ஏன் தினசரி பேச்சுன்னுதான் கேக்குறேன்?

பேசினால் என்ன தப்பு? - மறுபடியும் நானே

பேசறதூங்கறதை விடு.. நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே அப்படீன்னு சுருக்கமா சொல்லிப்பாரு...

இங்க பாஸ்டனில் வந்து இருந்து கொண்டு 1000 மைல் தொலைவில் உள்ள அட்லாண்டாவில் மனதளவில் வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்

ஏன் அப்படி செய்யணும்?

ஏன்னா.. எனக்கு இங்க பாஸ்டனில் நண்பர்கள் இல்லை..

அப்பொழுது தான் புரிந்தது என் தவறு.
அடிக்கடி அட்லாண்டா நண்பர்களுக்குப் போன் செய்வதை விட்டுவிட்டு வெளியில் சென்று பழகத்துவங்கினேன். நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. அதற்குப்பின் என் நடைமுறையில் நிறைய மாற்றங்கள். பாஸ்டனிலேயே நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இதே போக்கில் போகும் ஒவ்வொரு ஊரிலும் நிறைய நண்பர்கள்... எனக்குள் ஒரு பெரிய மாற்றமே நிகழ்ந்தது..

oOo

இதை ஏன் இப்ப எழுதினேன்? இங்க வலைப்பூவில் நிறைய நண்பர்களைப் பார்க்கிறேன்.

இவங்க எதைப் பத்தி எழுதறாங்க?

அவர்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடங்களும் செய்யும் தொழில்களும் அபரிமிதமானவை. சில பேர் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு Ph.d யெல்லாம் வாங்கியிருக்காங்க. அவர்கள் இருக்கும் இடங்களில்..அங்கு வாழும் வாழ்க்கையில் அவர்கள் அனுவங்களில் சுவையான விஷயங்கள் அதிகமாக இருக்கும். இதைப் பற்றி எழுதலாம்..

அல்லது அவர்கள் சிறு வயதில் சொந்த ஊரில் நடந்த சில் நல்ல காரியங்கள் அல்லது சந்தித்த சிறந்த மனிதர்களைப் பற்றி எழுதலாம்.

அதெல்லாம் எழுதினால் படிப்பவர்களுக்கும் அது ஒரு சிறந்த சுவையான அனுபவச் சித்திரமாக இருக்கும்.

இதெல்லாம் இங்கு கிடைப்பது அபூர்வமாகவே இருக்கிறது. அதை விட்டுவிட்டு இவர்கள் எதை எழுதுகிறார்கள்?

இவர்களே சொந்த ஊரில் இருந்தால் படித்துவிட்டு தூக்கியெறிந்துவிட்டு அல்லது மறந்துவிட்டு செல்லும் செய்திகளையும் அல்லது அங்கிருந்தால் படிக்க நேரமேயில்லாத செய்திகளையும் இங்கிருந்து படித்துவிட்டு.. அதற்கு ஒரு மணிநேரம் செலவு செய்து பதிவு எழுதி.. அதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலும் எழுத எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் பாருங்கள்...

ஏன் இப்படி?

பத்துவருடங்களுக்கு மேல் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் எழுதிய புத்தகத்துக்கு விமரிசனம் எழுதிய ஒருவர்.."தமிழகத்தில் வசிக்கும் ஒரு சராசரித் தமிழனுக்குக் தெரிந்த அளவை விட மிக அதிகமாக இந்த ஆசிரியருக்கு தமிழ்ச் சிறுபத்திரிகை அரசியல் தெரிந்திருக்கிறது" என்று எழுதினார்.

அவர் சொன்னதன் காரணம் எனக்கு என்னென்னவோ புரிய வைக்கிறது..

தமிழகத்தில் வசிக்கும், தமிழ்ப்பதிவுகளுக்கு ரொம்ப அறிமுகமில்லாத ஒருவர் சமீபத்தில் சில தமிழ்ப்பதிவுகளைப் படித்துவிட்டு என்னிடம் சொன்னது..
"இங்க இந்தியாவுல இருக்கறவனெல்லாம் வெளிநாடு போக மாட்டோமா-ன்னு கனவு கண்டுகிட்டிருக்கான். இவங்களெல்லாம் ஏதோ முன்னோர் பண்ணிய புண்ணியத்தில் அதிர்ஷ்டவசமாக வெளிநாட்டில் இருக்கும் பாக்கியம் பெற்றிருக்காங்க.. அங்க போய உட்கார்ந்து நல்ல விஷயங்களை எழுதலாமில்லே.. ஏன் இப்படி பைசா பெறாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்கிறாங்க?"

அவருக்கு என்னிடம் பதிலில்லை... யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

(பாவனா படம் ஒரு அழகுக்காகத்தான். நன்றி: விகடன்)

Friday, August 04, 2006

இந்தக் கேள்விக்கெல்லாம் யாருக்காவது பதில் தெரியுமா?

சென்னையைச் சேர்ந்த ஒரு பகதர் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் மதிப்புள்ள வைரத்தினால் செய்யப்பட்ட காதணிகளை வழங்கியுள்ளார்.

அதே பக்தர் நேற்று முன் தினம் திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோவிலுக்கு 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1008 தங்கக் காசுகளுடன் கூடிய லட்சுமி சகஸ்ரநாம தங்க மாலையை வழங்கியுள்ளார்.
இரண்டு கொடையிலும் தனது பெயர் வெளியில் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் இந்த முகம் தெரியாத பக்தர்.

இவரது பக்திக்கும் கொடைக்கும் எனது பாராட்டுக்கள்..

ஆமாம் இவர் ஏன் தன் பெயர் வெளியில் தெரிவதை விரும்பவில்லை?
1. நியாயமான தன்னடக்கம் மட்டும் தானா அல்லது தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி (இவ்வள்வு பெரிய பணக்காரரென்று தெரிந்தால் யாராவது அவர் குடும்பத்தினரைக் கடத்தி பணம் பறிக்க முயல்வதுடன் அவர்களது உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளதே) சொல்வதில்லையா?

2. அல்லது வருமான வரிக்கு பயந்து சொல்வதில்லையா? அப்படியானால் வருமான வரித்துறையினர் கோயிலில் வந்து யார் இந்த மாலையைக் கொடுத்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதா? அல்லது கோயில் அலுவலகமே வருமான வரித்துறையினரிடம் "சாரி ஸார்.. எங்களுக்கே அவர் யார்ன்னு சொல்லலை.. மாலையைக் கொடுத்தார்.. போயிட்டார். அவ்ர் தமிழ் பேசினதிலிருந்து தமிழர்-னு தெரியுது. ஆனால் அவரைப் பத்தி வேற எதுவும் தெரியாது!!" அப்படீன்னு சொல்லி விடுவாங்களோ?

3. அப்படியே வருமான வரிக்கு பயந்திருந்தால் இந்த தொகையை பெருமாளுக்குக் கொடுப்பதை விட வருமான வரித்துறையினரிடம் தந்திருக்கலாமே!! ஆண்டவனும் இதையே ஆசிர்வதித்திருப்பாரென்று நம்பலாமே?

4. சென்னையிலேருந்து வந்து 2 கோடி ரூபாய்க்கு ஆண்டவனுக்கு ஆபரணம் வாங்கித் தருபவருக்கு வழி நெடுகில் உள்ள ஏழை பாழைகளும்.. சோத்துக்குக் கூடத் திண்டாடும் குழந்தைகளும் கண்ணில் படவேயில்லையா? 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஆபரணம் ஆண்டவனுக்கு வருடத்துக்கு ஒரு நாள் அணிவித்து மீதியுள்ள நாளில் பெட்டியில் தூங்குவதற்கு.. அதைவைத்து நிறைய பேருக்கு வாழ்வு கொடுத்திருக்கலாமே.. அவருக்கு ஏன் தோன்றவில்லை?

5. இவ்வள்வு பெரிய கொடை தருபவர் நிச்சயம் ஒரு தொழிலதிபராகவோ அல்லது மிகப்பெரிய கிம்பளம் வாங்கும் அரசு அலுவலராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ தான் இருக்க வேண்டும் (வேறெதாவதிருந்தால் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன்). தொழிலதிபராக இருந்தால்.. தொழிலில் வரும் மிகப்பெரிய லாபமாக இருந்தால் அதைத் தன் தொழிலாளருடன் பகிர்ந்து கொண்டிருக்கலாமென அவருக்கு ஏன் தோன்றவில்லை? கிம்பளம் வாங்கும் அரசு அலுவலரெனில் அவர் லஞ்சம் வாங்குவதையே நிறுத்தியிருக்கலாமே? செய்திருப்பாரோ?


இதுவே நானாக இருந்தால் இந்தப் பணம் மூலம் நிறைய ஏழைகளை வாழ வைத்திருப்பேன்.

13 வருடங்களுக்கு முன் (1993) ஏதோ ஒரு மனக் கஷ்டத்திலிருந்த போது மயிலாடுதுறை துலாக்கட்டம் மலைகோயில் முருகனுக்கு வெள்ளியில் கவசம் செய்து போடுகிறேன் என்று வேண்டிக் கொண்டேன். அதற்காக சவுதியிலிருந்து வாங்கி வந்த 4 கிலோ வெள்ளிக் கட்டிகள் முருகன் பெயர் எழுதப்பட்டு ஒரு மஞ்சள் துணியில் சுற்றி லாக்கரில் தூங்குகிறது. அதற்குப் பிறகு நிறைய சமூகசேவைகள் செய்தாகிவிட்டது... "முதல்ல இங்க என்னைச் சுற்றியிருக்கிற மக்களை கவனி.. அப்புறம் நான் வெள்ளிக் கவசம் போட்டுக்கிறேன்" அப்படின்னு முருகன் சொல்லிட்டான் போல.. அவனுக்குத் தெரியாதா.. எப்ப எதை என் கிட்டயிருந்து வாங்கிக்கணும்-னு...

நம்ம வலைப்பதிவர் ஜிரா/குமரன் சொல்வது போல "முருகனருள் முன்னிற்கும்" முன்னின்று வழியும் நடத்தும்.

பெயர் தெரியாத/தெரிவிக்காத அந்த பக்தருக்கு இறையருள் துணை நிற்கட்டும் !!!

Wednesday, July 26, 2006

25A. இந்தக் கார்ட்டூன் நல்லா இருக்கில்ல..

இன்று ரசித்த கார்ட்டூன்...


நன்றி: குமுதம்.

Tuesday, July 25, 2006

26A. நம்ம நாட்டுல இதக கண்டுபிடிக்கிறது கஷ்டமா?


இன்றைக்கு இரண்டு செய்திகள் என் கவனத்தைக் கவர்ந்தன?

செய்தி 1: சிறுதாவூர் பங்களா எனக்குச் சொந்தமானது அல்ல. அதில் நான் வாடகைக்குத் தான் குடியிருந்தேன் - ஜெயலலிதா அறிக்கை.
ஒரு வீடு தன்னுடையது அல்ல என்றும் அதில் தான் வாடகைக்குத் தான் இருந்ததாகவும் கூறும் ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு அது பின்னர் யாருக்குத்தான் சொந்தமானது என்று கூறுவதோ அல்லது தான் எந்ததேதியிலிருந்து எந்த தேதிவரை அங்கு இருந்ததாகவும் அதன் வாடகை எவ்வளவு .. யாரிடம் தரப்பட்டது என்று சொல்ல முடியாதா? அட.. அது அவர் தான் தனிப்படையாக வாடகை தரவில்லையென்றால்.. தனது அந்தரங்க உதவியாளரிடமிருந்தாவது அந்த செய்தியை கேட்டு வாங்கித் தந்திருக்க முடியாதா? அல்லது அந்த விவரங்களையும் சேர்த்து அறிக்கையில் வெளியிட்டால் தான் பொதுமக்களுக்கு செய்தியின் பின் உள்ள நேர்மை தெளிவாகும் என்பது தெரியாதா?


