Friday, December 18, 2009

88. கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள் !!

நம்ம தம்பி விவசாயி இளா பதிவுல போயி அவரோட ஆணிவேர் என்ற சிறுகதையைப் படிச்சேன். ரொம்ப நல்ல கதை. ஊர் பாசத்தையும் சொந்தங்களின் வலிமையையும் பத்தி அழகா எழுதியிருக்கார்.

அங்கிருந்து இந்த காசாங்காடு ஊரின் வலையகத்துக்குச் செல்ல நேர்ந்தது.. ரொம்பவே அசத்திட்டாங்க. அவங்க ஊரைப் பத்தின எல்லா விஷயங்களும்.. எல்லா விஷயங்களும்னா.. எல்லாமுமே அங்க இருக்கு.. அதுவும் அழகா வகைப்படுத்தி.. என்னமா.. அசத்தியிருக்காங்க..

இப்படியே நம்ம எல்லா கிராமங்களைப் பத்தியும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..

சில பேர் ஆர்வக்கோளாறில (MS உதயமூர்த்தி ஐயா பாணியில் சொல்லணுமா சோடா பாட்டில் உற்சாகம்) ஆரம்பிப்பாங்க. ஆரம்பத்தில இருந்த அந்த சுறுசுறுப்பு அப்புறம் குறைஞ்சுப் போயி அப்புறம் வலைப்பக்கங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது.. அது போல இல்லாமல் 2008 அக்டோபர் மாசத்துலேயிருந்து ஆரம்பிச்சி முந்தாநாள் இறந்து போன நடுத்தெரு செட்டியார் வீட்டு மாசிலாமணி ஐயா வீட்டு செய்தி வரை இணையத்துல எழுதியிருக்காங்க..



படிக்கப் படிக்க ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. அவசியமா காசாங்காடு Global Village (அப்படித்தான் சொல்றாங்க) இணையத்தளத்துக்குப் போயிப் பாருங்க. அவ்வளவு நல்லா இருக்கு.. http://www.kasangadu.com/

ஊரில் உள்ள பள்ளிகள், கோவில்கள், தெருக்கள், அரசு அலுவலகங்கள், திருமண மண்டபம் எல்லாம் போட்டோக்களோட போட்டிருக்காங்க..

ஊராட்சி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களெல்லாம் இருக்கு. போக்குவரத்து வசதிகள், ஊரில் உள்ள வீட்டுப் பெயர்கள் எல்லாம் இருக்கு..

டிசம்பர் மாசம் ஒண்ணாம் தேதி கிராமத்துல ஒரு தெருவுல தண்ணி வராம இருந்து மறுபடியும் சரி பண்ணினாங்களாம்.. அந்த செய்தியும் அங்க இருக்குங்க...


ஊரில் உள்ள தெருக்கள் எல்லாம் அவ்வளவு சுத்தமா இருக்கு... பள்ளிக்கூடங்களெல்லாம் அவ்வளவு அழகா இருக்கு.. இதெல்லாம் பார்க்க ஒரு மகிழ்ச்சிதான்..

ஊருக்குள்ள எவ்வளவு ஒற்றுமையிருந்தால் இவ்வளவும் நடந்திருக்கும் !!

இன்னும் பெரிய ஆச்சரியம் எதிலுமே ஊராட்சித் தலைவர் பெயரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சி பெயரும் இல்லை..

ஊருக்குள்ள அரசியல் கட்சிகளை நுழைய விடாமல் இருந்தால் ஊர் ஒற்றுமையாகவும் இருக்கும் .. ஊரும் நல்ல முன்னேற்றம் அடையும்.



காசாங்காடு கிராம மக்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

உங்களைப் போல நாங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்..

Sunday, November 29, 2009

87. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு


எல்லாரும் அவியல், துவையல், பிரியாணி, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல், என்ற தலைப்புக்களில் கதம்பமாய் எழுதுகிறார்களே..நாமும் எழுதுவோமென்று தேடினால் அப்படி ஒரு தலைப்பு கிடைக்கவேயில்லை.

சென்ற பதிவில் முகமூடியண்ணா வேறு ”எல்லாரும் கைமா கொத்துப் பரோட்டா ஊசிப்போன இட்லி சாம்பார்னு எழுதறாங்க.. நீங்களும் இந்தமாதிரி கலவைப் பதிவுக்கு எம்பளத்தஞ்சி குறிப்புகள் மாதிரி எதுனா - ஒரு மண் வாசனைதான் - பேர் வெக்கலாமே?” அது மாதிரி தலைப்பு வெக்கக் கூடாதாவென்று கேட்டு விட்டார்.. எங்க ஊருப் பக்கம் ரொம்ப ஃபேம்ஸ்-னு பார்க்க்ப் போனா.. கும்பகோணம் வெற்றிலையும் பன்னீர்ப் புகையிலையும் தான்...அதனால் தான் இந்தப் புது வரவு “வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு

oOo

இட்லி வடைக்கே சாம்பாரா?

சமீபத்திய ஒரு இட்லி வடை பதிவில் ”மூன்று - Friday November 27, 2009" பதிவில் “எங்கெங்கு காணிணும் சக்தியடா” என்ற் பாரதியாரின் வரி என்று குறிப்பிட்டிருந்தார்.. அதற்கு பின்னூட்டமிட்ட ஒருவர் (மோகன் தாஸ்) இது பாரதிதாசன் வரி என்று குறிப்பதற்காக.. “இது பாரதிக்குத் தெரியுமா?” என்று கேட்டிருந்தார்..

அதற்குப் பிறகு அதை இட்லிவடையும் கௌரவமாகத் திருத்திவிட்டார்..

நான் கேள்விப்பட்ட வரையில்.. முதன் முதலாக பாரதியாரை, கனக சுப்பு ரத்தினம் (பாரதி தாசனின் இயற்பெயர்) ஒரு திருமண வீட்டில் சந்திக்கிறார். அப்பொழுது சுப்புரத்தினத்தை பாரதியாரிடம் அறிமுகப் படுத்துகிறார்கள்.. அவரும் கவிதையெல்லாம் எழுதுவாரென அறிந்த பாரதி.. ”இப்பொழுது உடனே ஒரு கவிதை எழுதுங்கள்” என்று பணிக்க.. பாரதிதாசனோ “எதைப் பற்றி எழுதுவது என்று ஒரு கணம் தயங்க” அப்பொழுது பாரதியார் எடுத்துக் கொடுத்த வரி தான், “எங்கெங்கு காணினும் சக்தியடா.. தம்பீ ஏழு கடல் அவள் வண்ணமடா” என்பது..

டெக்னிகலாகப் பார்த்தால் அந்த வரி பாரதியார் வரியே தான்.. பாரதியாருக்கு அந்த வரி தெரியும்..

NHM Writer-ல் ப்ரச்சினையா..

இதுக்கு யாராவது ஒரு உதவி சொல்லுங்களேன்.. எல்லாரும் புகழ்ந்ததைப் பார்த்து இ-கலப்பையிலிருந்து NHM Writer க்கு மாறியவன் நான். Alt-2 அடித்து தமிழ் யூனிகோடு Windows Vista வில் NotePad வைத்து டைப்படிக்கிறேன்.. எப்பொழுதெல்லாம் 'ட்' மற்றும் 'த்' அடிக்க நேருகிறதோ அப்பொழுதெல்லாம் cursor எங்காவது போய் உட்கார்ந்து கொண்டுவிடுகிறது.. அதற்கு மேல் அடித்தால் கர்ஸர் வேறு இடத்தில் போய் டைப்படிக்கிறது.. சமயத்தில் shift வேறு அடிப்பதால் பாதிக்கு மேல் முன்னால் டைப்படித்ததன் மேல் அடித்து மேட்டர் காணாமல் போய் விடுகிறது.

ரொம்பப் பாடாய்ப் படுத்துகிறது. எழுதும் வேகம் ரொம்ப குறைந்து விடுகிறது.. ஏற்கெனவே நான் ரொம்ப (!!) வேகமாக தமிழ் டைப்படிப்பவன். இப்பொழுது இது வேறு படுத்துகிறது..

சரி நாம் திரும்பி இ-கலப்பைக்கே போய்விடலாம் என்று போய்ப்பார்த்தால் ஓசியில் கிடைத்த Tavultesoft Keyman இப்பொழுது $19 ஆக்கிவிட்டார்கள்..

தமிழுக்கு சேவை செய்வது இப்பொழுதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியாகிவிட்டது.. ஓசியில் பதிவெழுத முடியாது போலருக்கு..


oOo


சும்மா வந்து குறை மட்டும் சொல்லிப் போகாமல் சமீபத்தில் கேட்ட ஒரு கவிதை..

ஒரு பள்ளி மாணவி எழுதியதாம்.. எனக்குச் சொன்னவருக்கும் மாணவி பெயர் தெரிந்திருக்கவில்லை..அந்த மாணவியின் திறமைக்கு வந்தனங்கள்..

தலைப்பு: பெண்

நாங்களும் பாபர் மசூதிகள் போலத்தான்..
எங்களைக் கட்டுவதற்கு
யாரும் தயாராயில்லை
இடிப்பதற்கு மட்டுமே வருகிறார்கள் !!

oOo oOo oOo


வந்தேமாதரத்தை விற்று விட்டார்கள் போலிருக்கிறது.. பாவம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள்.. அவர்கள் மூச்சுக்காற்றாய் சுவாசித்தது இப்பொழுது ஜப்பான்காரனிடம்.

சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை YouTube-ல் ஏற்றினேன். நான் படித்த மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி பற்றிய ஒரு காணொளி அது. அந்தக் காணொளியைப் பதிவு செய்த வீடியோக்காரர் அதற்குப் பின்னணி இசையாக AR Rahman சமீபத்தில் இசையமைத்த வந்தே மாதரம் பாட்டைப் போட்டிருந்தார். அதைப் பார்த்த YouTube, "Part of the contents of this Video is copyrighted by Sony Entertainment Company, Japan" என்று கடித்துத் துப்பிவிட்டது. நம்ம பள்ளோடத்தையே ஜப்பான் காரன் கிட்டே வித்துட்டாங்களான்னு சந்தேகத்துல ரொம்ப குழம்பி யோசிச்சதுல.. “வந்தே மாதரத்தை” ஏ ஆர் ரஹ்மான் தான் வித்துட்டாராம்..

ஏதோ ஒரு படத்துல இப்படிதான் சென்னையில் LIC கட்டடத்தை விலை பேசி விற்பது போலக் காட்சி வரும்.. இப்போ நெஜம்மாவே வந்தே மாதரம் ஜப்பான்காரன் கையில்.. ச்சும்மாப் பாடக்கூடாது.. “சோனிக்குக் காசு கொடுத்துத்தான் பாடணும்.. ஆமா...”



என்னதான் அவங்க சொல்றது புத்திக்கு உரைத்தாலும்.. வந்தே மாதரம் பாடலின் உரிமை ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருக்கிறது என்று சொல்லும் போது.. ஒரு “மாதிரியாக” இருந்தது.. உங்களுக்கும் அப்படித் தோணினால் சொல்லுங்கள்..

சோனிதான் இப்படின்னா... சோனியாம்மாவும் இப்படியே.. அதேபோன்று தான் இதுவும்..

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் பரிசளித்தார். அது நமது முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய “The Discovery of India" By Oxford University Press of India புத்தகம். அதனுள்ளே பார்த்தபோது அதில் “Copyright: Sonia Gandhi" என்று இருந்தது.

நேரு (1889 - 1964) இறந்து போய் 45 வருடங்களாகிவிட்டன. அவர் நமது நாட்டின் பிரதமராய் வேறு இருந்தவர். இன்னுமா இவரது எழுத்துக்களை நாட்டுடமையாக்காமல் இருக்கிறார்கள்? அது தான் போகட்டும்.. பிரதமர் பதவியையேத் தியாகம் (???) செய்த அம்மணீ சொக்கத் தங்கம் சோனியாவுக்குக் கூடவா நேரு எழுதிய புத்தகங்களுக்கான உரிமையை நாட்டுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ அர்ப்பணிக்க வேண்டுமென்று இன்னும் தோணவில்லையா?

என்னமோப் போங்கள்!!

oOo






ரொம்ப “பழைய” விஷயங்களையேப் பேசி எழுதி வருகிற ஒரு “பழம் பெரும்” பதிவர் ஒருவர் இந்த வாரயிறுதியில் வீட்டுக்கு வந்திருந்தார்.. “வாராத ஐயா வந்திருக்காங்க.. அவருக்கு பழசுதான் புடிக்கும் போலருக்கே...” ந்னு நெனச்சி..நானும் என் மனைவியும் அவர் கண் எதிரிலேயே 20 நிமிடம் தேடி பழைய தமிழ்ப்பட (கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், உத்தமபுத்திரன்)
பாடல்களைக்கொண்ட ஒரு VCD போட்டோம்.. ஐயா முகத்துப் புன்னகைக்காக எங்கள் குடும்பமே அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.. எல்லாரும் மலைச்சிப் போறமாதிரி கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி....

”ஐயா.. ஏதாவது வடிவேலு காமெடி இருக்கா? இருந்தால் போடுங்களேன்.. இது ரொம்ப பழசாயில்லே இருக்கு !!!”


oOo

என் மூன்றாவது பெண் சமீயாவுக்கு (இப்போ 19 மாசம் வயசாகிறது) தமிழும் ஆங்கிலமும் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..

