Saturday, June 27, 2009

81. பைத்தியக்காரன்..சாரு நிவேதிதா..ஜெயமோகன்..

இன்னிக்குப் பொழுது போகாமல் பதிவர் பைத்தியக்காரன் அவர்களின் ”சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்” என்ற பதிவுக்குப் போய்விட்டேன்.

முழுவதுமாக படித்து முடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது. சாரு பதிவு போட்ட மறுநாளே தலைவர் போட்டுவிட்டதால் எதையுமே refer பண்ணி எழுதின மாதிரி தெரியவில்லை.

தலைவர் மனதிலிருந்து அப்படியே கொட்டியிருக்கிறார். எவ்வளவு விஷயங்கள் மனதில் வைத்திருக்கிறார். எல்லாமே ச்சின்னச்சின்ன சண்டைகள்..பூசல்கள்.. மற்றும் நிகழ்ச்சிகள்.

தேதி வாரியாக “நீ இப்படி எழுதினே”..”அவர் இப்படி எழுதினார்” என்று ச்சும்மா புட்டுப்புட்டு வைக்கிறார்.

இவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வதென்றால் உண்மையிலேயெ பெரீய்ய்ய ஆள்தான். அவசியம் சந்திக்க வேண்டும். ஆனால் சிறு பத்திரிகைகளோ இலக்கியங்களோ நமக்கு அவ்வளவு பழக்கமில்லை. அதிகம் படித்ததில்லை.

சினிமா பத்திப் பேசலாம் என்றால் நம்ம ரேஞ்சே தனிதான்.. அதிக பட்சம் சிவாஜி, பசங்க, சந்தோஷ் சுப்பிரமணியம், அபியும் நானும் பேசலாம்.. மத்தபடி “கிம் கி டுக்” எல்லாம் நமக்குத் தெரியாது.. முடிஞ்சால் சந்திச்சுப்பார்ப்போம்.. பேச விஷயமா கிடைக்காது..



இவர் இப்படி எழுதியிருக்கிறாரே.. சாரு அப்படி என்னதான் எழுதியிருக்கார் அதையும்தான் பார்த்திடுவோமே என்று அங்கு போனால் அது பெரிய குப்பையாக இருந்தது...

தொடர்ந்து ஜெயமோகனையும் படித்தேன். ஜெயமோகனை எனக்கு மரத்தடி குழும நாட்களிலிருந்து தான் தெரியும். அங்கு அப்பொழுது குழுவினரின் கேள்விகளுக்கு ஜெயமோகனிடமிருந்து பதில் கேட்டுப் போட்டார்கள்.

அவர் பதில்களை அப்பத்தான் படித்தேன். நான் ஏதோ “அரசு பதில்கள்” லெவலுக்கு 2 வரி எழுதியிருப்பார்னு நெனச்சேன். மனிதர் ஒவ்வொரு கேள்விக்கும் 5 பக்கம் விரிவான பதில் எழுதியிருந்தார். ஒவ்வொரு பதிலிலும் ஒரு சின்சியாரிட்டி தெரிந்தது. அது முதல் ஜெயமோகன் பத்திகள் படித்திருக்கிறேன். நல்லா எழுதுகிறார் என்ற அபிப்பிராயம் இருந்ததால் அவ்வப்போது படிக்கிறதுண்டு..


இப்போ இவங்க ரெண்டு பேர் போடும் சண்டையைப் படிச்சால் குப்பத்து சண்டையை விடக் கேவலமாக இருக்கிறது. படிக்கும் போதே ஒரு அருவருப்பு வந்து விடுகிறது. “இவனுங்களுக்கு எழுத வேற விஷயமே கிடைக்கலையா? அல்லது விஷயஞானம் இல்லியா” என்கிற சந்தேகம் வந்திடிச்சி. .. இப்படி குப்பையை எழுதிக் கொண்டிருப்பதற்கு இவங்க பேசாமல் எங்கியாவது வேற வேலைக்குப் போகலாம்..


நானெல்லாம் பெரிய்ய இலக்கியவாதியெல்லாம் கிடையாது. எங்கியாவது நல்ல மேட்டர் இருந்தால் தேடிப்படிக்கும் ஒரு சராசரிக்குக் கீழான வாசகன். வீட்டுல மட்டும் நம்ம கலெக்‌ஷன்ல ஒரு ஆயிரம் தமிழ்ப்புத்தகங்கள் இருக்கு.. அப்பப்ப படிப்பதுண்டு.. வருஷா வருஷம் இந்தியா போகும்போது குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்காவது புத்தகம் வாங்கி வருவதுண்டு.. எதையாவது படிச்சால் ஏதாவது புதுசாத் தெரிஞ்சுக்கலாமா அப்படீன்னு மட்டும் தான் நினைப்பதுண்டு.. இன்னிக்கு இந்தக் குப்பைகளைப் படிச்சி மனசு குப்பையானது நான் மிச்சம்.