செய்தி 2: சிறுதாவூர் பங்களாவின் உரிமையாளர் யார்? - ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி

தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் மாநிலத்தின் ஒரு உடமையின் உரிமையாளர் யார் என்பதை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தனக்குக் கீழ் வரும் பத்திரப்பதிவுத்துறையைக் கேட்டு மக்களுக்குத் தெரிவிக்கக் கூடாதா? யாராவது அந்தச் சொத்துக்கு வரி கட்டித் தானேயிருக்க வேண்டும்? அப்படியென்றால் அது யார் பேரில் உள்ளது? அவர் பெயரில் எவ்வாறு எப்பொழுது பதிவு செய்யப் பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? அதைக் கண்டு பிடித்துச் சொல்லவேண்டியது அரசின் கடமையல்லவா?

அதுவும் இந்தக் கேள்வி முதலமச்சருக்கே முக்கியமான கேள்வியென்றால்.. ஏன் பத்திரப்பதிவுத்துறை மெளனம் சாதிக்கிறது?


ஜெயலலிதாவே தங்கியிருந்து வாடகை தருகிறாறென்றால் அது எவ்வளவு பெரிய சொத்தாக இருக்க வேண்டும்? அதற்கு வாடகை எவ்வளவு பெரிய தொகையாக இருக்க வேண்டும்? அதைப் பெறுபவரோ அல்லது அதன் சொந்தக்காரரின் உறவினர்களோ தமிழகத்திலோ அல்லது செய்தியெட்டும் தொலைவிலோ இருந்தால் ஏன் இன்னும் பத்திரிகைகளுக்கு பதில் சொல்லவில்லை?

இதெல்லாம் நமது நாட்டில் மிகப்பெரிய மர்மங்களா என்ன?

இதுக்கெல்லாம் computerization ஒன்றுதான் ஒரே வழி. அனைத்து உரிமைகளும்.. உடைமைகளும் computerize செய்யப்பட்டு பொதுமக்கள் (அட ..குறைந்த பட்சம் முதலமைச்சரின் அலுவலர்களாவது) எளிதில் அணுகி விவரங்களைக் கண்டுபிடிக்க வழிவகை செய்யப்பட்வேண்டும்.


நடக்கும் என்று நம்புவோம்.

(படம் உதவி: விகடன்)

பி.கு: வாசகர்களின் ஏகோபித்த வேண்டுதல்களின் பேரில் மீள் பதிவு செய்யப் பட்டது. முன்னதை ப்ளாக்கர் சாமி விழுங்கிவிட்டது.

Friday, July 21, 2006

24. இதை இப்படித்தான் பார்ககணுமுன்னு சட்டமா இருக்கு?

ச்சின்ன வயதில் பக்கத்து வீடு அல்லது எதிர் வீட்டில் யாருக்காவது அயல் நாட்டிலிருந்து தபால் வந்தால் அந்தத தபால் வந்த கவரும் அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டாம்பும் சமயங்களில் அதில் கட்டி வந்த நைலான் கயிறும் அதி முக்கியத்துவம் பெறும்.

அந்த ஸ்டாம்பை யார் பெறுவது என்று பெரிய யுத்தமே சமயங்களில் நடக்கும். இந்த சண்டைகளில் அந்த தபாலில் வந்த செய்தியோ அல்லது பொருளோ முக்கியத்துவம் இழக்கும்.

oOo

சில வீடுகளில் வாங்கி வரப்பட்ட விலையுயர்ந்த புடவையை விட அது சுற்றி வந்த ப்ளாஸ்டிக் பை மிக முக்கியத்துவம் பெறும். அந்தப் பையை மறுநாள் யார் பள்ளிக்கு எடுத்துச் செல்வது என்று குழந்தைகளிடையே ஒரு பெரிய சண்டை மண்டை உடையும். இதற்காகவே எனக்குத் தெரிந்தவர்களின் வீட்டில் ஏதாவது விலையுயர்ந்த ஜவுளியோ... நகையோ வாங்கினால் இன்னொரு ப்ளாஸ்டிக் பை கொடுய்யா-ன்னு கேட்டு வாங்குவாங்க. இந்த பெரிய சமயோசிதத்தால் ஒரு பானிப்பட் யுத்தம் தவிர்க்கப்படும்.

oOo

சமயங்களில்.. சில வீடுகளில் LKG UKG படிக்கும் பிள்ளைகள் .. அப்பத்தான் ஆங்கிலம் கற்று மழலை ஆங்கிலம் பேசும் பிள்ளைகள் சமயத்தில் ஆங்கிலத்தில்.. Sundar Uncle met with an accident.. என்று சொல்லும் போது .."ஆஹா .. என் புள்ளை இங்கிலீஷுல என்ன என்னவோ பெருசாச் சொல்லுதே.." என்று சிலாகிக்கும் பொது.. அந்தச் செய்தியில் உள்ள விபரீதம் உரைக்காமலே போகிறது.

oOo

கம்ப்யூட்டர் கன்சல்ட்டண்ட்டுகளான நாங்கள் சமயத்தில் க்ளையண்ட் இடங்களுக்கு இது போல கருத்தரங்கங்களுக்குச் செல்வதுண்டு. வாடிக்கையாளரின் குறைகளைக் கேட்டு அதற்கு வழிவகை செய்யவேண்டிய தீர்வுகளை தயார் செய்து தர ஒப்பந்தப் புள்ளி (contract or proposal) செய்து தர வேண்டியது எங்கள் கடமை.. வாடிக்கையாளரின் பிரதிநிதி அவர்கள் சிஸ்டங்களில் தற்போது உள்ள குறைகளைப் பட்டியலிட பட்டியலிட எங்கள் புன்னகை (மனதிற்குள்) சில சமயம் வெளியிலும் விரியும். ஒவ்வொரு குறையும் எங்களுக்கு சில நூறு ஆயிரம் டாலர்கள் வியாபாரம்.. வாடிக்கையாளருக்கும் அது ஒரு சோகம் ஒர் செலவு தான்.. எங்களுக்கு அது ஒரு வியாபாரமாச்சே...

oOo

John Hopkins University வளாகத்தில்.. அமைச்சர் அன்புமணி ஆற்றிய உரையும் இப்படித்தான் ஒரு க்ளையண்ட் பிரதிநிதி கன்சல்டண்டுகளுக்கெதிரே ஆற்றிய உரை தான். இந்தியாவில் நாம் நிர்ணயிக்கத் திட்டமிட்டிருக்கிற, ஒவ்வொன்றும் 250 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படப்போகிற நான்கு பொதுமக்கள் சுகாதாரம் (public health institutes) நிலையங்களுக்கு (மொத்த திட்ட மதிப்ப்ய் 1000 கோடி ரூபாய்) john Hopkins University யின் பங்கு பற்றி அன்புமணி ஆற்றிய உரை இது. அங்கு இருந்த "அயல் நாட்டு அறிஞர்கள்" புன்னகையிலும் மகிழ்ச்சியிலும் உள்ள அர்த்தத்துக்கு காரணமாக மேலே சொன்ன பத்தியைப் படியுங்கள்...

அந்த உரையில் இந்தியாவின் பிரச்ச்சினைகளாக அவர் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றும் "அம்மாவுக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் .. அதற்கு 30 லட்ச ரூபாய் பணம் வேண்டும்.. இந்த வருட இறுதியில் எனக்கு 5000 ரூபாய்க்கு செக் வரவேண்டியிருக்கிறது" ரகம்.

ஒவ்வொரு புள்ளி விவரமும் உண்மையாகவே 'பகீர்' ரகம். அந்த வீடியோவை ஒரு மணி நேரம் பார்த்த போது எனக்கு நமது நாட்டின் தற்போதைய தேவையை நினைத்து கவலையாக இருந்தது.. ஒரு பெருமூச்சு தான் வந்தது..

சில பேருக்கு அவர் பேசிய ஆங்கிலமும்.. அவர் மொழிப்புலமையும் ..அவர் பார்க்காமலேயே சொன்ன புள்ளிவிவரங்களும் பெருமையாக இருக்கின்றன.

இங்கு நான் அமைச்சர் அன்புமணியைக் குறை கூறவில்லை.. தபால் அனுப்பியவர் சரியாகத்தான் அனுப்பினார்.. நாம் தான் அதில் ஒட்டியிருக்கிற ஸ்டாம்புக்கும் கட்டி வந்த ப்ளாஸ்டிக் கயிறுக்கும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம்...

சில பேருக்கு ப்ளாஸ்டிக் பை முக்கியம்.. சிலருக்கு அதில் வந்த பொருள் முக்கியம்..

சிலருக்கு குழந்தை பேசும் ஆங்கிலம் பெருமை.. சிலருக்கு.. அது சொன்ன Sundar Uncle met with an accident ல் சொல்லப்பட்ட சுந்தர் மாமாவின் உடல் நிலை எப்படியிருக்கிறதோ என்ற கவலை முக்கியம். நான் இரண்டாவது ரகம் தான்.. நம் நாட்டில் இது போன்ற விஷயங்களில் பலர் எப்பொழுதுமே முதல் ரகமாகவே இருக்கிறார்கள்...

இதை இப்படித்தான் பார்க்கணுமுன்னு சட்டமா இருக்கு?

Thursday, July 20, 2006

23. அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவை உரையாற்றிய நமது அமைச்சர்...

இந்தியா போன்ற ஒரு பெரிய குடியரசின் சுகாதார அமைச்சர் அமெரிக்கா வந்திருந்து ஒரு பெரிய பலகலைகழகத்தில் ஆற்றிய உரை குறித்தான பதிவு.
ஒரு அன்புமிகு நண்பர் இதைப் பதிந்ததற்கான காரணத்தை இங்கு இவ்வாறு கூறுகிறார்.


  • காரணம் நம் தமிழ் பத்திரிக்கைகள் நம் தமிழரின் பெருமைகளை சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைக் கொடியில் உள்ள தமிழனுக்கு செய்திகளை தருவது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி மத்திய அமைச்சர் அன்பு மணியின் செயல் பாடுகளை தெரிந்து கொள்ள ஆசைப் பட்டால் அவனுக்கு தெரிய படுத்துவது நம் தமிழ்ப் பத்திரிக்கைகளின் கடமை



  • அமைச்சர் அன்புமணி John Hopkins University School of Medicineல்ஓர் கருத்து அரங்கிற்கு வந்து இருந்து, இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பற்றி பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் அழகு ஆங்கிலத்தில், தெளிவாக, அமைதியாக எந்த ஓர் ஆர்பாட்டம் இல்லாமலும் உரையாற்றினார். அதாவது தமிழகத்தில் இருந்து வந்த ஓர் மத்திய அமைச்சர் அழகு ஆங்கிலத்தில் எல்லோருக்கும் புரியும் வண்ணம், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்குப் பிறகு இவரைத்தான் நான் பார்க்கிறேன். அவருடைய பேச்சின் பொழுது ஒரு முறை கூட எந்த குறிப்புகளையும் அவர் சரி பார்த்துக் கொள்ளவில்லை. அதுமட்டும் அல்ல, அனைத்து புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்து இருந்தார். சில சில இடங்களில் நகைச் சுவையாகவும் பேசினார். அங்கு வந்து இருந்த அனைத்து மக்களும் நிரம்ப படித்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், மாணவர்கள் அனைவரும் அவருடைய பேச்சை மிக ரசித்தார்கள். மொத்ததில் அந்த 3 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. ஓர் தமிழனாக அன்பு மணியின் செயல் பாடுகளில் பெருமைப் பட்டு கொள்ள நிறைய இருக்கிறது

அமைச்சர் அன்புமணி அவர்கள் பேசிய பேச்சின் முக்கியத்துளிகள் என John Hopkins University வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரையிலிருந்து சில குறிப்புகள்:

  • இந்தியாவிலே ஏறக்குறைய 52 லட்சம் இந்தியர்கள் எய்ட்ஸ் நோயினால் (HIV வைரஸால்) பாதிக்கப் பட்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் ஒரே ஒரு லட்சம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
  • AIDS பரிசோதனை செய்து கொள்ள மக்கள் முன்னுக்கு வரமாட்டேனென்கிறார்கள். ஏனென்றால்.. தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று சமூகத்துக்குத் தெரிவிப்பது ஒரு கெளரவக் குறைவு என்று நினைக்கிறார்கள்
  • குறைந்த பட்சம் 30 லட்சம் காப்புறை விற்கும் கருவிகள் இந்தியாவிற்குத் தேவை. இந்த வருட இறுதிக்குள் ஒரே ஒரு லட்சம் கருவிகள் மட்டுமே நிறுவப்படலாமென்று அரசு நம்புகிறது.
  • இந்தியாவுக்கு குறைந்த பட்சம் 50,000 ஒருங்கிணைந்த பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள் தேவை. தற்போது வெறும் 2300 மட்டுமே உள்ளது.
  • மொத்தம் 620,000 கிராமங்களில் எய்ட்ஸ் பற்றி ஆலோசனை சொல்லக்கூடிய சமுக சேவகர் தேவை. ஆனால் நம்மிடம் வெறும் 88,000 சமூக சேவகர்கள் மட்டுமே உள்ளனர்.