சமீபத்தில் அவள் அழகாக “அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, J, K, L, M, N" என்று சொன்ன போதுதான் நாங்கள் செய்த குழப்பம் புரிந்தது..

குழப்பியது நாங்கள் தான்.. அவளென்னவோ ரொம்ம்ம்ம்ம்ம்பத் தெளிவு..



Saturday, October 31, 2009

86. ஸ்டைலு ஸ்டைலு தான் !!


போன வாரம் மயிலாடுதுறை சென்றிருந்த பொழுது ஒரு தோட்டத்தில் வேலை பார்ப்பவர் குடும்பத்துப் பையனைக் கிளிக்கிய போது..

“எறும்பு கிறும்பு கடிச்சிரும்... ஜட்டியப் போடுறா “ ந்னு நான் சொன்னதை ரொம்ப உன்னிப்பாக் கேட்டுக்கிட்டான்..

oOo

தீபாவளிக்கு மறுநாள் கோவை செண்ட்ரல் தியேட்டரில் இரவுக்காட்சி ஆதவன் பார்க்க சென்றிருந்தேன். தியேட்டர் ஆடிட்டர் மூலமாக வாங்கியதில் 80 ரூபாய் டிக்கெட் எண்பதுக்கே எங்களுக்குக் கிடைத்தது. மற்றவர்களுக்கு எப்படியும் அதிக விலைக்கு விற்றிருப்பார்கள்.. இருந்தாலும் காட்சி “ஹவுஸ்ஃபுல்”.. இருக்கிற விலைவாசியில் எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ


oOo

ஒரு நாள் காலை எழுந்த வுடனேயே ஷாக் !!

காலை 4 மணிக்கு எழுந்த போது பால்காரர் இன்னும் வந்திருக்கவில்லை. அவர் எப்பொழுதும் 5 மணிக்கு மேல் தான் வருவாராம்..

காபி குடிக்கும் ஆசையை அடக்க முடியவில்லையாதலால் என்ன செய்யறது என்ற கேள்விக்கு ..”சட்ட்டையைப் போட்டுக்கிட்டு இப்படியே.. இரட்டைத் தெரு முனை வரைக்கும் போயிட்ட்டு.. அங்க இருக்குற கடையிலே பால் (ஐஸ் பால் தான்) வாங்கிட்டு வந்துரு” என்று யோசனை சொன்னார் அப்பா..

கைலியுடனும் நேத்துக் கழட்டிப் போட்ட சட்டையில் இருபது ரூபாய் (ஒரு லிட்டர் தானே வாங்கப் போறோம் .. இதுவே அதிகம் என்ற நினைப்பில்...) வைத்துக் கொண்டு கடைக்குச் சென்றால்.. அவன் சொன்னது...”அண்ணே ..இப்பல்லாம் பால் லிட்டர் 28 ரூபாய்ணே...”


”அடப்பாவி.. போன தடவை வந்த போது 10 ரூபாயோ.. 12 ரூபாயோ சொன்னியே ராஜா”

“ஆமாண்ணே.. சொன்னேன்.. அது அரை லிட்டர் விலைண்ணே....”

காலை 4:30 மணிக்கு இது எனக்கு பெரீய்ய ஷாக் தான்..

நான் கடைக்கெல்லாம் போயி எதுவும் வாங்குறதில்லை.. அப்படியே வாங்கினாலும் “நீங்க எடுத்துட்டுப் போங்கண்ணே.. நான் அப்புறம் அண்ணன் கிட்டே பணம் வாங்கிக்கிறேன்” என்று அனுப்பி விடுவார்களாதலால் எதுவும் காசு விவரம் கேட்டுக் கொள்வதில்லை.. நமக்குத் தெரிஞ்ச ஒரே விலை வாசி நிலவரம் “கோல்ட் ப்ளேக் கிங்ஸ் ரூ 4.50 மட்டும் தான்” (இதுக்கெல்லாம் போயி அண்ணன் கிட்டே காசு கேக்காதே ராஜா.. நானே தர்றேன்.. வாங்கிக்க என்று சொல்லிக் கொடுத்து விடுவதால்..)


இந்த விலைவாசியிலே மக்களெல்லாம் எப்படித்தான் குடும்பம் நடத்தறாங்களோ...

oOo

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவில் .. நம்ம ஊரிலேயே ஒரு படம் பார்க்கலாமென்று ஊரில் உள்ள ஒரு பிரபல தியேட்டருக்குச் சென்றிருந்தேன். கூட வந்தவர் மயிலாடுதுறையிலேயே உள்ள பிரபல அரசியல் பிரமுகர். ரொம்ப பழக்கமானவராதலால்.. “படம் போட்டிருப்பான்.. பரவாயில்ல வாங்க தம்பி..” என்று அன்புடன் அழைத்துப் போனார்.

படம் ஆரம்பமாகியிருந்தது.. தியேட்டர் கதவுகளும் மூடியிருந்தன... வாசலில் “பேராண்மை” போஸ்டர் ஒட்டியிருந்தது.. மணி எப்படியும் இரவு 10:30 கிட்டே இருக்கும்...

எங்களை ’கேட்’ டருகில் பார்த்தவுடன்... மானேஜர் ரூமிலிருந்து ஆள் வந்து திறந்து விட்டார்..

“டிக்கெட் எல்லாம் ஒண்ணும் வேணாம் சார்.. எங்க வேண்டுமானாலும் போய் உட்கார்ந்து பாருங்க சார்..”

என்றவரை வற்புறுத்தி டிக்கெட்டு கிழிக்கச் சொன்னதுக்கு.. ரொம்ப குறைந்த விலைக்குச் சொல்லி பவ்யமாக வாங்கிக்கொண்டார்..

“படம் வேணும்னா.. ஆரம்பத்துலேருந்து போடச் சொல்லட்டுமா சார்..” என்றவரிடம்,

“அதெல்லாம் வேண்டாம்” என்று அன்பாக மறுத்துவிட்டு..

தியேட்டருக்குள் சென்றால்.. உள்ளே எங்களையும் சேர்த்து மொத்தம் 25 பேர்தான்.

படம் “பேராண்மை” இல்லை என்று புரிந்தாலும் .. இடைவேளையில் பேர் கேட்டுக்கொண்டேன் .. “ஈரம்”. பட்ம் நல்லாருந்தது..


நல்ல படம்.. தியேட்டரில் இன்னும் கூட்டம் வந்திருக்கலாம்.. நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டாமா?

oOo

திரும்பி ஊருக்குப் போகக் கிளம்பி சென்னை வந்த பொழுது.. நெருங்கிய உறவினர் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது.. உறவினர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தவர் முகம் பரிச்சயமாகத் தெரிஞ்சது..

“உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குங்களே...”

“ஆமாம் சார்.. பேரு விஜயசாரதி.. சன் டீவீயிலே நீங்கள் கேட்டவை ந்னு ப்ரொகிராமெல்லாம் பண்றேன் சார்” அப்படீன்னார்..

”அப்படிங்களா.. ரொம்ப சந்தோஷம்.. இப்ப நினைவுக்கு வந்திடிச்சி”

"...."

”நீங்க கூட ஏதோ படத்துல ஹீரோவா நடிச்சீங்க போலருக்கே.. இருங்க பேர் சொல்றேன்” என்று 5 வினாடிகள் யோசிச்சு.. “ஹாங்... பவளகொடி தானுங்களே..”

அப்படீன்னு ஒரு போடு போட்டதில்.. அவரே அசந்திட்டார்...

”எப்படிங்க உங்களுக்கு நான் நடிச்ச படம் தெரிஞ்சுது? அந்தப் படம் ஒண்ணும் பெரிசா ஓடலீங்களே” என்று ஆச்சர்யமாகக் கேட்டவரிடம்..

“ஒண்ணுமில்லீங்க .. அதைத் தயாரிச்சி டைரக்ட் செஞ்ச சரவணன் நமக்கு ரொம்ப நண்பருங்க” என்று சொன்னதில் ஆசுவாசமடைந்து அப்புறம் 30 நிமிடங்கள் நிறைவாகப் பேசிக்கொண்டிருந்தார்..






Wednesday, July 29, 2009

85. நாம இந்த யோசனை சொன்னா விகடன் கேக்குமா?

இந்த மினிஸ்டர் ராஜா கூட பெரிய்ய ரோதனையாப் போச்சி.. அந்த ஆளூ எல்லா ஊழலும பண்ணுவாராம் ஆனால் அதை விகடன் மாதிரி பத்திரிக்கைகள் பிரசுரிக்கக் கூடாதாம்.

நியாயமான ஆளா இருந்தால் ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டையும் நியாயமான முறையில் எதிர்த்து வெளியில வரணும். அப்படியில்லியா, பொது எம்.பி பதவியையே ராஜினாமா பண்ணிட்டு குடும்பத்தோட எங்கியாவது போய் செட்டிலாயிடணும். ரெண்டும் இல்லாமல் கோர்ட்டுக்குப் போயி “என்னக் கிள்ளீட்டான் சார்...” ரேஞ்சுக்குப் போயி தடை வாங்கறது அழுகுணி ஆட்டம். இதெல்லாம் ஒரு delay tactics தான். எப்படியும் தீர்ப்பு வர ஒரு ஆறு மாசமாச்சும் நிச்சயமா ஆகும். அது வரைக்கும் விகடன் வாயைக் கட்டி வெச்ச மாதிரி ஆச்சி. அப்படியே தீர்ப்பு பாதகமா வந்தால் மேல் முறையீடு இருக்கவே இருக்கு... ஒரு 5 வருஷம் இப்படி ஓட்ட முடியாதா என்ன?

இந்த மாதிரி ஊழல் பெருச்சாளிகளை விகடன் தோலுரிப்பதை ஒரு சராசரி பொதுஜனமாக நான் வரவேற்கிறேன்..

இராஜா இப்படி அழுகுணி ஆட்டம் ஆடினால், சட்டத்துக்கும் நீதிக்கும் பங்கம் வராமல் விகடன் அதை எப்ப்டி எதிர் கொண்டு ராஜா பற்றிய ஊழல்களைப் தொடர்ந்து மக்களுக்குத் தருவது? அதுக்குத் தான் இந்த ஐடியா !!





இப்போ குங்குமம் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க அதனுடன் இலவச இணைப்பாக மஞ்சள் பொடி, மசாலாத் தூள், சிந்தால் சோப்பு, நகப் பாலீஷ் போன்ற பொருட்கள் தரவில்லையா? இது போன்று மற்றொரு தயாரிப்பாளர் தயாரிக்கும் பொருட்களை ஒரு பத்திரிக்கை இலவசமாகக் கொடுக்கும் போது அதனால் ஏற்படும் பாதகங்களுக்கு பத்திரிக்கை பொறுப்பேற்காது. ஏனென்றால் அது அவர்கள் தயாரிப்பே இல்லை. மற்றபடி அது இலவசமாகவே கொடுக்கப் பட்டது. அதனால் no liability.

அது போல வேறொரு பதிப்பகம் (இந்தப் பதிப்பகம் தமிழ்நாட்டிலென்ன.. இந்தியாவிலேயே கூட இருக்க வேண்டாம்.. ஏதாவது வெளிநாட்டில் இருக்கலாம். அதனால் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாது )தொடங்கி ராஜாவின் ஊழல்களை அந்த புத்தகத்திலே (ரொம்ப பெரிசு வேண்டாம்.. ஜூவியிலே ஒரு 4 பக்கம் வர்ற மாதிரி ஒரு மினி புத்தகமாகக் கூடப் போடலாம்.. நம்ம கிழக்குப் பதிப்பகம் பத்ரியைக் கேட்டால் நிறைய ஐடியா தருவாரு!!) பிரசுரிச்சி அதை நம்ம ஜூனியர் விகடனுடன் இலவசமாகவே தரலாம்.


அது நம்ம ராஜா வாங்கியிருக்கிற தடைக்கு எதிராக வராது. ஏனென்றால் அந்தப் இலவச இணைப்பு விகடன் பிரசுரமே இல்லை... அது இலவச மசாலாப் பொடி மாதிரிதான்.. அதனுள் இருக்கும் செய்திகளுக்கு விகடன் பொறுப்பாகாது.. சட்டத்தை மதித்த் மாதிரியும் இருக்கும் .. சமுதாயக் கடமை ஆற்றிய மாதிரியும் இருக்கும்...

அதிக பட்சம் அந்த பதிப்பகம் அல்லது புத்தகத்தைத் தடை செய்வாங்க. அதுக்கு ஒரு ஆறு மாசம் ஆகும். நாமளும் சட்டத்தை மதிச்சி வேறு பதிப்பகம் வேறு நாட்டில் தொடங்கி வேற புத்தகம் போட்டு இலவச இணைப்பாத் தந்தாப் போச்சி.. எல்லாம் இராஜா கத்துக் கொடுத்த வழிதான்.. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும் !!


எப்பூடி???

திட்டாதீங்கப்பா !! இந்த திராவிட கட்சிகளோட சேர்ந்து சேர்ந்து நமக்கும் பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி...