கன்னா பின்னான்னு திட்டத் தோணுது.. நாகரீகம் தடுக்கிறது.. இவனுங்க தான் எழுத்தாளர்கள் ..இவனுங்க எழுதுவதுதான் இலக்கியம் அப்ப்டீன்னு சொன்னா அதெல்லாம் எனக்குத் தேவையில்லை-ன்னு முடிவுக்கு வந்தாச்சி.. இதை ஒரு தனிப்பட்ட ஒரு சீமாச்சுவின் எண்ணமாகப் பார்க்காமல் ஒரு சராசரி வலை வாசகனின் எண்ணமாகப் பாருங்க..


இவங்களையெல்லாம் இனி ஜென்மத்துக்கும் படிக்கப் போறதில்லை.. வேற ஏதாவது உருப்படியாச் செய்யலாம் அப்படீன்னு முடிவுக்கு வந்தாச்சி..


குப்பைகள் !!!!


பி.கு: பதிவில் இருவரைக் குறிப்பிடும் போதும் விகுதிகள் மரியாதை குறைந்து விழுந்துள்ளன. அது என் தார்மீகக் கோபத்தில் வந்தது தான்.. ”அது எப்படி எழுதலாம்” என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை..

பி.கு: சாரு பத்தி எழுதும்போது சினேகா போட்டா போடாவிட்டால் எப்படி?

Monday, June 08, 2009

80. சூர்யா .. என்ன ஒரு பிரார்த்தனை !!

அமெரிக்காவிலிருந்து இந்தியா கிளம்பிப் போவதென்றால் ஒரு ஆறு வயசுக் குழந்தை ஆண்டவனிடம் என்ன பிரார்த்தனை செய்யும்?

மனைவி, குழந்தைகளெல்லாம் வெள்ளிக்கிழமை கிளம்பி இந்தியா போய்ச் சேர்ந்து விட்டார்கள். இன்னும் 10 வாரத்துக்கு வீட்டில் தனிமைதான். வருடா வருடம் இந்த நேரம் இப்படித்தான்.. 91 வயசு அப்பாவுக்கு பேத்திகளுடன் விளையாட மகன் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக கடந்த 9 வருடங்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன். எங்கேயும் அதிகமாக பயணிக்க மாட்டார்கள். மயிலாடுதுறையில் தாத்தாவுடன் இருப்பது மட்டுமே வேலை..


கடந்த சில மாதங்களில் இரண்டு விமான விபத்துக்கள் !! US Airways விமானம் ஒன்று பறவைகளால் சேதப்பட்டு ஹட்சன் நதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அது நியூ யார்க்கிலிருந்து எங்க ஊருக்கு வந்த விமானம் !!

சில தினங்களுக்கு முன் Air France விமானம் அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளாகி 228 பேர் பலியானார்கள் !!

இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் டீச்சர் குழந்தைகளிடம் பேசுவார்கள் போலிருக்கிறது.. சூர்யா படிப்பது ஒண்ணாங் கிளாஸ். அவளுக்கு இந்த விபத்துக்கள் பற்றித் தெரிந்திருக்கிறது..

ஊருக்குக் கிளம்புமுன் இதுதான் அவள் பிரார்த்தனை !!

Muthamma !! (இது வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசுவாமிக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர்)..

Muthamma !! we are travelling to India today. Please make sure no flying birds gets into our plane's engine. Dont make our plane blast midway in the air !! Please save all of us !!

என்னிடம் திரும்பி.. “Daddy, please pray for us to Muthamma !!"

அந்தச் சின்ன மனசுக்குள் எவ்வளவு பெரிய பாரம் !!! ப்ளேனில் போகும் அந்த 22 மணி நேரங்களும் இந்த பயமே அவள் மனது முழுவதும் இருந்திருக்குமோ !!

இதெல்லாம் வகுப்பில் விவாதித்தே ஆகவேண்டிய விஷயமா !!


குழந்தைகளுக்கு இதெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை !! நானெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் வானத்தில் அண்ணாந்து பார்த்துத்தான் விமானம் பார்த்திருக்கிறேன். பயணித்ததில்லை !!