நமது நாட்டின் மத்திய சுகாதார அமைச்சரின் முன்னால் எவ்வளவு பெரிய ப்ரச்சினை இருக்கிறது?

இங்கே அமெரிக்காவில் விஞ்ஞானிகள் மட்டும் பல தரப்பட்ட முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் பேசும் போது எவ்வளவு பெரிய பொறுப்புடன் கலந்தோலோசித்து அவர்களிடமிருந்து திட்டங்களையும் நிதியையும்.. ஆலோசனைகளையும் பெற்றிருக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சரிடம் எந்தவொரு குறிப்பும் இல்லை.. எந்தக் குறிப்பையும் பார்க்காமல் "அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவையுடன்" பேசினார் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு பொறுப்புள்ள படித்த இந்தியக் குடிமகன் எழுதுகிறார். !!!!!

நகைச்சுவையுடன் பேசக்கூடிய ப்ரச்சினையையா பேசியிருக்கிறார் ? ஒர் பொறுப்புள்ள அமைச்சராக நிறைய குறிப்புக்களுடனும் கவலையுடனும் ஆதங்கத்துடனும் அல்லவா பேசியிருக்கவேண்டும்.

"பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி" க்கு "நம்ம ச்சின்ன அய்யா அமெரிக்காவில் 40 நிமிடம் ஆங்கிலத்தில் புத்தகத்தைப் பார்க்காமல் பேசினார்" என்பது தெரிந்தால் போதுமா? அதுவா பெருமை இங்கு?

அவர் ஆங்கிலத்தில் 40 நிமிடம் குறிப்பைப் பார்க்காமல் பேசியது என் பெருமை கிடையாது. அவர் ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் பேசட்டும்.. தமிழ்.. தெலுங்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசட்டும்.. எனக்கு அவர் மொழிப்புலமை பற்றியோ அவர் மொழியார்வம் பற்றியோ எனக்குக் கவலையில்லை.. அவர் என்ன பேசினார்.. எப்படி பேசினார்.. என்பது தான் எனக்கு முக்கியம். நமது நாட்டின் முன்னேயுள்ள ப்ரச்சினையையும் அதன் தீவிரத்தையும் எவ்வளவு தூரம் அயல் நாட்டு அறிஞர்கள் மற்றும் கொடையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் என்பது முக்கியம். அவர் கையில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை எவ்வளவு கவனமாகக் கையாளுகிறார் என்று மக்கள் மனதில் அவர் ஏற்படுத்தவேண்டிய தாக்கம் முக்கியம்.

அமைச்சர் அன்புமணியின் மேல் எனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவர் மேல் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு முக்கியமில்லை.. என் நாட்டு மக்களுக்காக அவர்களின் சுகாதார முன்னேற்றத்துக்காக அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தான் எனக்கு முக்கியம்.

இதே அன்புமணி அவர்கள் நமது மக்களிடமோ அல்லது கருத்தரங்கிலோ " குறைந்த பட்சம் 30 லட்சம் காப்புறை விற்கும் கருவிகள் இந்தியாவிற்குத் தேவை. இந்த வருட இறுதிக்குள் ஒரே ஒரு லட்சம் கருவிகள் மட்டுமே நிறுவப்படலாமென்று அரசு நம்புகிறது. ஒரு கருவி ஒரு இடத்தில் நிறுவ 200 டாலர் செலவாகிறது.. இங்கு கூடியுள்ள ஒவ்வொரு பொறுப்புள்ள இந்தியனும்... இந்தியாவின் ..இந்தியர்களின் சுகாதாரத்தின் மேல் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஒரேஒரு கருவிக்காவது பொறுப்பேற்க வேண்டும் என்று பொறுப்புடனும் ஆதங்கத்துடனும் கேட்டிருந்தால் இந்நேரம் ஒரு ஆயிரம் கருவிகளுக்காவது நன்கொடை வந்திருக்காதா? நான் மட்டுமே ஒரு பத்து கருவிகளை நிறுவ நன்கொடை வசூலித்திருக்க முயலமாட்டேனா? அமைச்சரின் மேல நான் தான் எவ்வளவு பெருமைப் பட்டிருப்பேன். பத்திரிக்கைகள் தான் எவ்வளவு பெருமைப் பட்டிருக்கும்?

அன்பு நண்பர் சிவா.. உங்கள் மேல் எனக்கு எந்த கோபமும் கிடையாது. நாமிருவரும் மயிலாடுதுறை தான்.. நாமிருவரும் சென்றவருடம் இதே நேரத்தில் மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறோம். தயவு செய்து இதை உங்களை நோக்கிய ஒரு தனிமனித தாக்குதலாக நினைக்காதீர்கள்.. இது உங்களை நோக்கியது அல்ல. இது என் மனதின் ஆதங்கம் மட்டுமே.

அன்பு வலைப்பதிவு தோழர்களே.. தயவு செய்து இதில் கட்சி மட்டும் சாதி சார்ந்த குறுகிய வட்டத்துக்குள் அடைக்காதீர்கள்.

பின்குறிப்பு: இந்தக் குறிப்பு, பதிவை எழுதியபின்பு, அமைச்சர் அன்புமணி அவர்களின் பேச்சின் முழு வீடியோப் பதிவைப் பார்த்தபின்பு எழுதப்பட்டது.

அமைச்சர் அவர்களின் பேச்சு மிகப் பொறுப்பான முறையிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அவரின் முழுப் பேச்சின் வீடியோவையும் பார்த்தேன். மிகச் சிறப்பான முறையில் பேசியிருக்கிறார். குறிப்புக்களையும் அவ்வப்பொழுது பார்த்து கவனமுடன் தெளிவாகப் பேசியிருக்கிறார். அமைச்சரவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

அவர் பேச்சின் முழு வீடியோப் பதிவும் இங்கு உள்ளது

http://commprojects.jhsph.edu/_media/india_presentation_hi.ram

- சீமாச்சு.

அமைச்சர் அன்புமணியின் பேச்சு குறித்து நண்பர் சிவாவின் பதிவு

Monday, July 10, 2006

22. ஏன் யாருமே இதைப்பத்தி எழுதலை ?

ஆமா.. யாராவது தமிழ் வலைப்பதிவர்கள் இதைப்பத்தி எழுதியிருப்பாங்க-ன்னு காலையிலேருந்து காத்திருந்தேன்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை அனுப்பப்பட்ட GSLV F2 தோல்வியடைந்துவிட்டது. அதற்கு முதல் நாள் அனுப்பப்பட்ட அக்னி-3ம் தோல்விதான்.

GSLV தோல்வியால் மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டம்.

அடுத்தமுறை நாம் மறுபடியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கை தவறாமல் விஞ்ஞானிகள் அயராது முயலவேண்டும்.. வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

oOo

இதெல்லாம் பார்த்தால்.. எங்க கம்பியூட்டர் தொழில்ல இது போன்ற பெரிய பாதிப்பெல்லாம் கிடையாது. சமயத்துல ஒரு பெரிய project implementation தோல்வியடைந்து பெரிய நஷ்டமெல்லாம் வருவதுண்டு.. இருந்தாலும் பெரிய நஷ்டங்கள் 5 வினாடி 15 வினாடியில் நடப்பதென்பத்ல்லாம் எங்கள் தொழிலில் கிடையாது..

ப்ரொக்ராம் தப்பானா.. சர்வர் வெடித்து சிதறும் என்பது மாதிரி விபரீதங்களிருந்தால்.. இப்ப அங்கங்கே நிமிடத்துக்கு நாலு வெடிச்சிக்கிட்டிருக்கும். நல்ல வேளை அப்படியெல்லாம் இல்லை.. நாம பொழச்சோம்..

Saturday, July 08, 2006

21. இராவணன்.. இராமர் கிட்டே.. ஏன் தோத்தார் .. தெரியுமா?

1985..
நான் மயிலாடுதுறையில்.. கல்லூரியில் M.Sc. (கணிதம்) படித்துக் கொண்டிருந்த காலம். எனது நண்பர்கள் எல்லோருமே ஒரு ஒரு விதத்தில் ஒரு மாதிரியானவர்கள். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்..

சாம்பிளுக்குச் சொன்னால்., நம்ம வீர படையாச்சி சிவகுருநாதனைச் சொல்லலாம். அவனுக்குத் தான் ஒரு "வீரபடையாச்சி" என்பதில் ஏகத்துக்குப் பெருமை. அப்பொழுதுதான் இராமதாஸ் வன்னிய சங்கம் ஆரம்பித்து கொஞ்சம் வெற்றியடைய ஆரம்பித்திருந்ததால்.. அவனுக்கு அந்த பெருமை வேறு..யாரையாவது பத்தி ..ஏதாவது சொன்னாலும் .. "அவனை ஆஃப் பண்ணனும் மாப்பிள்ளே.. ரொம்ப துள்ளறான்.." அப்படீன்னு.. உடனே உலைச்சோறு கணக்கா கொதிக்க ஆரம்பித்துவிடுவான்... அப்பப்ப அங்க இங்க போய் ஏதாவது வம்பு தும்பை விலைக்கு வாங்கி வருவதுதான் இவன் வாடிக்கை... இவனை மாதிரி நிறைய "திராவிட ராஸ்கோல்கள்" நமது நண்பர்கள்..

சில நண்பர்கள் படிக்காதவர்கள்... இருந்தாலும் காலேஜ் பசங்ககூட ப்ரெண்டா இருந்தால் அவங்களுக்குப் பெருமை-ன்னு நம் வட்டத்தில் நட்பு பாராட்டி வருபவர்கள். அடிக்கடி நழுவும் ஒரு பாலியெஸ்டர் வெள்ளை வேட்டி அத்துடன் கொஞ்சம் பளபளப்புடன் கூடிய மஞ்சள் அல்லது கருநீல சில்க் சட்டை (இது அந்தக் காலத்தில் ரொம்ப பேமஸ்) இதுதான் சிலரின் காஸ்ட்யூம். சைக்கிளில் தான் வருவார்கள். சைக்கிள் ஒட்டும் போது வேட்டியைத் தொடை தெரிய மடித்துக் கட்டிக்கொள்ளவேண்டும். அப்பத்தான் அவங்களுக்கு ஒரு கெத்து (இது என்ன மொழி வார்த்தைங்க..).

அக்ரஹாரத்தில் இப்படி பலவிதமான ஆட்கள் வீட்டுக்கு நம்மைத் தேடிவருவதால் எனக்கே என் தெருவில் ஒரு மாதிரியான பேருதான்.. அது போகட்டும்.. விடுங்க...

oOo

இப்படி நண்பர்கள் இருந்தால் சண்டை வராமல் இருக்குமா.. வந்ததே..குழு இரண்டாக உடைந்தது. வழக்கமான சண்டைகளை விட கொஞ்சம் பெரிய சண்டை... அடிதடி.. எளிதில் உணர்ச்சி வசப்படும் நண்பர்களாதலால்.. அங்கு ஒரு நியாயமான தர்க்கத்துக்கே இடமில்லாமல் போய்விட்டது..