பின் குறிப்பு: நம்ம கிட்டே இனிமேல சினேகா போட்டோ தீர்ந்து போச்சி. நம்ம அச்சமுண்டு அச்சமுண்டு டைரக்டர் அருண் வைத்தியநாதன் கிட்டே தான் கேக்கணும் போல இருக்கு.. நாகை சிவா, கோச்சிக்காதீங்க.. இந்தப் பொண்ணும் அசப்புல சினேகா மாதிரி தான் இருக்கு !! அடுத்த பதிவு வர்ற வரையில பொறுத்துக்கோங்க !!!!!

Sunday, July 26, 2009

84. அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்

அண்ணலும் நோக்கினார்..அவளும் நோக்கினாள்” என்ற கம்பரின் வரிக்கு, புலவர் கீரன் (இவர் மயிலாடுதுறைக்காரர் தெரியுமோ?) அவர்கள் தந்த ஒர் அருமையான விளக்கத்தை “இதயம் பேத்துகிறது” வலைப்பதிவில், ஜவஹர் இட்டிருந்தார்.

“அண்ணல் நோக்கினான்;அவளும் நோக்கினாள்” என்று அவளுக்கு மட்டும்தானே உம் போட வேண்டும்? என்ற ஒரு அருமையான கேள்வியை முன் வைக்கிறார். பின்னர் அதற்கு ஒரு விபத்துக் காட்சியை விளக்கிவிட்டு இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால் இரண்டு உம்மைகள் என்ற சொல்கிறார்.

இரண்டு உம் வருகிற இடங்கள் எல்லாமே-தற்செயலாக நிகழ்பவை. அதாவது ஆக்சிடேண்டலாக நிகழ்பவை. ராமனும் சீதையும் திட்டமிட்டு சைட் அடிக்கவில்லை என்பதைக் காட்டவே கம்பர் இரண்டு உம் போட்டார்.

நியாயமான வாதம். கொஞ்சம் சிந்திக்க வேறு செய்தது.

கம்பராமாயணத்தில் நான் ஒன்றும் பெரிய மேதையில்லை. ஆனால் என் தமிழாசிரியர் முனைவர் இராமபத்ராச்சாரியார் அவர்கள் “கம்பன் கவி இசைச்செல்வர்” என்ற விருது வாங்கியவர். கம்பராமாயணத்தைத் தேனொழுகக் கவிபாடிப் பாடம் நடத்துவார். கம்பனின் “இந்த இப்பிறவிக்கு இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன்” என்ற வரிக்கு இரண்டு மணி நேரம் கூட வியாக்கியானம் சொல்வதில் வல்லவர். அவரிடம் படித்த எனக்கு, புலவர் கீரனின் விளக்கம் யோசிக்க வைத்ததில் வியப்பேதுமில்லை.

சொல்லப்போனால், மயிலாடுதுறையில் புலவர் கீரன் இல்லமும் என் தமிழாசிரியர் இல்லமும் அடுத்தடுத்த தெருக்கள் தான். கீரன் இருந்தது திருஇந்தளூர் வடக்கு வீதி, என் தமிழாசிரியர் இருப்பது திருஇந்தளூர் சன்னதித் தெரு.

சரி “அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்” என்ற வரிக்கு வருவோம்.

சாதாரணமாக பெண்கள் ஆண்களை நோக்கிவதில் ஒரு டெக்னிக் இருக்கும். டிஜிட்டல் காமிரா மாதிரி இமைக்கும் நேரத்தில் பார்த்து விடுவார்கள். அந்த ஒரு கணத்திலேயே தான் பார்த்த ஆடவனைப் பற்றிய (தனக்குத் தேவையான) விவரங்களைக் கண்டுவிடுவார்கள். முன்பின் அறியாத ஆடவனிடம் எப்பொழுதும் நேருக்கு நேர் பார்வையைத் தவிர்த்து விடுவார்கள். தான் பார்ப்பதை அந்த ஆடவன் பார்த்துவிட்டால் அடுத்த split second லேயே பார்வையை வேறெங்காவது திருப்பிவிடுவார்கள்.. (எத்தனை தமிழ் சினிமா பார்த்திருப்போம் !!)


அதுவும் சீதை அரசனின் மகள்; சுயம்வரத்துக்குத் தயாராயிருப்பவர். தனியாக மாடத்தில் நின்று கொண்டிருந்திருக்க மாட்டார். அப்பவும் தோழிகள் அருகில் இருந்திருப்பார்கள்.

இராமனும் தனியாக வரவில்லை. முனிவர் விஸ்வாமித்திரருடனும் இளவல் இலக்குவனுடனும் வந்திருக்கிறார். அப்படியிருக்கும் போது இருவரும் மெய்மறந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருக்க
முடியாது. அது எப்படியும் இருவரின் தகுதிகளுக்கும் உகந்ததல்ல. விஸ்வாமித்திரர் போன்ற ஒரு கோபக்கார முனிவருடன் வரும் போது இராமரும் அப்படிச் செய்யத் துணிந்திருக்க மாட்டார்.

அப்புறம் என்னதான் நடந்திருக்கும்?

oOo


இந்த உரையாடல் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று..


“அந்தாளை நீ பாத்தியா?”
“பார்த்தேன் டா”
“இது அந்தாளுக்குத் தெரியுமா?”
“அவரும் பார்த்தாருடா”

இதில் வந்த ”அவரும்” என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “அவர் என்னைப் பார்த்தார்” என்ற பொருள் மட்டுமா? “நான் அவரைப் பார்த்ததை அவர் பார்த்தார்” என்ற பொருள் வருகிறதில்லையா? இந்த இடத்தில் ”அவர் இவரைப் பார்த்தார் ” என்ற நேர் பொருளை விட “அவர் என்னைப் பார்த்துவிட்டார்” என்று உணர்வு பூர்வமான ஒரு மறைபொருள் தான் மிக முக்கியமானது.


அது போலத்தான் இராமரும் சீதையும் பார்த்துக் கொள்கிறார்கள்.. சீதை தன்னைப் பார்த்ததை அண்ணலும் நோக்கினார்; அது போல் அண்ணல் பார்த்ததை சீதையும் நோக்கினாள்; என்ற பொருள் வருகிறதல்லவா?
இதில் பார்வைகள் சந்தித்துக் கொள்வது split of a second தான். ஆனால் அந்தப்
பார்வைகளின் பொருள் “நீ என்னை பார்த்ததை நான் பார்த்துவிட்டேன்” என்று இருவர் மனதிலும் தோன்றிய எண்ணங்கள் பரிமாறப்பட்டன என்பது தான் இங்கு சிறப்புச் செய்தி.

oOo
ஒன்பதாவது படிக்கும் போது தமிழ் இலக்கணத்துல தற்குறிப்பேற்றணி என்ற ஒரு அணி பாடமாக வரும். அதாவது “இயற்கையாக நடக்கும் ஒரு காட்சியின் மேல் கவிஞன் தன் சொந்தக் குறிப்பை ஏற்றிக் கூறும் அழகு”. இதற்கு பாடப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டு கூறப்பட்டிருக்கும். தமிழ்த் தேர்வுகளில் நான் இதற்கு கம்பராமாயணச் செய்யுள் தான் எப்பொழுதுமே எடுத்துக்காட்டாக எழுதுவேன்.

தேர்வு நேரத்தில் எல்லா விடைத்தாள்களையும் திருத்தும் தமிழாசிரியர் வழக்கமான சிலப்பதிகார எடுத்துக்காட்டே படிச்சுப் படிச்சு போரடிச்சிப் போயிருக்கும் போது நான் வித்தியாசமாக கம்பராமாயணம் எழுதியதைப் படிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு முழு மதிப்பெண்கள் போட்டு விடுவார்.


முனிவருடனும், இலக்குவனுடனும் ராமபிரான் மிதிலை நகரத்துக்கள் நுழைகிறாராம். அப்பொழுது மிதிலா நகரத்துக் கொடிகள் காற்றில் மிக வேகமாக அசைகின்றன. அதற்குப் பொருளாக கம்பர் இப்படிக் கூறுகிறார். “இந்த மிதிலா நகரம் செய்த தவத்தின் விளைவாக இலக்குமி (செய்யவள்) தேவியே இங்கு வந்துப் பிறந்து உனக்காகக் காத்திருக்கிறார். அவளை மிகவும் காக்க வைத்துவிடாதே.. தயவு செய்து விரைந்து வா (ஒல்லை வா !!) என்று அழைப்பது போல மிதிலா நகரத்துக் கொடிகள் அசைகின்றன” என்று தனது குறிப்பைக் கம்பர் கொடியசைவின் மேல் ஏற்றிக் கூறுகிறார்


மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்த கடிநகர், கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வாவென்று அழைப்பது போன்றதம்மா !!

சீமாச்சுவின் மனசாட்சி: கம்பராமாயணத்துக்கெல்லாம் வியாக்கியானம் பேசி மாட்டிக்காதே.. அதுக்கெல்லாம் தான் மாதவிப்பந்தல் கேயாரெஸ் இருக்காரே.. அவர் எழுதறதைவிடவா சுவாரசியமா எழுதப்போறே.. இதுல சினேகா மட்டுமில்லாம மீனா படம் வேற !! அவர்கிட்ட மாட்டத்தான் போறே.. இருக்குடீ உனக்கு !!

Wednesday, July 22, 2009

83. தொண்ணூத்தியொண்ணு + ஒண்ணு


Monday, July 13, 2009

82. விஞ்ஞானமும் தேரோட்டமும்

மயிலாடன் என்பவர் விடுதலை இதழில் எழுதிய “விஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர, கடவுள் சக்தியால் அல்ல என்பதையாவது ஒப்புக்கொண்டால் சரி!” என்ற வரி ரொம்ப யோசிக்க வைத்தது. மயிலாடன் எவ்வளவு பெரிய்ய விஞ்ஞானி என்பது தெரியாது. எல்லாவற்றையும் (அவர் பகுத்தறிவு கொண்டு பார்க்க விரும்பாததைத் தவிர்த்து) அவர் கொள்கையில் பார்ப்பவர் என்பது மட்டும் புரிகிறது.

oOo

எதையுமே ஆழ்ந்து கற்றவர்க்குத்தான் தெரியும் அவர் இன்னும் கற்க வேண்டியது உலகளவு என்பது. படிக்கப் படிக்கத் தான் வரும் நமக்குத் தெரியாதது நிறைய என்ற பயம். அந்த பயம் வரவில்லையென்றால் போதுமான அளவு கற்கவிலை என்று பொருள்.


இரண்டாம் வகுப்பு படிக்கும் பையனிடம் கேளுங்கள் “6 ல் 4 போனால் எவ்வளவு?” என்று? உடனேயே சொல்லிவிடுவான் “2” என்று. அவனிடமே “4ல் 6 போனால் எவ்வளவு?” என்று கேட்டுப்பாருங்கள். “போகவே போகாது .. உனக்கு கணக்கே தெரியவில்லை” என்று சொல்லிவிடுவான். அவனளவுக்கு அது தான் சரி





அது போல எல்லாவற்றுக்குமே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து உலகம் நகைக்கும். நீங்கள் படித்தது வெறும் இரண்டாம் வகுப்பு தான் என்றால் உங்களுக்குப் பாராட்டு நிச்சயம். அந்தப் பாராட்டு மட்டுமே உங்களை அறிவாளி ஆக்கிவிடாது. அதிக பட்சம் 3ம் வகுப்புக்கு பாஸ் செய்யப் படுவீர்கள். அது தான் தகுதி “உலகை வென்றுவிட்டோம்” என்று நினைத்தால் ஆபத்துதான்..


விஞ்ஞானம் என்பது இன்றும் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் துறை மட்டுமே. அதனால் தான் இன்னும் ஆராய்ச்சிக்கென்று பல பில்லியன் டாலர்கள் செலவழிக்கப் படுகிறது. இன்னும் கண்டுபிடிக்கப் படவேண்டியது எவ்வளவோ. இன்னும் நம்மால் செயற்கை இரத்தம் கண்டுபிடிக்கப் படவில்லை. மரணம் என்பதை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இது தான் மரணம் என்று சொல்லிவிட்டால்.. மரணம் வராமலிருக்க வழி கண்டுபிடித்து விடலாம். இன்னும் சொல்லத் தெரியவில்லை. மரணத்தின் விளைவுகள் மட்டுமே விவரிக்க முடிகிறது. எவ்வளவோ சொல்லலாம்.

கடலுக்கடியில் நாற்பதாயிரம் அடியில் தொலைந்துவிட்ட விமானத்தின் கையகல கருப்புப் பெட்டியை கண்டிபிடிக்க முடியும் என்று 10 நீர்மூழ்கிக் கப்பல்களையும் துடைப்பைக்கட்டை அளவு மானியையும் வைத்துக்கொண்டு கடலையே அளந்து தேடியவர்களைக் கேளுங்கள்..” இந்தப் பெட்டி கிடைக்க வேண்டுமென்று ஆண்டவனை எப்படியெல்லாம் பிரார்த்தித்தார்களென்று”.. அவர்களுக்குத் தெரியும் ஆண்டவன் அருளில்லாமல் அது கிடைக்காதென்று. முடிந்த அளவு முயற்சி செய்யவும், முயற்சி திருவினையாக்கும் என்று நம்பவும் மட்டுமே முடியும். ஆழ்கடலில் தேடிய அனுபவம் மட்டுமே கிடைக்கும். நம் எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்களையும் விட ஆண்டவன் படைத்த இயற்கை எவ்வளவு பெரியதென்ற ஞானம் மட்டுமே மிச்சம்.