முட்டி மோதி சண்டை மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து நின்றது..
ஒரு வியாழக்கிழமை மாலை 7 மணி...
ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றி மாற்றி புகார் சொல்லிக் கொண்டு... எல்லோரும் சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் அலுவலக வாசலில் கூடிக் கூடி பேசிக்கொண்டிருந்தோம். .... சப் இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பிஸி.. அதனால் நாங்களே அவர் கவனத்துக்காக காத்திருந்தோம். என்னதான் தீர்வு என்பது இன்னும் எங்களுக்கே தெரியவில்லை..

அங்கிருந்த ஒரு எழுத்தர்.. அவர் பெயர் தெரியவில்லை... எங்களை ஆரம்பத்திலிருந்தே மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்...மெதுவாக எழுந்து எங்கள் அருகில் வந்தவர்.. எங்களில் முக்கியமாகப் பட்டவர்களை ஒரு ஓரமாக ஓட்டிக் கொண்டு வந்தார்..

"தம்பிங்களா.. இப்படி வாங்க.."

"ஐயா கொஞ்சம் பிஸியாக இருக்காங்க.. நீங்கள்ளாம் கொஞ்சம் எங்க கூட வெளியே வரீஙகளா.."

எங்களை ஓட்டிக் கொண்டு வெளியே வந்தவர்.. அங்கே அருகாமையில் உள்ள ஒரு டீக்கடையின் வெளிப்புறத்துக்கு அழைத்துச் சென்றார்..

"அண்ணே.. தம்பிக்கெல்லாம் ஒரு டீ போடுங்க.."

சட்டைப் பையிலிருந்து பணம் எடுக்கப் போன என்னைக் கையமர்த்தி..
"நீ தரவேணாம் தம்பி... நானே கொடுத்திருவேன்.. கவலைப் படாதீங்க..

படிக்கிற புள்ளைங்க கிட்டேருந்து நான் காசு வாங்கறதில்லை தம்பீ... உங்ககிட்ட காசு வாங்கினால் அது உங்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாப் போயிடும்.. தயவு செஞ்சு பணத்தை உள்ளே வையுங்க.. எங்களுக்கெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சால் உங்களுக்குக் கட்டுப்படியாவாது.."

எழுத்தர் என் மதிப்பில் அதிகவே உயர்ந்தார்..

'அப்புறம் தம்பீங்களா.. யார் யாரு என்னென்ன படிக்கிறீங்க.."

அங்கிருந்த எங்கள் டென்சனைக் குறைப்பதற்காக சில சம்பிரதாயமான கேள்விகள்... எல்லோர் வயிற்றிலும் சூடான டீ இறங்கி ஒரு மிதமான மனநிலையைக் கொடுத்திருந்தது..

எழுத்தர் தொடர்ந்தார்..

"எல்லோரும் ராமாயணம் படிச்சிருக்கீங்களா..?"
"இராவணனுக்கு எத்தனை தலை?.. எத்தனை கைகள்? 10 தலை இருபது கைகள்.."
"அவன் சிறப்பு தெரியுமா..? அவன் ஒரு பெரிய சிவ பக்தன்..கைலாய மலையையே ஒரு கையால தூக்க முயற்சி பண்ணினவன்.."

"தினமும் காலையிலே 8 திசையானைகளோட சண்டை போட்டு ஜெயிச்சு பயிற்சி செய்பவன்.. "
"இராவணனைப் பத்தி இன்னும் நிறைய சொல்லலாம்.."

"இராமன் யாரு தெரியுமா ? உன்னையும் என்னையும் மாதிரி ஒரு சாதாரண மனுஷன்.. அவருக்கு ரெண்டு கை .. ரெண்டு கால்.. ஒரு தலை.. அவ்வளவுதான்.."

"இப்படியிருந்த இராமன் இராவணனை ஏன் ஜெயிச்சாருன்னு நீங்க யாராவது சொல்ல முடியுமா..?"

"ஏன்னா.. இராமர் ஒரு சாமி சார்.." - எங்களில் ஒரு முந்திரிக் கொட்டை..

எழுத்தர் தொடர்ந்தார்..

"அது தான் இல்லை.. இராவணனின் எல்லா பலங்களும்... பலவீனங்களும்.. இரகசியங்களும் தெரிந்த அவனின் தம்பி விபீஷணன்.. அவனிடமிருந்து பிரிஞ்சி... இராமர் பக்கம் வந்து சேர்ந்துட்டான்.."

"விபீஷணன் மட்டும் அப்படி வந்து சேரலைன்னா.. இராமர் ஜெயிச்சிருகிறது சந்தேகம் தான்.."
"நீங்க இப்போ சண்டை போட்டுக்கிறது யார் கூட..? இத்தனை நாளு உங்க கூட தாயா புள்ளையா பழகிக்கிட்டிருந்து உங்களைப்பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கிற உங்க ப்ரெண்டுங்க கூடத்தான்.."

"அப்படியிருக்கும் போது யார் ஜெயிச்சாலும் தோத்தாலும்... வலிக்கப்போறது எல்லாருக்கும்தான்.... அப்படியே நீங்க ஜெயிச்சாலும் அதுக்கு நீங்க கொடுக்க வேண்டிய விலை உங்களோட இந்த மாண்வப்பருவத்துல ரொம்ப பெருசா இருக்கும்..'

...
...
இப்படியே தொடர்ந்தார் அந்த தெய்வம்...

அவர் பேசப் பேச நாங்கள் செய்த தவறு எங்களுக்கு உறைத்தது..

"இனிமே நீங்க படிக்கிற காலத்துல் இந்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் வராதீங்க...

நீங்களெல்லாம் இங்க வரக்கூடாதுன்னுதான் எங்க ஆசையே...

உள்ள போயி ஐயா கிட்ட நாங்களெல்லாம் ராசியாயிட்டோம ஐயா.. ன்னு சொல்லிட்டு.. பத்திரமாக வீட்டைப்பாக்கப் போய் சேந்துக்குங்க...
"

செஞ்சோம்.. மந்திரத்துக்குக் கட்டுண்ட பூனை மாதிரி.. மனசெல்லாம் பூக்களாக கொஞ்ச காலம் திரிஞ்சோம்...
வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை அன்று அந்த போலீஸ்காரர் எனக்குப் புரியவைத்தார்..

அவர் யாரென்று எனக்கு இன்று நினைவில்லை.... அவர் யாராயிருந்தாலும்.. என்னை ப்பொறுத்த வரை ஒரு மாதிரி மனிதன்....

oOo



20. வியக்க வைக்கும் குழந்தைகள்..

பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.. சரி இன்னிக்கு ஒரு குட்டி பதிவு போடலாம்-னு தான்..

சமீபத்தில் என்னை வியக்க வைத்த் இரண்டு குழந்தைகள்.

0Oo

நியூ ஜெர்சியில் வசிக்கும் என் நண்பரின் மகன் ஐந்து வயது ஸ்ரீகாந்த். பிறக்கும் போதே ஒரு கையில் கம்ப்யூட்டர் கீ போர்டும் இன்னொரு கையில் மெளசும் வைத்துக் கொண்டு பிறந்தவன்...

மாலையில் பள்ளி விட்டு திரும்பியவன் புஸ்தக மூட்டையை (நாங்க அப்படித்தான் ச்சின்ன வயசில் சொல்லுவோம்) விசிறி எறிந்து விட்டு விளையாடப் போய்விட்டான்.

மாலை 7 மணி....

"ஸ்ரீகாந்த்.. புத்தகப்பையை எங்க வெச்சே?" , அம்மா

"தெரியாதும்மா.. இங்க தான் எங்கேயோ வெச்சேன்.."

"அதை முதல்ல தேடி எடுத்துட்டு மத்த வேலையைப் பாரு.."

அப்புறம் மெளனம்..

பையன் மும்முரமாக கம்ப்யூட்டரில் ..

தேடாமல் என்ன செய்கிறான் என்று கோபத்துடன் போய்ப்பார்த்த அம்மாவுக்கு ஆச்சரியமும் சிரிப்பும்.

பையன் www.google.com தளத்திற்குச் சென்று Where is my school bag என்று தேடிக் கொண்டிருந்தான்..

!!!!!!!

0O0

கண்ணீர் விட்டுக் கொண்டே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த என் மனைவியைப் பார்த்து என் மூன்று வயது இளைய மகள் (சூர்யா) கண் கலங்கி அனுதாபத்துடன் கேட்ட கேள்வி.

"Is Vengayam hurting your feelings mommy?"

oOo

Friday, March 17, 2006

19. சோதி மிக்க நவ கவிதை.. - என் மகள் எழுதியது..


அவள் சித்தி மற்றும் சித்தப்பாவுக்கு சமர்ப்பணம் செய்து என் மகள் (7 வயது) எழுதிய ஒரு குட்டிக் கவிதை..

ச்சின்னதுதான்..

"ஏண்டா.. My Aunt is not like Goldilocks அப்படீன்னா என்னடா அர்த்தம்"

"well..

she does not take things from other peoples houses

she does not eat others porridges..

and she does not go to others homes when they are not around"

எவ்வளவு பெரிய கற்பனை..அந்த ஒரு வரியில்...

பெரிய கம்பரா வருவாள்-னு நெனக்கிறேன்... (சதி லீலாவதி படத்தில் டாக்டர் சக்திவேலாக வரும் கமலஹாஸன் தன் மகனைப் பார்த்து.. "பெரிய எஞ்ஜினீயரா வரப் போறாம் பாருங்க.. " என்ற முறையில் சொல்லிப் பார்த்துக் கோங்க...)

18. ஆஹா... இது(வும்) தாண்டா அது..


நெஜமாவே யோசிக்க வெச்ச விஷயம் அது..
கொஞ்ச நாள் முன்னாடியே புரிஞ்சுட்டாலும்.. இப்ப உஷாவின் போஸ்டில் இதைப் படித்ததும் நாம எழுதிடுவோமேன்னு தோணிச்சு...

உஷா என்ன சொன்னாங்க-ன்னு கீழே கொடுத்திருக்கேன்..
இப்ப நம்ம கதை..



அமெரிக்கா வந்ததிலிருந்து குளிர்கால ஒலிம்பிக்ஸில் இந்த பிகர் ஸ்கேட்டிங் தவறாமல் பார்த்து விடுவதுண்டு. அதிலும் மிஷேல் க்வான் தான் நம்ம பேவரிட் ஆட்டக் காரர். இதில் ஒவ்வொரு முறையும் ஆட்டக்காரர்கள் நடு ஆட்டத்தில் தரையிலிருந்து எழும்பி இரண்டு முறை.. மூன்று முறைச்சுற்றி மீண்டும் தரை தொட்டு தொடர்ந்து ஆடும் போது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும். இவங்களுக்கெல்லாம் எப்படி இந்த பேலன்ஸ் கிடைக்கிறது.. எப்படி இவங்களுக்கு தலை சுற்றாமல் இருக்கிறது என்று ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.. கேட்க ஆளுமில்லாததால்.. அப்படி ஒன்றும் (என்) தலை சுற்றும் விஷயமில்லாதலால்.. விடை தெரியாத ஆச்சரியமாகவே மனதுக்குள் இருந்து வந்தது...

திருமணம் ஆகி மகள்களும் பிறந்து..முதல் மகள் (7 வயது) இங்கே பக்கத்தில் ஒரு அமெரிக்க நடனப் பள்ளியில் பாலே நடனம் பயின்று வருகிறாள்...
நமக்கு அது பற்றி ரொம்ப தெரியாது. நடனப் பள்ளி எங்கிருக்கிறதென்று மட்டும் தெரியும். இரண்டாவதும் மகளாகப் பிறந்த்தினால்... என் மனைவிக்கு குடும்பத்தில் 75% மெஜாரிட்டி கிடைத்து தனிப்பெரும் கட்சியாக உதயமானபின் வாயை மூடியவன் தான்.. இன்னும் திறக்கவில்லை...

ஒரு நாள்.. பாலேயிலிருந்து திரும்பி வந்த மகள்.. செம குஷி மூடில் .. "என் டான்ஸ் பார்க்கிறியாப்பா..' என்று கேட்டுக் கொண்டே.. ஒரு பெரிய சுற்று சுற்றி ஒயிலாக என் அருகில் வந்து நின்றாள்...