விஞ்ஞானம் இன்னும் யுகங்களுக்கு முழு வளர்ச்சி அடையாது. அதுவரை காத்திருக்கவும் நம்க்கு வாழ்க்கை இருக்காது. அதுவரை ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து.. ஆக்க பூர்வமான சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. ”மக்கள் சேர்ந்து தேர் ஓட்டுகிறார்களா” அவர்கள் உணர்வுகளை மதித்து அவர்களுடன் சேர்ந்து தேர் இழுங்கள். இல்லையேல், ஒதுங்கியிருந்து உங்கள் வேலையைப் பாருங்கள். இது தவிர்த்து விஞ்ஞானத்தில் ஆர்வம் இருந்தால் விஞ்ஞானியாகத் தேர்ந்து ஏதாவது முயற்சி செய்யுங்கள். அரைகுறையாகப் பேசுவது நம் அறியாமையையே வெளிச்சம் போட்டுக்காட்டும்.






திருவிழாக்கள் எல்லாமே ஒரு team development activity தான். ஒரு குழு மனப்பான்மையை வளர்க்கும் ஒரு விஷயம்தான். அதை எல்லாரும் சேர்ந்து செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே. அதனால் தான் “ஊர் கூடித் தேரிழுக்க வேண்டும்” என்றார்கள். எந்தப் பணக்காரனும் என்னிடம் பணம் இருக்கிறது நான் தேரிழுக்கப் போகிறேன் என்று சொன்னதில்லை. அவன் ஒருவனால் மட்டுமே இழுக்கப் பட முடியக்கூடாதென்பதால்தான் தேர் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது.




“கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னது கூட... அந்த ஊரில் உள்ளவர்களிடம் ஒற்றுமையிருக்காதென்று சொல்லத்தான். ஊர் ஒற்றுமையாக இருந்தால் கோவில், தேரோட்டம், சமூகப் பணிகளில் நாட்டம் இவற்றைக் குறிப்பதாகவே நினைத்தார்கள் அந்தக் காலத்தில். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற எண்ணங்களை வளர்ப்பதற்காகவே இவையெல்லாம் வந்திருக்க வேண்டும்.




இறைபக்தி என்பது ஒரு moral driving force. அது இல்லாவிட்டால் உலகம் சுடுகாடாகிவிடும்.


கட்டுடைப்பதென்பது வெகு எளிது.. கோணல் மாணலான சிந்தனைகளே போதும். மனநோயாளிகளெல்லாமே தீவிரமான கட்டுடைப்பாளர்கள் தான். உண்மையான சோதனையென்பதே கட்டமைப்பதில் தான் இருக்கிறது.



கலைஞரைக் கேளுங்கள், திமுக என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் உள்ள சிரமங்களை. முடிந்தால் அது போன்று ஒரு கட்சியைத் தொடங்கி நாட்டுக்கு நல்ல ஆட்சியைத் தர முயற்சி செய்யுங்கள். அதற்கு ஒருவரின் வாழ்நாள் போதும் என்று தோன்றவில்லை. முடியலாம்..எல்லா சக்திகளும் உங்கள் அருகில் இருந்தால்..


கோவம் கொண்ட ச்சின்னக் குழந்தையைப் போல எல்லாவற்றையும் கட்டுடைக்கப் போகிறேன் என்று சமுதாய சீர்குலைவுக்கு வழி பார்க்காதீர்கள்..


விஞ்ஞானம் ஒரு மிகப் பயனுள்ள துறை, அது வளரவேண்டியது அவசியம். அது வளர்ந்தால் உலகத்தில் வறுமையை ஒழிக்க முடியும். எல்லோரும் நலமாக வாழ முடியும். அந்த அளவு முழு வளர்ச்சி பெற வேண்டுமென்பது தான் எல்லா விஞ்ஞானிகளும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். அப்துல் கலாமைக் கேளுங்கள். இதையேதான் சொல்வார். ஆண்டவன் சக்தியை விஞ்ஞானம் வென்றுவிட்டதென்ற வெற்றுவாதங்கள் விஞ்ஞானத்தை வளர்க்காது..

Saturday, June 27, 2009

81. பைத்தியக்காரன்..சாரு நிவேதிதா..ஜெயமோகன்..

இன்னிக்குப் பொழுது போகாமல் பதிவர் பைத்தியக்காரன் அவர்களின் ”சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்” என்ற பதிவுக்குப் போய்விட்டேன்.

முழுவதுமாக படித்து முடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது. சாரு பதிவு போட்ட மறுநாளே தலைவர் போட்டுவிட்டதால் எதையுமே refer பண்ணி எழுதின மாதிரி தெரியவில்லை.

தலைவர் மனதிலிருந்து அப்படியே கொட்டியிருக்கிறார். எவ்வளவு விஷயங்கள் மனதில் வைத்திருக்கிறார். எல்லாமே ச்சின்னச்சின்ன சண்டைகள்..பூசல்கள்.. மற்றும் நிகழ்ச்சிகள்.

தேதி வாரியாக “நீ இப்படி எழுதினே”..”அவர் இப்படி எழுதினார்” என்று ச்சும்மா புட்டுப்புட்டு வைக்கிறார்.

இவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வதென்றால் உண்மையிலேயெ பெரீய்ய்ய ஆள்தான். அவசியம் சந்திக்க வேண்டும். ஆனால் சிறு பத்திரிகைகளோ இலக்கியங்களோ நமக்கு அவ்வளவு பழக்கமில்லை. அதிகம் படித்ததில்லை.

சினிமா பத்திப் பேசலாம் என்றால் நம்ம ரேஞ்சே தனிதான்.. அதிக பட்சம் சிவாஜி, பசங்க, சந்தோஷ் சுப்பிரமணியம், அபியும் நானும் பேசலாம்.. மத்தபடி “கிம் கி டுக்” எல்லாம் நமக்குத் தெரியாது.. முடிஞ்சால் சந்திச்சுப்பார்ப்போம்.. பேச விஷயமா கிடைக்காது..



இவர் இப்படி எழுதியிருக்கிறாரே.. சாரு அப்படி என்னதான் எழுதியிருக்கார் அதையும்தான் பார்த்திடுவோமே என்று அங்கு போனால் அது பெரிய குப்பையாக இருந்தது...

தொடர்ந்து ஜெயமோகனையும் படித்தேன். ஜெயமோகனை எனக்கு மரத்தடி குழும நாட்களிலிருந்து தான் தெரியும். அங்கு அப்பொழுது குழுவினரின் கேள்விகளுக்கு ஜெயமோகனிடமிருந்து பதில் கேட்டுப் போட்டார்கள்.

அவர் பதில்களை அப்பத்தான் படித்தேன். நான் ஏதோ “அரசு பதில்கள்” லெவலுக்கு 2 வரி எழுதியிருப்பார்னு நெனச்சேன். மனிதர் ஒவ்வொரு கேள்விக்கும் 5 பக்கம் விரிவான பதில் எழுதியிருந்தார். ஒவ்வொரு பதிலிலும் ஒரு சின்சியாரிட்டி தெரிந்தது. அது முதல் ஜெயமோகன் பத்திகள் படித்திருக்கிறேன். நல்லா எழுதுகிறார் என்ற அபிப்பிராயம் இருந்ததால் அவ்வப்போது படிக்கிறதுண்டு..


இப்போ இவங்க ரெண்டு பேர் போடும் சண்டையைப் படிச்சால் குப்பத்து சண்டையை விடக் கேவலமாக இருக்கிறது. படிக்கும் போதே ஒரு அருவருப்பு வந்து விடுகிறது. “இவனுங்களுக்கு எழுத வேற விஷயமே கிடைக்கலையா? அல்லது விஷயஞானம் இல்லியா” என்கிற சந்தேகம் வந்திடிச்சி. .. இப்படி குப்பையை எழுதிக் கொண்டிருப்பதற்கு இவங்க பேசாமல் எங்கியாவது வேற வேலைக்குப் போகலாம்..


நானெல்லாம் பெரிய்ய இலக்கியவாதியெல்லாம் கிடையாது. எங்கியாவது நல்ல மேட்டர் இருந்தால் தேடிப்படிக்கும் ஒரு சராசரிக்குக் கீழான வாசகன். வீட்டுல மட்டும் நம்ம கலெக்‌ஷன்ல ஒரு ஆயிரம் தமிழ்ப்புத்தகங்கள் இருக்கு.. அப்பப்ப படிப்பதுண்டு.. வருஷா வருஷம் இந்தியா போகும்போது குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்காவது புத்தகம் வாங்கி வருவதுண்டு.. எதையாவது படிச்சால் ஏதாவது புதுசாத் தெரிஞ்சுக்கலாமா அப்படீன்னு மட்டும் தான் நினைப்பதுண்டு.. இன்னிக்கு இந்தக் குப்பைகளைப் படிச்சி மனசு குப்பையானது நான் மிச்சம்.


கன்னா பின்னான்னு திட்டத் தோணுது.. நாகரீகம் தடுக்கிறது.. இவனுங்க தான் எழுத்தாளர்கள் ..இவனுங்க எழுதுவதுதான் இலக்கியம் அப்ப்டீன்னு சொன்னா அதெல்லாம் எனக்குத் தேவையில்லை-ன்னு முடிவுக்கு வந்தாச்சி.. இதை ஒரு தனிப்பட்ட ஒரு சீமாச்சுவின் எண்ணமாகப் பார்க்காமல் ஒரு சராசரி வலை வாசகனின் எண்ணமாகப் பாருங்க..


இவங்களையெல்லாம் இனி ஜென்மத்துக்கும் படிக்கப் போறதில்லை.. வேற ஏதாவது உருப்படியாச் செய்யலாம் அப்படீன்னு முடிவுக்கு வந்தாச்சி..


குப்பைகள் !!!!


பி.கு: பதிவில் இருவரைக் குறிப்பிடும் போதும் விகுதிகள் மரியாதை குறைந்து விழுந்துள்ளன. அது என் தார்மீகக் கோபத்தில் வந்தது தான்.. ”அது எப்படி எழுதலாம்” என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை..

பி.கு: சாரு பத்தி எழுதும்போது சினேகா போட்டா போடாவிட்டால் எப்படி?

Monday, June 08, 2009

80. சூர்யா .. என்ன ஒரு பிரார்த்தனை !!

அமெரிக்காவிலிருந்து இந்தியா கிளம்பிப் போவதென்றால் ஒரு ஆறு வயசுக் குழந்தை ஆண்டவனிடம் என்ன பிரார்த்தனை செய்யும்?

மனைவி, குழந்தைகளெல்லாம் வெள்ளிக்கிழமை கிளம்பி இந்தியா போய்ச் சேர்ந்து விட்டார்கள். இன்னும் 10 வாரத்துக்கு வீட்டில் தனிமைதான். வருடா வருடம் இந்த நேரம் இப்படித்தான்.. 91 வயசு அப்பாவுக்கு பேத்திகளுடன் விளையாட மகன் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக கடந்த 9 வருடங்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன். எங்கேயும் அதிகமாக பயணிக்க மாட்டார்கள். மயிலாடுதுறையில் தாத்தாவுடன் இருப்பது மட்டுமே வேலை..


கடந்த சில மாதங்களில் இரண்டு விமான விபத்துக்கள் !! US Airways விமானம் ஒன்று பறவைகளால் சேதப்பட்டு ஹட்சன் நதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அது நியூ யார்க்கிலிருந்து எங்க ஊருக்கு வந்த விமானம் !!

சில தினங்களுக்கு முன் Air France விமானம் அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளாகி 228 பேர் பலியானார்கள் !!

இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் டீச்சர் குழந்தைகளிடம் பேசுவார்கள் போலிருக்கிறது.. சூர்யா படிப்பது ஒண்ணாங் கிளாஸ். அவளுக்கு இந்த விபத்துக்கள் பற்றித் தெரிந்திருக்கிறது..

ஊருக்குக் கிளம்புமுன் இதுதான் அவள் பிரார்த்தனை !!

Muthamma !! (இது வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசுவாமிக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர்)..

Muthamma !! we are travelling to India today. Please make sure no flying birds gets into our plane's engine. Dont make our plane blast midway in the air !! Please save all of us !!

என்னிடம் திரும்பி.. “Daddy, please pray for us to Muthamma !!"

அந்தச் சின்ன மனசுக்குள் எவ்வளவு பெரிய பாரம் !!! ப்ளேனில் போகும் அந்த 22 மணி நேரங்களும் இந்த பயமே அவள் மனது முழுவதும் இருந்திருக்குமோ !!

இதெல்லாம் வகுப்பில் விவாதித்தே ஆகவேண்டிய விஷயமா !!


குழந்தைகளுக்கு இதெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை !! நானெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் வானத்தில் அண்ணாந்து பார்த்துத்தான் விமானம் பார்த்திருக்கிறேன். பயணித்ததில்லை !!


Wednesday, May 13, 2009

79. பதிவுலக கிசுகிசு - முடிஞ்சால் கண்டுபிடிங்க!!