அவள் சுற்றுவதைப் பார்த்ததும் மனதுக்குள் இருந்த ஆச்சரியம் விழித்துக் கொண்டது.. நாம் கும்பிடும் சாமியே "தகப்பன் சாமி" ஆயிற்றே.. மகளிடமிருந்து கற்றுக் கொண்டாலும் ஞானம் ஞானந்தானே.....

'ஏண்டா கண்ணம்மா... இவ்வளவு சுத்து சுத்தறியே... தலை சுத்துமேடா ... கண்ணம்மா... .."

"அதெல்லாம் சுத்தாதுப்பா.,.."

"உன்னப் பாக்கற எனக்கே தலை சுத்திடிச்சே.. கண்ணம்மா.. உனக்கு எப்படி..?"

"அதுக்குத்தாம்பா டெக்னிக்... டீச்சர் சொல்லிக் கொடுத்திருக்காங்க..."

"நான் ஆடும் போது என் பார்வையை நல்லா கவனிங்க..." மீண்டும் சுற்றிச் சுற்றி ஆடினாள்..


நான் நன்றாக கவனித்தேன்.. அவள் பார்வை முழுதும் ஒரு தூணையே பார்த்துக் கொண்டிருந்த்து..

"பார்த்தியாப்பா...' - இது மகள்...

"ம்ம்..." - இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் நான்..

"இந்த மாதிரி ச்சுற்றி ஆடும் போது.. பார்வையை அலைய விடாமல்.. ஓரு நிலையான பொருளையே பார்த்துக் கொண்டிருந்தால்..நமக்குத் தலையைச் சுற்றாது.. நிறைய நேரம் ஆடலாம்..." - சொல்லிற்று தகப்பன் சாமி..

விஷயம் புரிந்தது.. இந்த ஆச்சரியம் மட்டுமில்லை.. அதைவிடபெரிய கேள்விக்கும் மனதில் விடை கிடைத்தது...

ஆஹா... இதுவல்லவோ இறை தத்துவம்...இதுவல்லவோ இறைவன்.. வாழ்க்கை நம்மை எப்படி சுழட்டிப் போட்டாலும்.. மனத்தை மட்டும்..மாறாத ..அந்த இறைவனடியில் வைத்திருந்தால்.... நமக்குச்..சுழல்களும்...பேருவகை தருமே...

மனசுக்குள்ளிருந்து ஆச்சரியம் விடைபெற்றது.. .. நான் வணங்கும் செல்வமுத்துக் குமர ஸ்வாமியை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என் பெற்றோரை நெஞ்சம் வணங்கியது..

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்"

திருக்குறள் கடவுள்வாழ்த்து... பொருள்

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ் வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

=== ***** =========

இனி உஷாவின் பெருமை.... அவங்க பெருமை..அவங்களுக்கு.. எங்க வூரு மருமகளாச்சே.. அதுவும் எனக்கு ரொம்ப காலம் அறிமுகமானவங்க குடும்பத்து மருமகள் வேறு...

// உஷாவின் ப்ளாகிலிருந்து....


பெருமை- என் மகனும், மகளும் என்ன தேர்வு, பிரச்சனை என்றாலும் கடவுளை கும்பிடாதது. அவர்கள் இந்த சுயசிந்தனை எனக்கு பெருமைதான். கடவுள் நம்பிக்கையை கேலி செய்ய நான் சொல்லிக் கொடுக்கவில்லை. நம்பிக்கை இல்லை என்பது வெறும் பேஷன் இல்லை. இந்த உறுதியைக் கடைப்பிடிப்பது மிக கடினம். பதினைந்து வயது மகனுக்கு ஏன் உபநயனம் செய்யவில்லை என்று கேட்டால், நாம் பிறந்த சாதி உயர்ந்த சாதி என்பதை பறை சாற்றுவதாக இந்த சடங்கு உள்ளது என்று அவன் மறுக்கும்பொழுது, இது போதும் என்று பெற்ற மனம் நெகிழ்ந்துப் போகிறது. நாளை அவர்கள் மாறினாலும் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.
//

Thursday, March 09, 2006

17. எங்கே செல்லும் இந்தப் பாதை...

இன்னொரு புதிய பழக்கம்...

இன்னொரு விதமான உண்வுப் பொருள் விரயம்...

இறைவன் இவர்கள் உள்ளத்தில் நல்ல மாற்றங்களை அருளட்டும்.


Friday, February 24, 2006

16. இந்தியாவுக்குத் தேவை - கட்டுமான விஷயங்களும் தான்...

தேர்தல் கமிஷனில் வாக்காளர் அடையாள அட்டைக்குப் போட்டோ எடுக்கிறார்களாம். ஒரு ச்சின்னப் பையன் ஒரு டிஜிட்டல் காமிராவை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் பிலிம் காட்டுகிறான் பாருங்கள்... அவர் பின்னால் 4-5 IAS Officers வேறு.

இப்படி க்குட்டியூண்டு கேமராவை வைத்து போட்டோ எடுத்து.. அதைத் தனியாக data entry செய்தால் எவ்வளவு தவறுகள் வரும்.

இங்க அமெரிக்காவில் ஒரு சாதாரண சின்ன கம்பெனியில் கூட டிஜிட்டல் கேமராவைக் கம்பியூட்டரில் இணைத்து போட்டோவும் டேட்டாவும் ஒரே நேரத்தில் பிடித்து அதையும் ஒருவர் வசதியாக அமர்ந்து செய்ய.. அவ்வளவு ஒன்றும் செலவாகாது..
நம்மளையெல்லாம் கேட்டால் செஞ்சுத் தரமாட்டோமா...?
இவ்வளவு பொறுப்பான அதிகாரிங்களெல்லாம் இருக்காங்க..
ஏன் நம்மளை மாதிரி அக்கறை கொண்ட இந்திய இளைஞர்களின் உதவியெல்லாம் பெற்றுக்கொள்ள ஒரு முனைப்பும் காட்ட மாட்டேங்கறாங்க..

இந்த்ப் பையன் இந்தக் கேமராவை வெச்சு எல்லோரையும் என்னிக்குப் போட்டோ புடிச்சு.. எப்பத் தப்பும் தவறுமில்லாத வாக்காளர் லிஸ்ட் தயாரிச்சு.. என்னிக்குத் தேர்தல் நடத்தி..

ஹூம்ம்ம்ம்ம்ம்ம்

15. ச்சின்ன வயசில நான் எப்படி இருந்திருக்கேன்..!



இந்தப் பழையப் பெட்டியைத் துழாவுவது என்றாலே ஒரு தனி சந்தோஷம் தான்..
பெட்டியைக் குடைந்தபோது இந்த பழைய ஹால் டிக்கெட் போட்டோவுடன் கிடைத்தது..
1987-ல் GATE (Graduate Aptitude Test in Engineering) தேர்வு எழுத விண்ணப்பித்தது. சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டி தான் தேர்வு மையம். M.Sc Maths படித்து முடித்து... GATE எழுதி IIT Kharagpurல் M.Tech (Computer Science) படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்து அது ஆயிற்று 18 வருடங்கள்...
முடியைக் கொடுத்து அனுபவம் பெற்றாயிற்று..

இந்த முடிக்காகத்தான்.. வெட்டவேண்டுமேயென்று NCC-யில் சேர மறுத்தேன். இப்ப தோணுது.. NCC யில் சேர்ந்திருக்கலாமோ-யென்று...

14. நட்புன்னா.. இது தான்யா.. இதேதான்யா


நட்புக்கு இது இன்னொரு இலக்கணம். என் மகள் சூப்பர் டூப்பரின் இன்னொரு கதை.. (வாரம் ஒரு கதை தான் .. பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பில் எழுத வேண்டும்).. சுடச்சுட.. நேற்று இரவு எழுதியது...

There were four dogs. Their names were Dale, Dill, Phil and Lil. They were friends.

One day Dale got sick.

Dale Asked Phil, "Can you buy some medicine, so I can get better before I enter the dog show?"

Phil said, "Okay."

So Phil went to CVS. He barked until the shopkeeper said, "OK. I'll give you some medicine." and she gave it to Phile.

Phil took the medicine to Dale in his dog house where everybody was standing around him.

Dale took the medicine and felt better. Lil and Dill felt happy. When Dale was better they all celebrated.

The next day Dale won first place.

Dale said, "Thank you Phil."

Phil said, "You're welcome. That's what friends are for."

Afterwards Dale put his medal with other medals.

இப்படித்தான் இருக்க வேண்டும் நட்பென்பது.

"கேட்டினும் உண்டோர் உறுது கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்"

தொடர்ந்து என் மகள் எழுதும் கதைகளைப் படித்து பின்னூட்டமும் வாழ்த்துகளும், தனிமடல்களும் இடும் என் நட்பு வட்டத்திற்கு நன்றிகள்.

ஒவ்வொரு பின்னூட்டமும் அவளுக்குப் படித்துக் காட்டப்படுகிறது..அவளுக்கு மிக்க மகிழ்ச்சி.இப்பொழுதெல்லாம் கதை எழுதத் தொடங்கும் போதே நிறைய சிந்திக்கத் தொடங்குகிறாள். எல்லாம் நட்பு நெஞ்சங்களின் ஊக்கமும் ஒரு பெரிய காரணம்..

குறிப்பாக வலைபதிவர் ஷண்முகியின் வாழ்த்துகள் அவளுக்கு மிகப்பெரிய சந்தோஷம். தன் பெயருடைய ஒருவரே வந்து வாழ்த்தியது அவளுக்கு மகிழ்ச்சி.

எனக்கு எங்கள் ஊர் வாசன் பிள்ளை இப்படியொரு நண்பர்.. இது போல் என் மகளுக்கு ஒரு ஷண்முகியக்கா...

Tuesday, February 21, 2006

13. நிச்சயம் படிக்க வேண்டிய ஒரு ச்சின்னஞ்சிறுகதை...

படத்தில் இருப்பவை இரண்டு குருவிகள். ஒன்றின் அலகில் நான்கு பலூன்கள் கட்டப்பட்டுள்ளன... இந்தப் படத்துக்கு ஒரு கதை எழுதவேண்டும்.
இவ்வலவு அருமையான கதை என் மகள் எழுதுவாள் என்பது எனக்கே ஆச்சரியமான விஷயம் தான்...

இனி கதை இங்கே.

There once was two birds. Their names were Mike and Sally.
Sally said to Mike, "Let's go to a Carnival".
They agreed.
Soon, they were at the carnival.
"There's a clown with balloons!", exclaimed Sally.
"Let's get some", said Mike.
When Mike got back with the balloons, the balloons carried him into the sky.
"Help Sally", Mike yelled.
Sally went up and popped the balloons.
Mike began to fall.
"Use your wings and fly" said Sally.
Mike and Sally flew and landed perfectly.
Then they enjoyed the Carnival rides.

---THE END---

ஆஹா.. எவ்வளவு பெரிய சுயமுன்னேற்றத் தத்துவம்..."Use your wings and fly..". ஹனுமானுக்கு, ஜாம்பவான் சொன்ன தத்துவமல்லவா இது...இதுக்கு மேல நான் சொன்னா.. என் மகளை நானே அதிகம் புகழ்வது மாதிரி ஆகிவிடும்.




Sunday, February 19, 2006

12. உங்க கிட்ட பணம் கொடுத்தா... என்ன செய்வீங்க...?

நாமெல்லாம் ஓரளவுக்குப் படிச்சவங்க தானே...
சரி. உங்க கிட்ட யாரோ ஒரு நண்பர் வந்து..."ஏலே.. குப்புசாமி..இந்தா ஒரு ஐயாயிரம் ரூபா பணம் கொஞ்சம் இருக்கு.. வெச்சுக்கோ... அப்புறம் நான் கேக்கும்போது மறக்காமல் திருப்பிக் கொடு.." ன்னு பணம் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?
வாங்கி வெச்சுப்போம் தானே? எங்க..? நம்ம பர்ஸுல தானே..
ஏன் கொடுக்கிறார்.. ஏதோ ஒரு காரணம்.. நம்மகிட்ட இருந்தா ஒர் பத்திரமா இருக்கும்-னு தானே..

என்னை மாதிரி கொஞ்சம் முன் ஜாக்கிரதையுள்ள ஆளுங்க.."அண்ணே.. கொடுக்கிறதப் பத்தியும் ப்ரச்சினையில்லை... திருப்பிக் கேக்குறதப் பத்தியும் ப்ரச்சினையில்லை.. நான் கொஞ்சம் செலவாளி... சமயத்தில் செலவ்ழிஞ்சுரும்... கேக்கிறதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு நாள் டயம் கொடுங்க... எடுத்து ரெடியா வெச்சிருக்கேன்.." சொல்லுவோம்... தப்பில்லை...
'சமயத்தில் என்ன செலவழியறது.... உடனே அடைக்க வேண்டிய கடன்களை அடைப்போம் தானே...

எதுவுமே தப்பில்லை...
சரி கொடுத்த அன்பரே.. ஒரு நாள் ராத்திரி 11 மணிக்கு கதவைத் தட்டி.."குப்புசாமீ..அந்தப் பணம்.. உடனே..தேவைப் படுது..அவசரமா..கம்பன் எக்ஸ்ப்ரஸ்..ல ஊருக்குப் போறேன்" -னு சொல்றாருன்னு வெச்சுக்கோங்களேன்...
என்ன சொல்வோம்...
"என்ன்ய்...யா.. இது... இப்படிப் பண்றே....கொஞ்சம் முன்னாடி சொல்லப் ப்டாதா...? நாளைக்கு பாங்க் லீவு ஆச்சே....இப்படிப் படுத்தறே..." சலிச்சுக்குவோமா..இல்லியா..?

இன்னும் கொஞ்சம்.. கூடுதலா.."உன்னையெல்லாம்..யாருய்யா..எங்கிட்ட கொடுக்கச் சொன்னது..? நான்...கேட்டேனா உன்னை..? "

சமயத்தில் வீட்டுக்குள்ளிருந்து மனைவியின் எரிச்ச்லும் சேருமில்லயா..? "இதுக்குத் தான் வாங்காதீங்க.. இது வேலீல போற ஓணானை..மடீல விட்டுக்கற கதை...ன்னு சொன்னேன்.. " அந்தப் பணத்தில் பட்டுப்புடவையோ.. அல்லது வீட்டுச்சாமானோ.. வாங்கிக்கிட்ட மனைவியும் ..சொல்வாங்க தானே..

கொடுக்க முடியாதுன்னு இல்லை... நம்மளை பழி சொல்லிடக்கூடாதுன்னு.. ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி... அவ்வளவுதான்...

1996-ல் எனக்கு இது போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டது...

மயிலாடுதுறையில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருந்தேன்.. கொஞ்சம் பெரிய வீடு... 2 க்ரெள்ண்ட் நிலம்.. அதில் நடுநாயகமாக 2400 சதுர அடியில் வீடு..சுற்றிலும் தோட்டம்.. பெரிய காம்பவுண்ட் சுவருடன்... பெரியதாக....

உடனே குடிபுகும் எண்ணம் இல்லையாதலால்... வீட்டைஒருவருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கும் விட்டாயிற்று...

வீட்டு வாடகையை.. எப்படி.. பெறுவது...? அதற்கும் ஒரு தேவையில்லாவிடினும்... அதை ஒரு நண்பரிடம்.. (நீண்ட நாள் நண்பரெல்லாம் இல்லை.. சமீபத்திய அறிமுகம் தான்.. ஆனாலும் நேர்மையானவரென்று பட்டது.... ) சரி வாடகையை...மூர்த்தி சாரிடம் கொடுத்துடுங்க என்று.. சொல்லிவிட்டேன்...அவரும் நான் வாங்கி வைத்திருக்கிறேன்.. என்று உத்திரவாதம் தந்துவிட்டார்...

பணத்துக்கென்று உடனடி தேவையொன்றுமில்லை... நானும் அமெரிக்கா வந்துவிட்டேன்..வாழ்க்கை வழக்கமான பாதையில்...

15 மாதம் கழித்து..திரும்பி மயிலாடுதுறை சென்றேன்.... எல்லோரையும் பார்த்து விட்டு....வீட்டையும் போய்ப் பார்த்துவிட்டு.. குடியிருந்தவரிடம்.. 'என்னங்க.. வீடு நல்லாருக்கிறதா...' என்று சம்பிரதாயமாக விசாரித்தேன்..
'எல்லாம் வசதியாக இருக்கு... மாசாமாசம் வாடகையை மூர்த்தி சார் கிட்ட கொடுத்துக்கிட்டு வர்றோம்..வாங்கிகிட்டீங்க்ளா..?" -ன்னு கேட்டார்..

'இல்லங்க.... இன்னும் சாரைப் பார்க்கல.. பார்த்து வாங்கிக்கிறேன்... ஒண்ணும் ப்ரச்சினையில்லை..."

அன்றுதான் ..விமானத்தில் வந்திருந்ததால்.. ஜெட் லாக் வேறு.. தூக்கம் வேறு வரவில்லை..யாரைப் பார்க்கலாம்.. பொழுது போகும் என்று டி.வி.எஸ்..50 எடுத்துச் சுற்றிக் கொண்டிருக்கும் போது.. மூர்த்தி சார்.. பார்த்து விட்டார்...
"எப்ப வந்தீங்க தம்பி...வாங்களேன்..வீட்டுக்கு.."
பிடிவாதமாக..வீட்டுக்குள்..அழைத்துப் போய்விட்டார்...
எல்லா நலன்களும் விசாரித்த பிறகு... வீட்டு வாடகையைப் பற்றிப் பேச்சு வந்தது..
"அதெல்லாம் ஒண்ணும் அவசரத் தேவையில்லை..ஸார்.. உங்களால் முடிஞ்ச போது குடுங்க... நான் ஒரு மாசம் இங்கதான் இருக்கப் போறேன்.."

"இல்ல தம்பி... டிக்கெட் எல்லாம்.. எடுத்து வந்திருப்பீங்க.. இங்கேயும் உங்களுக்குப் பணம் தேவைப்படலாம்...வாங்கிக்குங்க...நீங்க வர்றீங்க ன்னு கேள்விப் பட்டு பேங்க் லாக்கரிலேருந்து எடுத்து வெச்சேன்..."

உள்ளே.. திரும்பி.. மனைவியிடம்.."தரணீ.. தம்பி பையை எடுத்து வா..."

உள்ளிருந்து ஒரு மஞ்சள் கலர் சங்கம் சில்க் ஹவுஸ் பை வந்தது..
'புடிங்க் தம்பி.. உங்க வாடகைப்பணம்.."

உள்ளே திறந்து பார்த்தேன்... ஒவ்வொரு மாத வாடகையும் ..குடித்தனக்காரர் தந்தது.. தனித்தனியாக.. ரப்பர் பேண்ட் போடப்பட்டிருந்தது....
அதில்..எந்த மாதத்திற்கான வாடகை.. எந்த்த் தேதியில் தந்திருந்தார்.. என்ற குறிப்பும்.. எழுதிய பேப்பர் துண்டு ஒவ்வொரு ரப்பர் பேண்டிலும் செருகியிருந்தது....

ஆச்சரியமாக இருந்தது....

"ஏன் சார்.. இதை நீங்கள்.. உங்க தேவைகளுக்குப் பயன் படுத்தியிருக்கலாமே... நான் ஒண்ணும் சொல்லியிருக்கமாட்டேனே..?"

"நமக்கு எதுக்குத் தம்பி உங்க பணம்....ஆண்டவன் நமக்கு நெறயக் கொடுத்திருக்கான்....பத்திரமா... கொடுக்கணுமேன்னு தான் பேங்க்ல...லாக்கர் ல வெச்சிருந்தேன்...."

இந்த மாதிரி ஒரு இருபது பைகள்.. அவர் லாக்கரில் எப்பொழுதும் இருக்கிறது.. சமயங்களில்.. . கூடவும்.. இருக்கும்.. எல்லாம்.. மற்றவர் பணம்... அவர் அதைத் தொடுவதில்லை.... எடுத்து தன் பேங்க் அக்கவுண்டிலும்போடுவதில்லை...

வாங்கி வைத்திருந்தால்.. எப்ப கேட்டாலும் கிடைக்கும்.. நீங்கள் கொடுத்த அதே நோட்டு.... அதே நம்பர்களுடன்...

இதைப் போல் நிறைய அதிசயங்க்ள் அவரிடம் உண்டு....
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் பட்டதில்லை... ஏதாவது கேட்டால்..
"ஆண்டவன் நமக்கு..நெறய கொடுத்திருக்கான் தம்பி...."

சபலமேயிருந்ததில்லை.. அவரிடம்....

இத்தனைக்கும் அவர் .. குடும்பச் சூழ்நிலைகளால்.. அதிகம் படித்ததில்லை.... ..

Saturday, February 18, 2006

11.. அம்மா... உனக்கு இப்ப த்ருப்தியா.. சொல்லு,,,,

அம்மா....
அக்கா தங்கையுடன் சேர்ந்து மூன்று குழ்ந்தைகள். எப்பொழுதும் அம்மா கூடவே இருந்துதான் படித்தோம். அப்பா வேலையாக டில்லியில்..
வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் வருவார்..
மற்றப்டி படிக்கும் காலத்தில் எப்போதும் அம்மா.. அம்மா.. அம்மாதான்..

ஒரே பையன்.. அம்மா செல்லம் வேறு.. தட்டில் சாதம் போட்டு... கையில் விடும் அதிகப்படியான நெய்யில் .. நான் அம்மா செல்லம் என்று எனக்குத் தெரியும்..

"படிச்சு...முடிச்சு.. வேலைக்குப் போயி எனக்கு என் பையன் பட்டுப் புடவை வாங்கித் தருவான்.,.", அம்மா பெருமிதம் எப்பொழுதும் 1970களில்..
பட்டுப்புடவை.. பட்டுப்புடவை.. இது தான் அம்மாவின் கனவுகள் அப்பொழுது..





1990 களில் வீட்டில் வசதி வந்துவிட்டது... நான் சவுதி போய் சம்பாதிக்க் ஆரம்பித்து விட்டேன்.. பணவசதி சொல்லிக்கொள்ளும் படி இல்லையென்றாலும்... பஞ்சமில்லை.. ஆண்டவன் அருள்..

1991 -ல் ஒரு நாள்.. திடீரென்று.. அம்மா சொல்லிவிட்டாள்.. "நான் இனிமேல் நிதப்படிக்கு பட்டுப்புடவை தான் கட்டிக்கப் போறேன்.." தினமும் பட்டுப்புடவை.... தினமும்.. தண்ணீரில் துவைத்து ..பிழிந்து .. காயவைத்து...
பக்கத்து வீட்டுப் பெண்களின்... "பையன் வாங்கித்தரான்னு.. அந்த்ப் பட்டுப் புடவையை எப்படிப் படுத்தறா பாரு மாமி.. ட்ரை க்ளீன் பண்ணி .. அயன் பண்ணி கட்டிக்கக் கூடாதா.."... அம்மாவுக்கு அதெல்லாம் பத்திக் கவலையில்லை..... எப்போதும் போல சாதா அம்மா தான்...ஓரு கனவு நிறைவேறிய த்ருப்தி....

தொண்ணூறு இறுதியில்.. "எனக்கு பவுனில் வளையல் வாங்கிக் கொடுடா..சீனா.." கேட்டுக் கொண்டிருந்தாள்.. அம்மா.... 'நம்ம அம்மா தானே..' அப்புறம் செய்யலாம்னு.. ஒரு உரிமை கலந்த அலட்சியம்... கொஞ்சம் கண்டு கொள்ளவில்லை.....

கையில் நிறைய வளையல் போட்டிருந்து.. மயிலாடுதுறையில் தனியாக இருக்கும் போது யாராவது வந்து அம்மாவை அடித்துப் போட்டுவிட்டு எடுத்துப் போய்விட்டால்.... வளையல்போகட்டும்....அம்மாவுக்கு ஏதாவது...ஆயிடுச்சுன்னா.." என்ற ஜாக்கிரதை உணர்ச்சியும் ஒரு புறம்..