பதிவுலகத்துல இருக்குற ”பழம்பெரும்” பதிவருக்கு சமீபத்தில் கிடைத்தது இரட்டை சந்தோஷமாம்..

தினமும் ஒரு பதிவு (பதிவுன்னு சொன்னா திட்டுவாருங்.. இடுகைன்னே சொல்லிக்கிறனுங்க !!) என்று போட்டுத் தாக்கிக்கிட்டிருந்தவருக்கு இப்போ நேரம் கிடைக்கிறதே கஷ்டமாயிடுமாம்.. அதிக வருகை மற்றும் பின் தொடர்பவர்கள் இருக்கும் பதிவாதலால் அதை மொத்த விலைக்குத் தருகிறாரா என்று ஒரு மூத்த பதிவர் வேறு விசாரித்து விட்டாராம். பேரம் படிந்தாலும் படியுமாம் !!













இப்போ தாய்க்குலத்துக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால்.. பதிவரை ஒரு கை பார்த்துவிடலாமென்றிருக்க்கிறாராம்.. ஏற்கெனவே அட்லாண்டா போனபோது “அடிபட்ட” அனுபவம் பதிவருக்கு உண்டாம்..!!


செய்தி கேட்டு அடிக்கடி கனவில் வந்த சிலேடைப்புலவர் “தம்பி .. இரட்டை வாழ்த்துக்கள் .. சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டாராம்..” அவர் இனி வேறு பதிவர் கனவில் வரலாமென்று போய்விட்டாராம்...

”சிலேடைப் புலவர் கனவுல வந்ததாலதான் இரட்டை சந்தோஷம்.. சாதாரண புலவர் வந்திருந்தால் இப்படி சந்தோஷம் இரட்டிப்பு ஆகியிருக்குமா” அப்படீன்னு ஒருத்தர் சீண்டினாராம்..



மனசு நிறைய்ய சந்தோஷங்களோடு..”பதிவாவது... உலகமாவது..” என்று பதிவர் அசிரத்தை காட்டுகிறாராம்..


அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த “இரட்டை வாழ்த்துக்கள்” ஐயா...


நீங்களும் சொல்லிக்கிடுங்க.. பதில் வர இரண்டு மாசமானாலும் ஆகும்... நமக்கு பதிலாங்க முக்கியம்.. நம்ம பதிவர் குடும்ப சந்தோஷம் தானே முக்கியம்”


சூதனமா விடையைக் கண்டுபிடிச்சு வாழ்த்துங்கோ மக்களே !!





பி.கு: இதுக்கும் சினேகாதானுங்களா? அப்படீன்னு கேக்குறவங்களுக்கு.. புன்னகை தாங்க பதில்.. புன்னகை இளவரசியின் ரசிகருக்கு வேற என்ன தெரியுமுங்க !!







Thursday, April 09, 2009

78. சூரியன் அட்டகாசம் தாங்க முடியவில்லை..

என் பொண்ணு சூர்யாவுக்கு 6 வயசு ஆகுது. வீட்டுல அவளுக்குன்னு ஒரு ரூம் இருக்கு. ரூமுக்குள்ள நுழையறதுக்கு அவள் ரூல்ஸ் எல்லாம் தெளிவா எழுதி பாஸ்வேர்ட் போட்டு வெச்சிட்டா. அதை ரூம் கதவுலயும் ஒட்டியாச்சு. யார் அவ ரூமுக்கு வர்றதாயிருந்தாலும் கதவுகிட்ட நின்னு பாஸ்வேர்ட் சொல்லிட்டுத்தான் நுழையணும்..




Soorya's Room

3 Basic Rules

  • No Punching
  • No Kicking
  • No Hitting
  1. First get a toy and when your finished put it back and get a new one.
  2. Clean up after your mess.
  3. Please say the password before you come at the door.

அங்கே தான் பிரச்சினையே. பாஸ்வேர்ட் ஒரு நாளைக்கு 8 தடவ மாத்திடுவா..

I changed my room's password. I can tell that to you only Daddy. Dont tell mami and Shanmuga..

இப்படி 10 நிமிஷத்துல எல்லார்கிட்டேயும் சொல்லிடுவா. பாஸ்வேர்ட் எல்லாம் strawberry pie, Sameeya is a good girl, Thanksgiving day, memorial day இப்படி ஜனரஞ்சகமாத்தான் இருக்கும்.

இதுவரைக்கும் ஒரு 100 தடவை பாஸ்வேர்ட் மாத்தியாச்சி..

போதாக்குறைக்கு என் ரூமுக்கும் ரூல்ஸ் எழுதி ஒட்டி பாஸ்வேர்ட் போட்டாச்சி.. இதுல பாருங்க ரூல்ஸ் எழுதின பேப்பர்ல தேதிபோட்டு அதுல டாடி கையெழுத்தும் வாங்கிட்டா. அதை கதவுலயும் ஒட்டிட்டா. யாரும் ”எனக்குத் தெரியாதே” ந்னு சொல்லித் தப்பிக்க முடியாது...



Daddy's Room

4 Basic Rules

  • No Hitting
  • No Punching
  • No Crying
  • No Kicking

Rules Include:

  1. Take 1 book at a time and after you finish put it back!
  2. Don't touch things that are on the office table. They are IMPORTANT
  3. Give a hug to him before you leave his room

என் ரூம் பாஸ்வேர்ட் இப்போ “சரணம் சரணம் சண்முகா சரணம்”.. நீங்க வர்றதுக்குள்ள மாறிடும்.


என் ரூம் ரூல்ஸ்-ல ஒண்ணு.. ”Give him a hug before you leave the room".


பக்கத்து வீட்டு கன்னட மாமி ரூமுக்குள்ள வந்துட்டு திணறிட்டாங்க. அவங்க வீட்டுக்காரை கோச்சுக்காம எனக்கு Hug தர முடியாதுங்கிறதால அவங்களுக்காக 10 வினாடிகள் ரூல்ஸ் தளர்த்தப்பட்டது..


இன்னும் கொஞ்ச நாள்ல வீடு கோட்டை மாதிரி பாதுகாப்பா இருக்கும். திருட்டுப் பய உள்ள நுழைய முடியாது.. அவனுக்குத்தான் பாஸ்வேர்ட் தெரியாதே...


நீங்களும் உங்க ரூமுக்கு ஒரு பாஸ்வேர்ட் வெச்சிருங்க...

Tuesday, April 07, 2009

77. கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாத் தப்பில்லை ..

இப்ப இருக்குற புள்ளைங்களப் பாத்தா நானெல்லா அம்மாஞ்சியாவே வளர்ந்துட்டேனோன்னு தோணுது. கீழே இருக்குற குழந்தையைப் பாருங்க. எவ்வளவு வெவரமா படிச்சுப் பாக்குது...

யாரெல்லாம் நமக்கு பர்த் டே கிஃப்ட் கொடுத்திருக்காங்க.. இன்னும் வரவேண்டியது பாக்கி எவ்வளவு இருக்கு எல்லாம் பாத்தே தெரிஞ்சுக்கிடுவாங்க !!!

எதா இருந்தாலும் படிச்சாவது கேட்டாவது தெரிஞ்சுக்கணும்னு நெனக்குதுங்க..

நானெல்லாம் 9ம் கிளாஸ் படிக்கிற வரைக்கும் ஃபோன்லயே பேசினதில்லை. மயிலாடுதுறையிலேயே எனக்குத் தெரிஞ்ச 4 - 5 வீடுகள்-ல தான் போன் இருந்திச்சி. அதுல 2 பேர் Telephones ல Junior Engineer ஒண்ணு மளிகைக்கடை, 2 டாக்டர்கள். அப்ப மயிலாடுதுறை போன் நம்பரெல்லாம் வெறும் 3 இலக்கங்கள் தான். இப்பத்தான் முன்னாடி 3 தடவை 2 சேர்த்து 6 இலக்கமாயிருக்கு. எங்க ஊரு பெரிய்ய சிட்டி மாதிரி (!!). இதுக்கு மேலே எங்க ஊரை நான் கிண்டல் பண்ணி எழுதினா அபிஅப்பா அடிக்க
வந்துடுவாரு..

வீட்டுல ஒரு தடவை சமையலறை கேஸ் தீர்ந்துப் போச்சி. கேஸ் வாங்கணுமுன்னா, அப்ப கூறைநாட்டுல (வீட்டுலேருந்து 2 கிலோமீட்டர்) இருந்த சிவசக்தி கேஸ் ஏஜென்ஸியில் ரிஜிஸ்டர் பண்ணணும். எனக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாது. நடந்து போகணும் இல்லேன்னா யாராவது (சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச) பிரெண்ட்டுக்கு ஐஸ் வெச்சி சைக்கிள்ல டபுள்ஸ் போயிட்டு வரணும். அப்பதான் JE வீட்டு நடராஜ் புண்ணியத்துல
முதன் முதலில் ஃபோன்ல பேசினேன். அதையும் என் அம்மா நம்பாமல் என்னை பொடிநடையா இன்னொரு தடவ நடக்க விட்டுட்டாங்க.. (எங்க அம்மாவுக்கு அப்பல்லாம் ஃபோன்ல நம்பிக்கை கிடையாது). நேரில போய்ச் சொன்னாலும “கார்டை எடுத்து வெச்சுக்கிட்டானா? நீ கண்ணால பாத்தியா? அது நம்ம கார்ட் தானா?” அப்படீன்னு மூணு கேள்விக்கும் பதில் சொல்லணும்.


காலேஜ் படிச்சி முடிக்கும் வரை மொத்தமா 10 தடவை போனில் பேசியிருந்தால் பெரிய்ய்ய விஷயம் இப்போ என் மூணாவது பொண்ணு பொறந்து 2 மாசத்துல செல் போனில் “முகுந்தா முகுந்தா பாட்டு போட்டாத்தான் பால் குடிக்கிறா !!”


அத விடுங்க...

இப்ப போனவாரம் என் 6 வயசு பொண்ணு சூர்யா கூட பேசிக்கிட்டிருந்தேன்.. ரொம்ப சுவாரசியமா போன் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம்..

“Daddy... Mommy has a phone number, you have one, thatha and Patti also have phone numbers..

Does GOD give us all phone numbers when we are born?

Do you have my phone number? "


என்னமோ ஆண்டவனே பொறக்கும் போது எல்லாருக்கும் ஃபோன் நம்பர்
கொடுத்துடுவார்-னு நெனச்சிக்கிட்டிருந்திருக்கா.. !!

நியாயமான சந்தேகம் தான்.. அடுத்த தடவ நம்ம பழமைபேசி மணிவாசகம் மாமா வீட்டுக்கு வந்தா கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அவர் தான் இந்த ஆவிஅமுதா ரேஞ்சுல எல்லார் கிட்டேயும் பேசிக்கிட்டிருக்காரே !!!

Monday, March 30, 2009

76. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்..

இந்த இடுகை கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். இன்னும் வயது வராதவர்கள்.. ஒரு கண்ணை மூடிக்கொண்டு படிக்கிறேன் என்று சொன்னாலும் அனுமதி கிடையாது..


இப்பல்லாம் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” பதிவு எழுதினாத்தான் மதிக்கிறாய்ங்க.. இல்லேன்னா “நீ ரவுடியில்லே” ந்னு ஆட்டத்துல சேத்துக்க மாட்டேங்கிறாய்ங்க.

“நீங்களும் தான் ஒண்ணு போட்டுடுங்களேண்ணே” என்று அன்புத் தம்பியின்
வேண்டுகோளுக்கிணங்க சில கொள்கை சமரசங்கள் செய்து கொண்டு இந்த இடுகை..

oOo

தமிழ்த் திரைப்படங்களில் சில பாடல்களும், சூழல்களும் மற்றும் கவிஞனின் தமிழும். இப்படியெல்லாம் தலைப்பு வைக்கலாம் தான். இருந்தாலும், வாசகர்களை ஈர்க்கும் பொருட்டு.. “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று எழுத வேண்டியதாயிற்று..


oOo

தலையைக் குனியும் தாமரையே என்ற பாடல் ஒரு ஓடை நதியாகிறது என்ற படம்..ரீதிகௌளை ராகத்தில் ரகுவரனும் இன்னொரு மங்கையும் (யாருங்க அது !! பின்னூட்டத்தில் சொல்லுங்க...) பாடும் இனிமையான பாடல். பாட்டைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.. இந்த 3 நாளிலே இதுவரை 20 தடவையாவது கேட்டிருப்பேன். அவ்வளவு மெலடி அந்த பாட்டுல. அப்படியே நமக்கு விருப்பமானவங்க மடியிலே போட்டுத் தாலாட்டுற மாதிரி ஒரு சுகம் அந்த பாட்டுல.. முடிஞ்சா இன்னொரு முறை கேட்டுப் பாருங்க.


பாட்டின் படி, காதலன் காதலியிடம் உடல் தொடு சுகம் (யப்பா.. நாசூக்கா எழுத என்னவெல்லாம் எழுத வேண்டியிருக்கு? ) “நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம் “ என்று ஓப்பனாகவே கேட்டு விடுகிறான்.


அவனது அதீத ஆர்வத்துக்கு அணை போட முயல்கிறாள் காதலி..

பிறகு ஒத்துக் கொள்ளும் நிலைக்கு வந்த பின்பு, காதலிக்கே ஒரு தயக்கம்.
தன்னுடைய வெட்கங்களும் தயக்கங்களும் காதலனின் ஆர்வமான அணுகுமுறையின் சுவையைக் கெடுத்து விடுமோ என்று பயந்து விடுகிறாள்.. அதை அழகாக காதலனிடம் வெளிப்படுத்துகிறாள்..

என்னுடைய நாணங்கள் உன் இன்பத்தைக் குறைத்து விடுமா என்பதை அவள் எப்படிக் கேட்கிறாள்.. அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறாள் என்பதையும் கவிஞனின் வார்த்தைகளிலேயேப் பாருங்கள் !!


பெண்:
ஆயிரம் நாணங்கள் .. இந்த ஊமையின் வீணையில் இசை வருமா?

ஆண்:
நீயொரு பொன் வீணை..அதை நுனி விரல் தொடுகையில் பல சுரமா?

காதலிக்கு இந்த சுகம் புதியது. அவள் ஒரு மீட்டப்படாத வீணை. அந்த வீணைக்கும் தெரியாது தமக்குள் இருக்கும் நாதம் இனிமையானதா என்று. முன்னெப்போவாவது மீட்டப்பட்டிருந்தால் தானே அதற்கும் அதன் இசையின் தெளிவு தெரியும். அதனாலேயே அவள் கேட்டுத் தெளிந்து கொள்ள காதலனை வினவுகிறாள்.


இந்த “ஊமையின் வீணையின் வீணையில் இசை வருமா” என்பதே தெரியாது. வந்தபிறகுதானே அது இனிமையானதா இல்லையா என்பது கேள்வி?

அதுலயும் சந்தேகம் காதலனின் மேலே.. அவனுக்கு மட்டும் வீணை இசை தெரிந்திருக்குமா என்ன? “இது தான் உனக்கும் ஃபர்ஸ்ட் டைமா” என்பதை எப்படி கேக்குறா பாருங்க..

பெண் :

பூவை முகர்ந்திடல் முதல் முறையா..?

ஆண்:

வேதனை வேளையில் சோதனையா?

ஆணுக்கும் வெட்கம்.. ஆமாம் எனக்கும் ஃபர்ஸ்ட் டைம் தான் அப்படீன்னு ஒத்துக்கொள்வதில் ஒரு நேர்மை வேண்டுமென்றாலும்.. எந்த ஆண்மகன் “இது எனக்குத் தெரியாது” என்று கட்டிலில் நேர்மையாக ஒத்துக் கொள்கிறான்?

கேட்டுப் பாருங்களேன்..” Dot Net தெரியுமா? Java தெரியுமா? Adobe Flash தெரியுமா? " பதில் என்ன வரும்னு கேட்டுப்பாருங்களேன்.. “எமக்கு எல்லாம் தெரியும்... தெரியாததேயில்லை” ரொம்ப ரெடிமேட் பதில்தான்..

இங்கேயும் காதலன்.. நேர்மையாக அதை காதலியை முகர்ந்து கொண்டே “ஹூம்..ஹூம்” அப்படீன்னு ஒரு ஹம்மிங் பண்ணுவாரு.. ரொம்ப அழகா இருக்கும். அப்புறம் கேள்வியை “வேதனை வேளையில் சோதனையா ?” அப்ப்டீன்னு கேள்வியைக் கேட்டு பதில் சொல்வதைத் தவிர்த்துவிடுவார்..

இதற்கு தமிழ் இலக்கியத்தில் “வினா எதிர் வினாதல்” என்று பெயர்.

எவ்வளவு கவித்துவமான கேள்வியும் பதிலும்... அதை எப்படி விரசமில்லாமல் கவிஞன் சொல்லிவிடுகிறான் என்று பார்த்தால்.. எல்லா சூழ்நிலைகளுக்குமே பயன்படும் மாதிரி எந்த ஒரு விஷயத்தையுமே அணுகலாம் என்பது நிச்சயமாகப் புரியும்..


இந்த பாடலையும் அதன் வீடியோவையும் இந்தச் சுட்டியில் கேட்கலாம்..
http://www.youtube.com/watch?v=StH2QX65Ws0


oOo oOo oOo


கன்னிப்பருவத்திலே என்றொரு படம். அந்தக் காலத்தில் Adults Only முத்திரையுடன் வந்ததால் நான் பார்க்க முடியவில்லை. அப்புறம் 26 வயதில் பார்த்தேன்.. அப்படியும் நண்பன் சொல்லித்தான் புரிந்தது.

ஒரு மஞ்சுவிரட்டு விபத்தில் காதலன் தன் ஆண்மையை இழந்து விடுகிறான். அதனால் காதலிலிருந்து விலக முற்படுபவனை.. காதலி ஆறுதல் சொல்லி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள்.. உன்னால் சுகம் தர இயலாதெனினும் பரவாயில்லை உன் அருகாமையே சுகம் தான் என்று சொல்கிறாள் பாருங்கள்..

எவ்வளவு நாசூக்காக கவிஞர் சொல்லுகிறார் பாருங்கள். பாட்டில் ஒருமிதமான சோகம் இருந்தாலும் கருத்தில் ஒரு இனிமை (convincing argument)_ தெரிகிறது..


இனி கவிஞனின் வரிகள் ..

பெண்:

அந்தச் சூரியனும் ... தாமரையைத் தொட்டதில்ல...
ஒளி பட்டாலே .. பூவாகும் .. தேனூறும்..
ஒன்னக் கண்டாலே .. வாசமுள்ள செண்டாவேன்..

காதலனைப் பார்த்தால் மலர்வது மட்டுமல்ல.. மணமும் அடைவேன் என்று சொல்வதின் மூலம் “என் மகிழ்ச்சியும் சுகமும் உன்னைத் திருப்திப்படுத்த நான் வெளியளவில் காட்டுவதல்ல.. அது மிகவும் மனமார்ந்த்து “ என்று எப்படி சொல்கிறார் பாருங்கள். இங்கு வெறும் செண்டாவது மட்டும் முக்கியமாகப் படவில்லை. “வாசமுள்ள” செண்டாவது எவ்வளவு முக்கியம் பாருங்கள்.


இந்த பாடலையும் அதன் வீடியோவையும் இந்தச் சுட்டியில் கேட்கலாம்..
http://www.youtube.com/watch?v=rRveiBtLI24

oOo oOo oOo






இது சிறைச்சாலை என்றொரு திரைப்படம். நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். எனக்குள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீர்யத்தை எடுத்துரைத்த மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. மற்ற படங்கள் (கப்பலோட்டிய தமிழன், பாரதி, காந்தி).


இதில் பாரதியையும் காந்தியையும் என்னால் இன்னும் பார்த்து முடிக்க
முடியவில்லை. படம் பாதி பார்க்கும் போதே மனம் கனத்து அதற்கு மேல் தொடர முடியவில்லை.

சிறைச்சாலை ஒரு சிறந்த ப(பா)டம். இங்கு காதலர் அந்தமான் சிறையில். காதலி தமிழகத்தில். காதல் கனவுகள் நனவாகித் திருமணத்தில் கனிந்த வேளையில் தாலி கட்டி முடித்த உடனேயே கணவர் சிறைப்படுத்தப்பட்டு அந்தமான் கடத்தப்படுகிறார். அந்த ஏக்கத்திலேயே இருக்கும் காதல் கணவர் தன் காதல் மனைவியை ஒரு மேகமாகவாவது போய்ப் பார்க்க மாட்டோமா என்று ஏங்குகிறார்.


அதற்கு மனைவியோ.. “நீ மேகமாக வந்து ஒரு மழைத்துளியிட்டாலும் அதை நான் சிப்பியாக ஏற்று அதை முத்தாக்குவேன்” என்று சொல்லும் போது அவர்களுக்கிடையே உள்ள உறவின் புனிதம் சிகரங்கள் தொடுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் குடுமப்த்தை விட்டுத் தனியாக இருக்கும் எல்லா NRI தொழிலாளர்களின் நிலைமையும் இதற்கு ஈடாகச் சொல்லலாம்..

இனி, கவிஞனின் வார்த்தைகளில்

ஆண்:

செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான்.. வந்தால் ஒரு வழியுண்டோ..

பெண்:

சாய்ந்தாடும் சங்கே.. துளி பட்டாலும் முத்தாகிடும்..முத்துண்டே..


இந்த பாடலையும் அதன் வீடியோவையும் இந்தச் சுட்டியில் கேட்கலாம்..
http://www.youtube.com/watch?v=2wZ9d2jHZDI

அவசியமான பின்குறிப்பு:
இந்த இடுகைக்கும் இதில் உள்ள படத்துக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இல்லை. என்னிடம் கைவசம் வேறு படங்கள் இல்லாததாலும்.. இன்னும் ஒரு மாதத்திற்கு சினேகா படங்கள் போட்டால் அடி விழும் என்ற மறைமுக மிரட்டல்களுக்காகவும் இந்தப் படம்.

கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி

இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்

என்பது முதுமொழி



Wednesday, February 25, 2009

75. கலைஞர் மருத்துவமனையில் இருந்தால் இப்படித்தான் !!

சந்தடி சாக்குல இங்கிலீஷ் பேரு வெச்சிடறாங்க.. தலைவர் பாடுபட்டு வளர்த்த செம்மொழி தமிழ் என்னாத்துக்கு ஆகறது?


Hop On !! Hop Off !!




இதுக்கு என்ன ராஜா சரியான் தமிழ் !!

எனது சில முயற்சிகள் !!

1. உள்ளே குதி ! வெளியே குதி !

2. உள்ளே ,.. வெளியே.. சுருக்கமாக (உவ்வே)

3. ஏறும்மா !! எறங்கும்மா !! (கொஞ்சம் தடுமாறினால் இரட்டை அர்த்த வசனமாகிவிடும்)

4. நிக்குமோ நிக்காதோ ! (கொஞ்சம் ஜப்பானிய பேராவும் இருக்கும் )

5. வர்றியா !! வரலையா !!

உங்கள் கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்துவிடுங்கள்.. தேர்ந்தெடுக்கப்படும் பெயர், தலைவரிடம் ப்ரிந்துரைக்க ஆவன செய்யப்படும் !!


Saturday, February 21, 2009

74. எல்லா கடவுள்களும் இந்த வரிசைக்கு வாங்க !!

சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் நடந்த மோதல் தொடர்பாக, வக்கீல்களைக் கைது செய்யக்கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக நீதிபதிகள் கூறினர். இது தொடர்பாக உள்துறைச் செயலரும் உத்திரவாதம் தந்துள்ளார்.

வக்கீல்கள் பொறுமையாக இருந்து ஒத்துழைக்க வேண்டுமென்று நீதிமன்றம் வேண்டிக் கேட்டுக் கொண்டது.

உள்துறைச்செயலரும், காவல் துறையும் தந்துள்ள உறுதிமொழிகள் :
  1. காயமடைந்த வக்கீல்கள், சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்யவில்லை.
  2. முறையான புலன் விசாரணைக்குப் பின், தலைமை நீதிபதிக்குத் தெரிவித்த பின் தேவைப்பட்டால் எதிர் காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்
  3. சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக விடுதலை செய்வோம்.
  4. நேற்று முந்தினம் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி கைது செய்யப்பட்டவர்கள், சரண்டர் செய்யப்பட வேண்டியவர்களை, ஹைகோர்ட்டில் சகஜ நிலை திரும்புவதை உறுதி செய்ய சொந்த ஜாமீனில் விடுவிப்போம்.
  5. சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் அரசின் செலவில் (அரசு மருத்துவமனையிலா அல்லது அரசு செலவில் தனியார் மருத்துவமனையிலா என்று தெரியவில்லை) சிகிச்சை
    அளிக்கப்படும்.
  6. சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவோம்.

இந்த உத்தரவாதங்களைப் பதிவு செய்த பெஞ்ச், இதைப் பின்பற்றவேண்டும் என்றும் தவறினால், கோர்ட் உத்தரவை மீறியதாகக் கருதப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இவனுங்க என்ன “வானத்துலேருந்து குதித்து” வந்தவங்களா? வக்கீல்களுக்கென்று தனிச் சட்டம் எப்போ வந்தது. இதே சட்ட திட்டங்கள் மற்ற தொழிலாளர்கள் கலவரம் செய்தபோது (இனிமேல் தயவுசெஞ்சு செய்யாதீங்கையா !!) எப்போவாவது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதா?

நீதிபதிகளை நம்ப முடியவில்லை!!


எழுத்தாளர்கள் (”சாரு கொஞ்சம் (வழக்கம் போலவே) ஓவர்!!) :

இது “தமிழ் எழுத்தாளர்கள் படைப்புக்கள் நாட்டுடமையாக்கம்” என்ற தலைப்பில் சாரு நிவேதிதா எழுதிய இடுகையிலிருந்து (மறுபடியும் சாருவா? மறுபடியும் சினேகாவா? சீமாச்சு இது அடுக்காது !!)


.... மேலும் பரிவுத்தொகை கொடுக்க இவர்கள் யார்? வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பொதுமக்களின் சேவகர்கள் கடவுள் ஸ்தானத்தில் இருக்கும் எழுத்தாளர்களின் மீது பரிவு காட்டுவதா? என்ன வேடிக்கை இது?