எங்களுக்கு முதல் குழந்தை பெண்மகவு (நம்ம சூப்பர் ..டூப்பர் தான்...) பிறந்த போது...நான் பிரசவ அறைக்குள்தான் இருந்தேன்.. மனைவி படும் துயரம் பார்த்டு.. அம்மாவும் என்னைப் பெற்றெடுக்க இவ்வளவு கஷ்டம் பட்டிருப்பாதானே.. என்று உடலெல்லாம் பதறியது..

மனைவிக்காவது.. அமெரிக்காவில் உள்ள பெரிய மருத்துவமனை..... நான்.. ஏதோவொரு வீட்டு நடுக்கூடத்தில் தான் பிறந்தேன்.. அப்பொழுதெல்லாம்.. பெயின் கில்லர்கள் கூடக் கிடையாது...'பொறக்கும் போதே.. உனக்குத் தலை கொஞ்சம் பெரிசுரா.... நீ ஒரு மண்டை பெருத்த மகாதேவன்...டா.." அம்மா சொல்வதுண்டு...

"என்னைப் பெக்க இவ்வளவு கஷ்டம் பட்டிருக்கியாம்மா.. " என் நெஞ்சு விம்மியது... உடனே..நகைக் கடைக்குப் போய்.. 1 டஜன் வளையல்கள் அம்மாவிற்கு... 24 பவுன்..அம்மாவிற்குக் கொடுத்தவுடன்.. பெருமை பிடிபடவில்லை.. அம்மாவிற்கு.... இதை இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாம்..


கடைசி நாட்களில்.. அம்மாவிற்கென்று தேவைகள் அதிகம் இருக்கவில்லை...

அம்மா கையால் நிறைய தான தருமங்கள் செய்ய வைத்தாகிவிட்டது.. அப்பாவுடன் தனியாக இருக்க ஆரம்பித்ததால்... அம்மாவுக்கு நிறைய நேரம் மிச்சப்பட்டது.. 'வாயில்லா ஜீவன்கள்.. " என்று பசுமாடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்ள்... வீட்டில் பசுக்கள் கிடையாது.. தெருவில் வரும் பசுக்கள் தான்.. அவைகளிடம் நிறையப் பேசுவாள்... அகத்திக்கீரை கட்டு கட்டாகக் கொடுப்பாள்.. வாசலில்வரும் ஆடு மாடுகளுக்கெனெ.. ஏதாவது எப்பொழுதும் சாப்பிட வைத்திருப்பாள்.. வாசலில் வரும் பசுக்களும்.. அம்மாவுக்காக வாசல் கேட்டில்.. நின்று கொண்டிருக்கும்...

அம்மா காலமாகி வீட்டில் காரியம் நடந்து கொண்டிருக்கும் போது... அம்மா அன்பு வைத்திருந்த எல்லா ஜீவன்களும்.. வாசலில் வந்திருந்தன.. அம்மாவைக் காட்டுக்குக் கொண்டு செல்லும் போது.. ஒரு பசுமாடு....பின்னாடியே.. ரொம்ப தூரம் வந்தது..... கண்ணில் ஒரு ஏக்கம் தெரிந்தது...கலங்கியேப் போய்விட்டேன்..

வீட்டுப் பக்கத்தில் வதான்யேஸ்வரர் கோயிலில் ஏழெட்டுப் பசுக்கள் உண்டு.. பக்தர்கள் கோவிலுக்கு நேர்ந்துவிட்டவை...அவை தரும் பாலில் கோவிலில் அபிஷேகம் நடக்கும்.. அவைகளுக்குக்கென்று கோவில் ப்ரகாரத்தில் நிழல் த்ரும் இட்மோ.. ப்ராமரிக்கக் கட்டுமானங்களோ இன்னும் வந்திருக்க்கவில்லை..

சென்ற நவம்பர் 7, 2005ல்.. அம்மா நினைவு நாளில்.. அம்மா பெயரில்.. கோவிலில் ஒரு பசுமடம் (கோசாலை) கட்டி.. அப்பா கையால்.. திறந்து வைத்தேன்.. பத்து முதல் பதினைந்து பசுக்கள் தாராளமாகக் கட்டலாம்.. அவை நீரருந்த தண்ணீர்த்தொட்டி.. தண்ணீர்த்தொட்டிக்கு நீர் பிடிக்க மோட்டார் வசதிகள்.... பசுக்களைக் குளிப்பாட்ட வசதிகள்....பராமரிப்புச் செலவுகளுக்கு மாதாமாதம் பண வசதி...பக்தர்களுக்கு பசுவின் பெருமை தெரிய முகப்பில் காமதேனு ஓவியம்...பக்தர்கள் வந்து பசுக்களுக்கு கீரை கொடுத்து தொட்டுச் செல்ல வசதிகள்..

கோவிலுக்கு வரும் பக்தர்கள்.. பசுக்களுக்கு அகத்திக்கீரை வாங்கித்தர வசதியாக்... வாசலில் அர்ச்ச்னை தட்டு விக்கும் பாட்டியிடம் தனியாக பணம் தந்து.."பாட்டி.. எப்பவும் ஒரு 25 கட்டு அகத்திக்கீரை கட்டு வெச்சிருக்கணும்..இந்த பணத்தை வெச்சி முதல்ல வாங்கிப்போடு.." என்று சொல்லி வைத்தோம்...

எல்லாம் பார்த்துப் பார்த்து.. என் அருமை அண்ணன் (என் உடன் பிறக்காவிட்டாலும்... எங்கள் வீட்டுத் தலைமகன்... நான் தெயவத்துக்குச் சம்மாக மதிக்கும் ஒரு அதிசயப் பிறவி.. இவரைப்பற்றி நிறைய எழுதணும்..) ..ஆலோசனையில்.. எல்லாம் பாத்து..ப்பாத்து.. செய்திருக்கிறோம்..

அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.. அம்மாவுக்குப் பிடித்த ஒரு விஷய்ம்...

எல்லாப் பசுக்களும் ஒரு வகையில் அம்மா தான்...


அம்மா.. நீ வந்து பாத்தியா..? உனக்குத் த்ருப்திதானே.....

இது முடிவல்ல இன்னொரு ஆரம்பம் தான்... உன் தயவில்.. உன் அருளில்.. அண்ணனும்.. அப்பாவும்.. நம் குடும்பமும் அருகிருக்க.. இன்னும் நிறைய செய்வோம்.... எல்லோருக்கும் செய்வோம்...

Thursday, February 16, 2006

நண்பனே.. எனது உயிர் நண்பனே

10. நண்பனே.. எனது உயிர் நண்பனே - சூப்பர் டூப்பரின் இரண்டாவது கதை



என் மகள் a.k.a சூப்பர் டூப்பரின் இரண்டாவது கதை. இந்தப் படத்தில் இரண்டு கோழிகள் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து கோழி மொழியில் பேசிக் கொண்டிருக்கின்றன்.. ஒரு கோழியின் பெயர் டீனா...இன்னொன்று டயானா...சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.. ஆம் அமெரிக்க வெள்ளைக் கோழிகள்..அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கின்றன்? தொடர்ந்து படியுங்கள்.. கோழிகளுக்குத் தமிழ் தெரியாத்தால்....கதை...ஆங்கிலத்தில்..

There were two friends.
They were hens and lived on Kevin's farm.

Their names were Tina and Diana.
Diana said to Tina, "let's escape from the farm".

Tina said, "OK... let's leave"
The next morning the hens left. On their way, they found a cottage.They found blankets and sofas.They found other stuff too.

They sat in the couches in front of the fireplace with blankets.

They discovered they didnt have wood to light fire in the fire place.
So they went to the woods.

There they found out there wasnt an axe to chop wood.

So Tina used her sharp beek and made an ax out of wood.
After they chopped wood and came back,

Tina said "Its CLUCK.. I mean warm in here".

They both laughed and went to sleep on the couches in the little cottage.

THE END


எப்படி இருக்கு இந்தக் கதை...

Sunday, February 12, 2006

09. படம் பார்த்து கதை சொல்லு...



மேலே உள்ள படம் புரிகிறதா? நான்கு எறும்புகள் உணவை எடுத்துக்கொண்டு வரிசையாகச் செல்கின்றன். என் மகள் (இரண்டாம் வகுப்பு) வகுப்பில் இந்தப் படத்திற்கு ஒரு கதை எழுதச் சொல்லியிருந்தார்கள்..
கதைக்கு முன்... இது அவளது சொந்தக் கற்பனை. நாங்கள் யாரும் அவள் கற்பனைக்கு உதவவில்லை...
அந்த எறும்புகளுக்கு.. சில்வியா, ப்ரியன்னா, ஜாஷ், சாம் என்று பெயர் வைத்துள்ளார்.. நல்ல இந்தியப் பெயர்களாக.. கவிதா, வினிதா, குமுதா, நர்மதா என்று வைத்திருக்கலாம்.. பரவாயில்லை...
அவள் வகுப்பிலேயே..அவள் கதை மட்டும் தான் எல்லோருக்கும் படிக்கப் பட்டு..."க்ரேட்.. சூப்பர் டூப்பர்.." என்று குறிக்கப் பட்டுள்ளது...

இப்பொழுது கதை ஆங்கிலத்தில்....

There was once a batch of ants. Their names are Silvia, Brenna, Josh and Sam.

Silvia said "Let's hunt for food".
So they went hunting for food. Soon they reached a zoo.

There they saw a cockroach named Simba.
Simba was guarding a pile of acorns. The ants said they wanted some acorns

Simba said "You need a magic word for taking the acorns".
So they went to Mario, Simba's friend. They asked him the magic word.

Mario said, "The magic word is Abracadabracazzoo".
"Thanks", said Brenna.
The ants went back to the zoo.
They said, "We know the magic words. They are Abracadabracazzoo.."
said Brenna.
Simba said,"Take as many acorns as you want."
The ants took some and went home.
The ants went home and had a party

THE END

எப்படி இந்தக் கதை...
அடுத்த SuperDuper கதை இன்னும் சில நாட்களில்...

Tuesday, February 07, 2006

தேர்தலில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் !!

இன்றைய தினமலரிலிருந்து....

தேர்தலில் போட்டியிட தியாகிகள் சங்கம் முடிவு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட நெல்லை மாவட்ட தியாகிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த தொகுதிகளில் தியாகிகள் சங்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காம் தியாகிகள் சங்க கூட்டம், சங்கத் தலைவர் முன்னாள் கலெக்டர் லட்சுமிகாந்தன் பாரதி தலைமையில் வரும் 11 ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தென்காசி மலர் ஐ.டி.ஐயில் கூடுகிறது. தியாகிகள் சங்க உறுப்பினர்களும், மற்றும் காந்தீயவாதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.



யாருக்காவது இந்த சங்க உறுப்பினர்களைத் தெரியுமா? என் குடும்பத்தினர் சார்பாக, அவர்களின் தேர்தல் செலவுகளுக்கு, என்னாலியன்ற நிதியுதவி செய்ய ஆசைப்படுகின்றேன்... அவர்களை அறிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லவும்.

நல்லவர்கள் நோக்கம் நிறைவேற ஆண்டவனை வேண்டுவோம்.

Sunday, January 22, 2006

7. ச்சின்னஞ்சிறு கதை - எங்கேயோ படித்தது

இது எங்கேயோ படித்த ஒரு துணுக்கு. நினைவிலிருந்து எழுதுவது. எங்கேயென்று நினைவில்லை.


ஒரு வகுப்பில் ஒரு போட்டி நடந்தது. மாணவர்கள் ஆளுக்கு ஒரு சிறுகதை எழுதவேண்டும். கதைக்கான கரு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும் சில விதிகள்..

1. கதை ஒரு அரச பரம்பரை கதையாக இருந்தால் நலம்.
2. குடும்பம் சம்பந்தமாகவும் இருக்கவேண்டும்.
3. அதில் காதல் இருப்பது உத்தமம்
4. கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும்.
5. கதை ரொம்ப பெரியதாக்க இருக்கக் கூடாது. ச்சின்னதாக இருப்பது நலம்.

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற ரொம்பச் சின்னஞ்சிறுகதை.

கதையின் தலைப்பு: மகத நாட்டு இளவரசி

"

இளவரசியார் கர்ப்பமாக இருக்கிறாராம். யாரந்தக் காதலன்?


"

என் கேள்விக்கு என்ன பதில்?

இதுவும் என் மகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் தான்.

இங்கு அமெரிக்காவிலிருக்கும் சராசரி இந்திய கம்ப்யூட்டர் கன்சல்டண்ட் குடும்பச் சூழல் தான் நமக்கும். நான்.. என் அலுவலகம் உண்டு.. வேலையுண்டு.. வீடு உண்டு என்று இருக்கும் சராசரி இந்தியக் குடிமகன் தான்.
ஆண்டவன் அருளில் எனக்கு அமைந்த மனைவிதான் குடும்ப மற்றும், குழந்தைகளின் தேவைகளையும் என் தேவைகளையும் கவனிப்பது எல்லாம். ஒரு எவர்சில்வர் தட்டில் சாம்பார் சாதமோ, ரசம் சாதமோ, தயிர் சாதமோ பிசைந்து போட்டு, காய்கறிகள் போட்டு, ஒரு ஸ்பூனும் போட்டு, தட்டு விளிம்பை துடைத்து (இல்லாட்டி ஐயாவுக்கு கோபம் வந்திரும் இல்ல!!) கொண்டு வந்து கையில் கொடுப்பது வரை.. எல்லாம் நமக்கு நடக்கும் (யாரும் கண்ணு கிண்ணு போட்டுடாதீங்கப்பா... பெண்ணியவாதிகள் யாரும் நான் ஆபீஸ் போகும் வழியில் கருப்புக் கொடி காட்டிடாதீங்க...!)
வீட்டுக்குத் தேவையான பால், தயிர், காய்கறி எல்லாம் வாங்கி வருவதும், வாரயிறுதியில் யார் வீட்டில் பார்ட்டி என்பதை நினைவு வைத்திருந்து சொல்வதும் மனைவிதான் (டுபுக்கு பாணியில் சொல்வதானால் தங்கமணி தான்.. என் பாணியில் சொன்னால் ரப்ரி தேவி)

குழந்தைகளைப் பொறுத்தவரை எல்லாமும் அம்மாதான். காலையில் அவர்களை எழுப்பி, பள்ளிக்கூடத்துக்குத் தயார்ப் படுத்தி, அவர்களை பள்ளியில் விட்டு.. மாலை வீட்டுக்கு அழைத்து வருவதும், அவர்களுடன் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்ய வைப்பதும், சாப்பாடு பரிமாறுவதும், அப்புறம் தூங்கப் போகும் போது அவர்களுக்கு கதைகள் சொல்லி, பாட்டுப்பாடித் தூங்க வைப்பதும் எல்லாம் அம்மாதான்.

ஒரு நாளிரவு நானும் பொழுது போகாமல் 'இன்னிக்கு நான் உங்களைத் தூங்க வைக்கிறேன்' என்று சொன்னேன்.

சில சிணுங்கல்கள்.. மற்றும் மனைவியுடனிருந்த சமாதான வார்த்தைகள் 'ஒரு நாள் அப்பாவோடத்தான் தூங்குங்களேன்..' எல்லாம் முடிந்து குழந்தைகளுடன் படுக்கையில் நான்.

இந்தப்பக்கம் ச்சின்னப் பெண் (3 வயது). இந்தப் பக்கம் பெரிய பெண் (7 வயது).. நடுவில் நான்... எனக்குத் தெரிந்த சசின்ன வயசுக் கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன் (அப்பொழுதுதான் உணர்ந்தேன்.. வாழ்க்கையில் ஒரு பெரிய மகிழ்ச்சியை நான் ரொம்ப நாள் கண்டுக் கொள்ளாமலிருந்திருக்கிறேன் என்று...)
என் மகளுடனான உரையாடலில் ஒரு பகுதி.. வழக்கமாக என் கேள்விகள் அல்லது பதில்கள் தமிழில்.. என் மகள் ஆங்கிலத்தில்...

மகள்: அப்பா! நான் ஒண்ணு கேட்டால் கோச்சுக்கக் கூடாது...
நான் :ஏண்டா கண்ணம்மா.. நான் கோச்சுக்க மாட்டேன்.
மகள்: I Love you a lot !! நீ அதனால எல்லாம் கவலைப் படாதே!! ஆனால் எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..
நான்: (கொஞ்சம் தயக்கத்துடன்) தெரிஞ்ச வரையிலும் சொல்றேம்மா.. தெரியாட்டா நாம ரெண்டு பேரும் internet-ல தேடி பதில் கண்டு பிடிக்கலாம்.

மகள்: மறுபடியும் சொல்றேன் I Love you.. தப்பா நெனச்சுக்காதே..
நான்: கவலைப் படாதே.. தப்பா நெனச்சுக்கலை.... I Love you too !!

மகள்: எனக்கு எல்லாமும் அம்மா தான் செய்யறா.. என்னை எழுப்பி விடறதுல இருந்து, ஸ்கூல் போய் வரும் வரை.. தூங்கப் பண்ணுவது வரை.. எல்லாம் அம்மாதான் செய்யறா..
.................Then Why in the world we need Daddies ???

அதற்குப் பிறகு நான் பேசவேயில்லை. ஏழு வயது மகளுக்கு பயாலஜி க்ளாஸ் எடுக்காமல் அவளுக்குப் புரியவைக்க எனக்கு இன்னும் தெரியவில்லை...
என் மகளின் சந்தேகத்தைத் தீர்க்கும் பதில் தருபவருக்கு, மரவண்டு கணேஷிடம் சொல்லி ஒரு நல்ல புத்தகம் பார்சல் செய்யப்படும்.

Monday, January 16, 2006

புதிய கோணங்கள் - 1

அன்பிற்குரிய மனைவியுடனும், ரொம்ப செல்ல மகளுடனும் பாஸ்டனில் வாழ்ந்து வந்த நேரம்.
மகளுக்கு அப்பொழுது வயது நான்கு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் அதிகம் (அளவுக்கு அதிகமான) மற்ற குழந்தைகளுடன் நேரம் செலவிட வழியில்லை.
கூடுமான வரையில் எனது நண்பர்களுக்கெல்லாம் ஒன்று திருமணமாகவில்லை அல்லது ஒரிரண்டு வயதில் பெண் மகவு மட்டுமே உண்டு.
என் மகள் படிக்கும் பள்ளியிலும் (வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே.. அதுவும் மூன்று மணி நேரம்) எல்லோரும் அனேகமாக பெண் குழந்தைகளே !!

பக்கத்து வீட்டில் ஒரு பெங்காலி-மலையாளி குடும்பம் குடி வந்தது. அவர்கள் வீட்டில் ஒரு நான்கு வயது பையன் உண்டு.

என் மனைவிக்கும் இது ஒரு வசதியாக இருந்தது. சில (வெகு சில) நேரங்களில் மகளை அவர்கள் வீட்டுக்கு விளையாட அனுப்புவார்கள்.

ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்திருந்த நேரம். வழக்கமாக ஓடி வந்து கட்டிக் கொள்ளும் மகள் என்னிடம் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தாள். மனைவிக்கும் என்ன விஷயமென்று தெரிந்திருக்க வில்லை.

"மதியம் சாயோக் (பக்கத்து வீட்டுப் பையன் பேர்) வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ஒரு யோசனையாகவே இருக்கிறாள் என்ன வென்று தெரியவில்லை" - மனைவி

என் மகளிடம் என்னவென்று கேட்போமென்று நெருங்கினேன்.
உரையாடல் வழக்கமான பாணியில்.. நான் தமிழில் கேள்விகள், என் மகள் எல்லாக் குழந்தைகள் பாணியில் ஆங்கிலத்தில் பதில். உரையாடல் சுவை கருதி அனைத்தும் தமிழில்...


"என்னடா கண்ணம்மா !!"

"ம்ம்.. ஒண்ணுமில்லப்பா.."

"சும்மா சொல்லு.."

"நான் ஒண்ணு சொல்றேன்.. யார் கிட்டேயும் சொல்ல மாட்டியே"

"சரி"

"அம்மா கிட்ட கூட சொல்லக் கூடாது'

"சரி"

"பின்கி ப்ராமிஸ்"

இரண்டு பேரும் வலது கை சுண்டி விரல் கோர்த்து சத்தியம் செய்து கொண்டோம்.

"இன்னிக்கு சாயோக்கைப் பார்த்தேன் "

"சரி. என்ன சொன்னான்?"

"ட்ரெஸ் இல்லாமல் பார்த்தேன்.."

"அதனால என்ன? அவனும் பேபிதானே"

"இல்ல இது வேற.."

"என்ன? சரியாச் சொல்லு"

"This guy has got A TAIL !!!!!!!!!!!!!!!!!!!!!!"

Wednesday, January 04, 2006

பாலாபிஷேகம்.


ஆஞ்சனேய ஜெயந்திக்கு பாலாபிஷேகம் செய்யும் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனசு என்னவோ கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1008 குடங்கள். ஒரு குடத்துக்கு 4 லிட்டர் பால் என்று கொண்டால் கூட ஏறக்குறைய 4000 லிட்டர் பால். பஞ்சவடி ஆஞ்சனேயருக்கு ஒரு 1008 லிட்டர். எவ்வளவு பால், குழந்தைகளுக்கான ஒரு அத்யாவசியமான உணவுப்பொருள் வீணடிக்கப்பட்டிருக்கிறது?


இந்த நாட்டில் எத்தனைக் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா ஆன்மீக வாதிகளுக்கு கொஞ்சமாவது ஒரு சமுதாயப் பொறுப்பிருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா.
இறைவன் என்றால் என்னவென்றுதான் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
பக்தி என்றால் என்னவென்று உண்மையாகவே இவர்களுக்குத் தெரியவில்லையா.


இதெல்லாம் ஒரு தனி மனிதனின் வழிபாட்டு முறைகள். இதில் தலையிடக்கூடாதென்றெல்லாம் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இது போன்ற மெகா விஷயங்கள் எல்லாமே ஒரு ஈகோ விஷயமாகவே படுகிறது. அரசியல்வாதிகள் தான் ஒரு பக்கம் சமுதாயச் சீரழிவுக்குக் காரணமாகிறார்களென்றால், இப்பொழுது ஆன்மீகவாதிகளும் ஒரு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.


தனிமனிதர்களின் செயல்கள் சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் போது எதிர்த்துக் கேட்பதில் தவறொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் கூட, சில மாதங்களில் வறட்சி என்று அறிவிக்கப்பட்டால், தண்ணீரை அநாவசியமாக்ச் செலவு செய்யக்கூடாது. கார் அலம்புதல், புல்வெளிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற செயல்கள் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகக் கருதப்படும்.
அதுபோல், இந்தியாவில் பிறந்திருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் குடிக்கக் கிடைக்கும் வரை இதுபோல் "மெகா" (கவனிக்க. மெகா மட்டுமே) அபிஷேகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்தத் தடையையும் மக்கள் உளமாற ஏற்று, கோவில்களில் போலீஸ் வந்து அளக்கும் படியில்லாமல் மனசாட்சிப் படி அனுசரிக்க வேண்டும்.

இது போன்ற முரட்டு பக்தர்களை, அந்த ஆஞ்சனேய மகாபிரபு தான் வந்து திருத்த வேண்டும்.

பின் குறிப்பு:
1. தயவு செய்து இதை மாற்று மதத்து கண்ணோட்டங்களுக்கு சென்று, பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். சீமாச்சு யாரிடமும் விலை போகவில்லை. என் மனதில் அந்த ஆஞ்சனேயரே வந்து சொல்லித்தான் இதை எழுதியுள்ளேன்.

2. நான் ஒன்றும் நாத்திகவாதியில்லை. எத்தனை முறை ஆஞ்சனேயர் கோயிலைச் சுற்றியுள்ளேன் என்பது மயிலாடுதுறை திருஇந்தளூர் ஆஞ்சனேயருக்குத் தெரியும்.