’ நான் கடவுள் ’ படத்தில் ஒரு காட்சி வருகிறது. குழந்தைகளையும், பெண்களையும், உடல் நலிவுற்றவர்களையும் கடத்திப் பிச்சை எடுக்க வைக்கும் நாயர் என்பவனை ருத்ரன் என்ற அகோரி அடித்து உதைத்துக் கொன்று தின்றும் விடுகிறான்.

அகோரிகள் பிரேதங்களை உண்பார்கள்.

ருத்ரனை போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறது.

” தம்பி, நீ யாரு? ” என்று கேட்கிறார் நீதிபதி.

“நான் கடவுள் ” என்கிறான் ருத்ரன்.

உடனே அவனை சித்தப் பிரமை பிடித்தவன் என்று நினைத்துக் கொள்ளும் நீதிபதி, போலீஸ்காரரை நோக்கி “ஏய்யா இப்படி கண்ட கண்ட ஆளுங்களையெல்லாம் இழுத்துண்டு வந்து நிறுத்தறே? ” என்று திட்டிவிட்டு, ருத்ரனைப் பார்த்து

“உன் விலாசம் என்ன? ” என்று கேட்கிறார்.

அதற்கு ருத்ரன் “நான் பஞ்ச பூதங்களிலும் இருப்பேன் ” என்கிறான்.

அந்த ருத்ரனைப் போன்றவர்கள் எழுத்தாளர்கள். (பிணந்தின்னிகளா சாரு ? )அவர்கள் சிருஷ்டிகர்த்தாக்கள். தேசம், மொழி, இனம், மதம், சாதி போன்ற எதற்கும் கட்டுப்படாதவர்கள். அவர்களுக்குப் போய் ஒரு சராசரி
மனிதன் பரிவுத்தொகை கொடுக்க முடியுமா?


கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு உண்டியலில் காசு போட்டு விட்டு வருகிறீர்கள். அதை பரிவுத் தொகை என்றா சொல்வீர்கள்? காணிக்கை ஐயா, காணிக்கை. இந்த உலகம் வாழ்வதற்கும், நீங்கள் ஜீவித்து இருப்பதற்கும் காரணமான கடவுளுக்குக் காட்டும் நன்றியின் ஒரு குறியிடே உண்டியலில் போடும் காசு. அதேபோல், இந்த மொழியும், இம்மொழி சார்ந்த கலாச்சாரமும், நாகரீகமும் செத்துப் போய் விடாமல் ஜீவித்திருக்க வைப்பவனே எழுத்தாளன். ( This is too much!! ) முடிந்தால் அவனுக்குக் காணிக்கை செலுத்துங்கள்; பரிவுத் தொகை தராதீர்கள்.


oOo

இவனுங்க யாருமே என் கண்ணோட்டத்தில் கடவுள்கள் இல்லை. சிலர் சில நேரங்களில் மட்டும் “மனிதனும் தெய்வமாகலாம்” என்ற நோக்கில் சிலருக்குக் கடவுள்களாகக் காட்சி தருகிறார்கள்.. அந்த வரிசையில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மனித நேயத்துடன் உதவுபவர்கள் ( வேறு யார் யார்னு நீங்க பின்னூட்டத்துல சொல்லுங்க ) , செயற்கரிய செய்யும் பெரியவர்கள் மட்டுமே கடவுள்களாக என் கண்ணுக்குத் தெரிந்தவர்கள்.


“நான் தான் கடவுள்” என்று நினைத்துக் கொண்டு அராஜகம் செய்பவர்களோ அல்லது சுய பிரஸ்தாபம் செய்து கொண்டிருப்பவர்களோ கடவுள் என்று நான் நினைப்பதில்லை !!


பின்குறிப்பு 1 : என்னை வாழ்த்த நினைக்கும் கடவுள்கள் வாழ்த்திக் கொள்ளலாம்.

பின்குறிப்பு 2: எனக்குத் தெரிஞ்சு சினேகா ரசிகர்கள் நிறைய பேருக்கு சினேகா கடவுளாக இருக்கிறார்... சில பேருக்கு (அபிஅப்பா?) தீபா வெங்கட், (நாமக்கல் சிபி?) நயன் தாரா போல..

73. சங்கத்தமிழும் சாரு நிவேதிதாவும்.

இன்று தமிழ்மணத்தில் ஒரு சுட்டியைப் படிச்சிக்கிட்டிருந்த போது அது எங்கெங்கோ போய் கடைசியில் “தமிழ் எழுத்தாளர்கள் படைப்புக்கள் நாட்டுடமையாக்கம்” என்ற தலைப்பில் சாரு நிவேதிதா எழுதிய இடுகையில் போய் நின்றது.


ஒரு எழுத்தாளரின் படைப்பென்பது அவரது மற்றும் அவர் குடும்பத்தாரது உடைமை. அவர்களின் சம்மதமின்றி அவற்றை நாட்டுடமையாக்குதல் என்று பேசுவதே தவறு என்ற சாருவின் கருத்துக்கு முழுவதும் (இந்த ஒரு கருத்துக்கு மட்டுமே.. அந்தப் பத்தியில் சாரு வேறு சில விஷயங்கள் எழுதியிருந்தார். அவையெல்லாம் விவாதத்துக்குரியவை !!) நான் உடன் படுகிறேன். அது தான் நியாயம்..


அந்தப் பத்தியில் சாரு எழுதுகிறார்..

சங்க காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது: அரசனைக் காண வந்த ஒரு புலவன் களைப்பு மிகுதியால் அரசனின் கட்டிலில் உறங்கி விட, அதை எதேச்சையாகக் காண நேரும் அரசன் அந்தப் புலவனின் பக்கத்தில் நின்றபடி அவன் எழுந்து கொள்ளும் வரை சாமரம் வீசினான்.

சாரு குறிப்பிட்ட அந்த சங்ககாலப் புலவர் பெயர் மோசு கீரனார். அந்தத் தமிழ் மன்னன் சேர நாட்டையாண்ட தகடூர் எறிந்த சேரமான் இரும்பொறை. அவர் படுத்துறங்கியது அரசனின் கட்டில் அல்ல.. அது முரசுக்கட்டில்.

இந்தச் சம்பவம் பற்றிப் புறநானூறு பாடல் 50 -ல் மோசு கீரனார் பாடிய பாடலுக்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சங்கத்தமிழ் புத்தகத்தில் விரிவாக எழுதுகிறார்.



கலைஞர் அவர்களின் வரிகள் தனி நிறத்தில் கொடுக்கப் பட்டுள்ளன.


மன்னனைத்தேடி வெகுதூரம் நடந்து வந்து களைப்புடன் வந்த மோசு கீரனார் ஓய்வு தேடினார். மன்னனை அவரால் உடனே சந்திக்க இயலவில்லை. மன்னன் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று கேள்வியுறுகிறார் (சாப்பிட்ட்டுவிட்டு மத்யானத் தூக்கம் போடுவது சங்கத்தமிழரின்
பழக்கம் போலும் !!)


.... மன்னன் உறங்குவது கேள்வியுற்று
அவனைக் காண அரண்மனையில் காத்திருந்தார்.
அவருக்கும் ஓய்வு கொள்ள வேண்டுமென்றோர் உணர்வு;


வீரமுரசம் வைக்கின்ற கட்டிலொன்று
வெண்மலர்கள் நிறைந்தவாறு இருக்கக்கண்டார்!
குருதி வழியும் போர்முகத்தில்
கொட்டுகின்ற முரசு வைக்கும்
கட்டிலென்று அறியாத புலவர் ஏறு
கண்ணுறங்க வசதியெனப் படுத்துக் கொண்டார் !!


வெற்றிகொள் முரசு வீற்றிருக்கும் கட்டில்மீது
வேறெவரும் படுப்பதெனில் பெருங்குற்றமென்
வேந்தர்கள் வெகுண்டெழுந்து தலைதனையே
வெட்டி வீழ்த்தும் காலம் அது!!


நீராட்டி எடுத்து வர வீரர் சிலர் - அந்தப்
போராட்டக் கள முரசை அகற்றியதால்
விவரம் தெரியா வித்தகப்புலவர் - அதில்
விழிகளை மூடி உறங்கலுற்றார் !


சிறிது நேரம் சென்ற பின்னர் ...அரசன் உறக்கம் களைந்து விழிப்புற்றான் !!


மாளிகையின் முன்புறத்தில் உலவுவதற்கு
மாமன்னன் வந்தபோது வியப்புற்று
முரசுக் கட்டிலருகே விரைந்தான் - அங்கு
மோசு கீரனார் உறங்குதல் கண்டான் !

"வாள் எடுத்து வந்திடவோ அரசே?" யென்று
ஆள் ஒருவன் வணங்கி நின்றான்...

அரசனின் விழிகள் நெருப்பைப் பொழியும்;
அவனது மொழியில் ஆத்திரம் வழியும்;
என்றந்த வீரன் நினைத்தற்கு மாறாக
”எடுத்து வா விசிறியை!” என்றான் வேந்தன் !!


காவலனோடிக் கொண்டு வந்த கவரியினைக்
கைகளில் ஏந்திக் கவிஞர் மீது
கனிவுடன் வீசிப் பணிவிடை புரிந்தான்
நனிமிகு புகழுடன் நாடாண்ட வேந்தன் !!


களைப்பு நீங்கிப் புலவர் எழுகின்ற வரையில்
கவரி வீசுதலை மன்னன் நிறுத்திவிடவில்லை..
நெடுநேரம் கழிந்த பின்னர் எழுந்த புலவர்;
திடுமெனக் குதித்தார் கட்டிலிலிருந்து;
“மன்னவனே என்ன இது?” எனத்துடித்தார்! - “இந்தச்
சின்னவன் பெற்ற பேறு” என்றான் சேரன் !!

“தமிழுக்குத் தொண்டு செய்தால் - அந்தத்
தமிழ் உள்ளளவும் வாழ்வோம் என்றடிவாக
என்னகத்தே வந்துள்ள தங்களுக்கு
நான் செய்த தொண்டு இஃதே” என்றான் சேரன்!

தேன் பெய்த பழச்சாறாய் பாட்டொன்றைப் பரிசாய்த் தந்தார் புலவர் !!!


‘மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதிவேட்கை உருகெழு முரசம்’ (புறநா.50)


வலிமையும் பெருமையும் உடைய தலைவனே! குற்றமில்லாது பின்னப்பட்ட வாரையுடையதும், கருமரத்தால் அழகுறச் செய்யப்பட்டதும், மயிர்ப்பீலிகளாலும் நவரத்தின மணிமாலைகளாலும் அணி செய்யப்பட்டதுமான இம்முரசு கட்டில் எண்ணெய் நுரைபோன்று மென்மையான உழிஞைப்பூக்களால் இனிது விளங்க, அதன் தன்மை அறியாது ஏறி உறங்கிக் கிடந்த என் தலையைக் கொய்யாது எனக்கு பணிவிடை செய்தவனே நீ வாழ்க எனப் பாடுகிறார்.



சாருவின் எழுத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்பு அவரது எழுத்துக்களில் அவரது சீரோ டிகிரி புத்தகத்தைப் படிக்காதவர்கள் என் எழுத்துக்களைச் சிலாகிக்க முடியாது என்ற தொனி முகத்தில் அறையும். என்னுடன் நியூயார்க் இரயிலில் வரும் நண்பரிடம்
இருந்த அந்தப் புத்தகத்தைக் கடன் கேட்டேன். என்னை ஒரு மாதிரி பார்த்தவர், “உங்க சொந்த ரிஸ்க்குல படிங்க !! அப்புறம் என்னைத் திட்டாதீங்க” என்று சொல்லித்தான் கொடுத்தார். மூன்று பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. ரண வேதனையாக இருந்தது. அந்தப் புத்தகத்தைத் தலை சுற்றி வீசியெறிந்து விட்டு நண்பரின் அதற்கான விலையைக் (”30 ரூ புத்தகத்தை 10 ரூபாய்க்காவது வாங்கிக்குங்க சார்” புத்தகக்கடைகாரர் கெஞ்சிக் கொடுத்ததாகக் கூறி ) கொடுப்பதாக கூறியபோது என் வீட்டில் ஒரு காபி மட்டும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு நன்றி சொன்னார் !!


அது முதல் சாருவை எப்பொழுதாவது “படிக்க எதுவுமே இல்லாதபோது மட்டுமே படிப்பது வழக்கம். அவர் எழுதும் பல விஷயங்கள் (குறிப்பாக லத்தீன் அமெரிக்க விஷயங்கள்) என் தலைக்குள் நுழைவதில்லை. எந்த இலக்கியத்திலுமே எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது. ஒரு
சாதாரண சராசரி வாசகனுக்கு உள்ள ஆர்வம் மட்டுமே எனக்கு உண்டு !!


ஆனாலும், இந்த “மோசு கீரனார்.. முரசுக்கட்டில் எல்லாம் 8ம் வகுப்புப் படிக்கும் போது தமிழ்ப் பாடத்தில் படித்ததுதான்”. சாரு பத்தி படித்ததுமே இவர்தான் அவர்... இந்தக் கட்டில் தான் அந்தக் கட்டில் எனப் புரிந்துவிட்டது. அரசர் சேர அரசர் என்று தெரிந்ததேயொழிய முழுப்பெயர் தெரியவில்லை.
கலைஞரின் சங்கத் தமிழ் புத்தகத்தைப் புரட்டியவுடன் சரியாக 5 நிமிடங்களில் அல்வாவாக விஷயம் கிடைத்தது.


ஒரு சாதாரண வாசகப் பாமரனாக, இப்போ சாரு நிவேதிதா அவர்களிடம் ஒரு கேள்வி (கேள்வி கேட்பதுதான் இப்ப வலப்பதிவுலக ஃபேஷன்.


“எது எதுவோ வாயில நுழையாத இலத்தீன், பிரெஞ்சு, கூபா (இதை இப்படித்தான் சொல்ல வேண்டுமென்று எல்லாருக்கும் சாரு கத்துக் கொடுத்தார் !!), பிரேசில் எழுத்தாளர் இலக்கிய ஆர்வலர் பேரெல்லாம் ஆராய்ஞ்சு எழுதறீங்க. இந்த மோசுகீரனார் விஷயத்தை கொஞ்சம்
விவரமாப் பாத்து எழுதியிருக்கலாமே. இது வெறும் 8-ம் கிளாஸ் விஷயமாயிற்றே.. இதெல்லாம் தாண்டித் தானே வந்திருப்பீங்க !! இதுக்கு ஒரு 5 நிமிஷம் செலவழிக்கறதுல உங்களுக்கு என்ன தயக்கம் ??




பின் குறிப்பு 1 : இந்தக் கேள்விக்கு சாரு என்னைத் திட்டினால் அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். இது வெறும் கேள்வி மட்டுமே. இந்தக் கேள்விக்கு சாரு பதில் சொல்லித்தான் தீர வேண்டுமென்று “சாகும் வரை 4 நாட்கள்” உண்ணாவிரதமிருக்கவோ அல்லது சாரு வீட்டுக்கெதிரில் தீக்குளிக்கவோ நான் தயாரில்லை !!


பின் குறிப்பு 2: இந்தப் பதிவுக்கு சினேகா படம் எதற்கு என்ற நியாயமான கேள்விக்கு என் பதில்,”சாருவுக்கான என் கேள்வி வெறும் நட்புணர்வில் மட்டுமே கேட்கப்பட்ட கேள்வி. மற்றபடிஅவரையோ அவர் வாசகர்களையோ புண்படுத்துவதற்காக இல்லை என்பதை “சினேக” முறையில் குறியீடாக உணர்த்த மட்டுமே சினேகா படம் போடப்பட்டுள்ளது.

Thursday, February 19, 2009

72. இவனெல்லாம் ஒரு வக்கீலா?

நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சுப்ரமணியசாமிக்கு நேர்ந்ததைப் படிக்கும் போது ஒரு இந்தியக் குடிமகனாக வெட்கப்படுகிறேன்..

ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் முன்பாகவே ஒரு மனுதாரர் (ஒரு முன்னாள் மத்திய அமைச்சரும் கூட) அவமானப்படுத்தப்பட்டார் என்பதை நினைக்கும் போது ஒரு சாதாரணக் குடிமகனாக, சட்டம் ஒழுங்கை நினைத்து கவலை வருகிறது

கீழே உள்ள படத்தில் பாருங்கள். ஒரு வக்கீல் ஒரு அரைச் செங்கல்லை ஆயுதமாக வைத்து செய்யும் அநியாயத்தை. இந்தச் செங்கல், இவர் வீசும் வேகத்தில் ஒரு மனிதர் (அவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டுமே !!) மேல் பட்டால் அவர் ஆயுளுக்கும் முடமாக மாட்டாரா? அவரை நம்பிப் பிழைக்கும் குடும்பத்துக்கும் ஆயுளுக்கும் கவலையளிக்கும் நிலை ஏற்படாதா?




ஒரு தனிப்பட்ட மனிதரின்.. குடும்பத்தின் வேதனையை இவர் நேரில் பார்த்திருக்க மாட்டாரா? எத்தனன எத்தனை விதமான் நோய்கள் !! எத்தனை விதமான உடல் ஊனங்கள் !! அவர்கள் ஒவ்வொரு நாளையும் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தள்ளுகிறார்கள் என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா?


இந்த செங்கல் .. இவர் மனைவியின் தலையையோ அல்லது குழந்தையின் தலையையோ (ஆண்டவரே மன்னியும் !!) பதம் பார்த்தால் இவர் எவ்வளவு வேதனையில் துடிப்பார்?

இங்கே என்ன மாங்காயா அடிக்கிறார்கள்? இவரையெல்லாம் சட்டம் படிக்க வைத்தது இதுக்குத்தானா?

இவ்வளவும் செய்துவிட்டு சுப்ரமணியசாமி மேலே தீண்டாமை பாதுகாப்பு குற்றச்சாட்டு வேறு பதிகின்றனராம்?

இவனெல்லாம் ஒரு வழக்கறிஞர் !

இவரும் இவர் வழி வந்தவர்களும் நாளைய சமுதாயத்தில் முன்னேறுவதற்காக, ரிசர்வேஷனும் ஏற்படுத்தி, அவருக்கு படிக்கும் போது உதவித்தொகையும் அளித்து, தங்குவதற்கு இடமும் வசதிகளும் படிப்பும் அரசாங்க செலவில் அளித்து, அவரை ஒரு வழக்கறிஞ்ர் ஆக்கினால்....

இவர் என்ன செய்யவேண்டும்? இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு நன்றிக்கடன் செலுத்த வேண்டும?







எந்த அரசாங்கம் இவர் முன்னேறுவதற்காக உழைத்ததோ.. எந்த மக்களின் வரிப்ப்ணம் இவரின் படிப்புக்கும் வசதிக்கும் செலவழிக்கப்பட்டதோ.. அவர்களின் சொத்துக்களுக்கு இவர் கோபத்திற்காக இவர் தீ வைத்து நாசமாக்குவாராம்..


அறிவில்லையாடா உனக்கு?

நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். இந்த காரியம் மன்னிக்கப்பட முடியாதது !!!

இதுவா நாங்கள் விரும்பிய சமுதாய முன்னேற்றம். இதற்காகவா, நீங்கள் முன்னேறவேண்டும் என்று நாங்களெல்லாம் கனவு கண்டோம் !!

ஒரு சமுதாய ஊழியனாக.. என் சொந்த முயற்சியிலும் என் சொந்த பணத்திலும் ..என் தனிப்பட்ட உழைப்பிலும்...என் குடும்பத்தின் உழைப்பிலும் என் சொந்த விருப்பத்தினாலும், ஆத்மார்த்தமாக இவர் சார்ந்த சமூக மக்க்ளை காத்து அவர்களுக்கு கல்வியும் செல்வமும் பெற ஒரு சமூக ஊழியனாக உழைப்பவன் என்ற என் பொறுப்பில்... இந்த வழக்கறிஞரின் செயலைப் பார்த்து...

நான் வெட்கப்படுகிறேன் !! நான் தலை குனிகிறேன் !!!

Thursday, February 12, 2009

71. அபிஅப்பாவின் குடும்ப அரசியல் !!

நமக்கெல்லாம் நம்ம கலைஞர் செய்யற குடும்ப அரசியல் தான் தெரியும். "குடும்ப" அரசியல்னா என்ன, எப்படி செய்யறதுன்னு நான் கலைஞரைப் பாத்துத்தான் கத்துக்கிட்டேன்.. இன்னும் எங்கியும் செஞ்சுப் பழகலை.. ஆனால் நம்ம அபிஅப்பா இப்பவே ஆரம்பிச்சுட்டார் போல..


கனிமொழி நிஜம்மாவே கவிஞரா ன்னு எல்லாம் எனக்குத் தெரியாது. அவங்க எழுதின கவிதைன்னு நான் படிச்சது எல்லாம் அந்த "தென்னாடுடைய சிவன்" கவிதை தான்.. ஆனால் அதுவும் அவங்க எழுதினதான்னு அவங்க கையெழுத்துல பாத்தாத்தான் தெரியும்..


இந்தமாதிரி நான் கேட்பேன் என்று முன்னாடியே தெரிஞ்சோ என்னமோ, நம்ப அபி பாப்பா கையெழுத்துல தானே எழுதிய கவிதையை ஸ்கேன் பண்ணிப் போட்டுட்டாரு... இப்போ நானே எந்தக் கேள்வியையும் கேட்க முடியாம "மயிலைக்கவிஞர் அபி பாப்பா" ன்னு தாசில்தார் சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டியதாப் போச்சு.. "மயிலை" என்பது மயிலாடுதுறையைக் குறிக்க வேண்டுமானாலும் வெச்சுக்கலாம் அல்லது "மழலைக் கவிஞர்" என்பதின் மெட்ராஸ் தமிழ் மொயிபெயர்ப்பாயும் வெச்சுக்கலாம..







இது என்ன கவிதை வகைன்னு தமிழறிந்த சான்றோரெல்லாம் திகைப்புல இருக்காங்க.. நம்ம மாதவிப்பந்தல் கேயாரெஸ் "இது எண்சீர் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம் தான்" என்று நியூ ஜெர்ஸியிலிருந்து துண்டைப்போட்டுத் தாண்டுறாரு.. நானென்னவோ இது "தரகு கொச்சகக் கலிப்பாவா இருக்குமோ" ன்னு நிகண்டு, சுகண்டு மிகண்டு எல்லாம் தேடிக்கிட்டிருக்கேன்..

நம்மக் கவிஞரின் முதல் அதிரடிக் கவிதையே இலக்கிய உலகத்துக்கே ஒரு புதிய பாதையாகப் பரிணமித்தது குறித்து மிக மகிழ்ச்சியடைகிறேன் !!



எது எப்படியோ..நம்ப அபிஅப்பாவின் குடும்ப அரசியல் வளர்ந்தால்.. எங்க ஊரு மயிலாடுதுறைக்கும் ஒரு இலக்கிட எம்.பி அப்புறம் ச்சின்னதா ஒரு கேபினெட் லெவல் மத்திய அமைச்சர் ப்தவியும் கெடைக்கும். ஏதோ எங்க அமைச்சர் அபிபாப்பா புண்ணியத்துல நானும் அபிஅப்பாவும் சேர்ந்து எங்க ஊர் DBTR National Higher Secondary School கட்டடங்களைக் கட்டிக்குவோம்..


மயிலாடுதுறையில் சமீபத்தில் கவிஞரைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது.. என்ன்மாய் ஒரு நுண்ணரசியல் வாதங்கள்.. எல்லாரையும் ஒட்டியும் பலசமய்ங்களில் வெட்டியும் பேசிய பாங்கு... எல்லாம் பார்க்கும் போது.. நம்ம பதிவர் அபிஅப்பாவே இதெல்லாம் நம்ம கவிஞரிடமிருந்து தான் கற்று வந்திருக்கிறார் என்பது உள்ளங்கை ஆப்பிள் போலத் தெளிவாகத் தெரிகிறது..


எப்போதும் கலைஞருடன் ஒட்டியே இருக்கும் ஆற்க்காட்டார் மாதிரி .அந்த ந்ட்டுப் பாப்பாவும் இப்போ இருக்கிறார்ப்போல் தெரிகிறது.. கவிதையிலே கையெழுத்து போடும் போது "நட்ராஜ்" -னு நட்டுப்பாப்பா பேரையும் போட்டதிலிருந்தே.. இன்னொரு "தென் மண்டல அமைப்புச் செயலாளர் உருவாகிறார்" னு தெரியவில்லையா..

நாலு பேருக்கு நல்லதுன்னா ஓண்ணுமே தப்பில்லை-ன்னு நம்ம வேலு நாயக்கர் சொன்னா மாதிரி.. எங்க ஊருக்கே நல்லது-ன்னா அபிஅப்பாவின் குடும்ப அரசியலும் தப்பில்லைதான்..

அபிஅப்பாவின் குடும்பம் வாழ்க!!!

புகைப்படம்: கவிஞருடன் நான்.. (புகைப்படம் எடுத்தவர் "எதிர்கால தென்மண்டல அமைப்புச் செயலாளர்" alias மயிலை ஆற்காட்டார் alias நட்டுப்பாப்பா )

Monday, February 02, 2009

70. கவிதை - கலைஞர் கருணாநிதி !!

மந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !

பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை !

பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை !

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி!

வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ;
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!!
மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?

வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வன் குவிக்கின்ற மனிதரிடம்;
மன்றமேறி அறிஞ்ர் அண்ணா கேட்டார் - அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !!




உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

உலகில் பிறந்தார் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும் போது - இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?



தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்..!!



இப்படியெல்லாம் கலைஞர் "சங்கத் தமிழ்" புத்தகத்திலே பக்கம் 288-ல் சொல்லியிருக்கிறார் !!



அந்தப் படத்தில் உள்ள பையன் இதெல்லாம் கலைஞரைப் பார்த்துக் கேட்கிறமாதிரி இருக்கிற தென்று நீங்கள் நினனத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை..


படம் உதவி: நண்பரும் சக பதிவருமான ஐயப்பன்

Thursday, January 01, 2009

69. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 !!


சக பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..
எல்லா வளமும் புனலெனப் பொங்கித் தழைக்க என் பிரார்த்தனைகள்..