Sunday, December 19, 2010

107. துறவியும் துளைகளும்..

விழுப்புரம் : கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரத்தில் நடந்த அனைத்து முதலியார், வேளாளர் முன்னேற்றப் பேரவையின் நான்காம் ஆண்டு நல்விழா கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ஜாதி உணர்வு அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஒன்று. ஜாதி தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளை அரசியல் கட்சிகளால் ஒரு போதும் ஒழிக்க முடியாது. ஒரு ஜாதி மற்றொரு ஜாதியோடு மோதிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மனிதனுக்கு பக்குவம் ஏற்பட அனுபவம் தேவை. பக்குவம் வரும் போது ஞானம் வருவதால் உயர்வு பெறுகிறான்.



முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்து போடுங்கள். பிறக்கும் குழந்தைகளுக்கும், பள்ளியில் சேர்க்கும் போதும் பெயருக்கு பின் ஜாதி பெயரை சேர்த்து வையுங்கள். அப்போது தான் அவர்கள் பிற்காலத்தில் தான் பிறந்த ஜாதியை உயர்த்த பார்ப்பர்.

அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யும் போது 153 ஜாதிகளையும் ஒருங்கிணைத்து, "முதலியார் வேளாளர்' என்று ஒரே பட்டியலில் பதிவு செய்யுங்கள். சங்க நிர்வாகிகள் நன்கொடை வசூல் செய்து அதில் துவங்கும் தொழில்களுக்கு நம் ஜாதியை சேர்ந்தவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துங்கள். உங்கள் பிள்ளைகளை ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்



ஓரு துறவியின் வேடம் பூண்டு .. சமுதாயத்தின் சீர் கேடான, ஜாதி உணர்வைத் தூண்டும் வழியில் பேசிய மதுரை ஆதீனத்தைக் கண்டிக்கிறேன்.. 153 ஐக் கூட்டினால் 9 வருகிறதாம்.. அதனால் அது உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கிறதாம்.. "I love you " என்று சொல்வதற்கு 143 என்றும் குறியீடு உண்டு .. அதற்கு என்ன சொல்வாரோ..-


25 comments:

கோவி.கண்ணன் said...

இந்தமாதிரியான சாமியார்களை செருப்பால் அடிக்கனும்

bandhu said...

சுத்த பேத்தல்! சரியான சாதிகளின் கணக்கு 154 வருகிறது என்றால் ஒரு ஓட்டை மேலும் போடவேண்டியிருக்குமோ?

நிகழ்காலத்தில்... said...

ஆன்மீக வேடத்தில் உருப்படாத சென்மம்...:((

மிகவும் கீழ்தரமான பேச்சு...

priyamudanprabu said...

இந்தமாதிரியான சாமியார்களை செருப்பால் அடிக்கனும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

அந்த நாய் கையில கிடச்சா என் சார்பாகவும் செருப்பால அடிங்க.. சாகட்டும்... அவப்னவன் ஜாதியே வேண்டாமுன்னு சொல்றான்.. இவன் என்னடான்னா.. சாதிய வளக்கனுமாம்..

vasu balaji said...

மடத்து சோறு. பேசச் சொல்லும்:)

அபி அப்பா said...

எனக்கு என்னவோ மதுரை ஆதீனத்தை பார்த்தாலே அவரை கட்டிப்போட்டு விசயகாந்து படமா போட்டு கொல்லனும் போலவே இருக்கும்:-)

அபி அப்பா said...

எனக்கு என்னவோ மதுரை ஆதீனத்தை பார்த்தாலே அவரை கட்டிப்போட்டு விசயகாந்து படமா போட்டு கொல்லனும் போலவே இருக்கும்:-)

க.பாலாசி said...

இவன் ஒரு லூசுங்க..

Unknown said...

சும்மா சோறு கெடச்சா,,! யார்வேணா, குரைக்கலாம்..!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தக் காவியின் வண்டவாளம் தான் சிலவருடங்களுக்கு முன் பத்திரிகையில் நாறியது. நிந்தியானந்தன் பிடிபட்ட நாதாரி;;;இவர் பிடிபட்டும் துடைத்தெறிந்த நாதாரி..;மடத்து ஆசிரியையுடன் குடும்பம் நடத்தி ஒரு பிள்ளையும் உண்டு.
இவன் அரசியல் அத்தர் பல்டிக்கு... டாக்டர் பட்டம் கொடுக்கலாம்; இவனெல்லாம் ஒரு மனிதன் ; தொலைக்கப்படவேண்டியவன். உழைக்காமல் உண்ணும் கொழுப்பில் பிதற்றுகிறான். வெடிகுண்டுகள் இவனுக்காக உருவாக்கினாலும் தவறில்லை.
இந்த கிறுக்கனின் பேச்சை எவரும் கருத்தில் கொள்ளார் எனக் கருதுகிறேன்.

சிங்கை நாதன்/SingaiNathan said...

//சுத்த பேத்தல்! சரியான சாதிகளின் கணக்கு 154 வருகிறது என்றால் ஒரு ஓட்டை மேலும் போடவேண்டியிருக்குமோ?//

@Bandhu இல்லை .

154 -> 10 -> 1

எனவே மிச்ச 8 ஐ அடைக்கனும். ;)

அன்புடன்
சிங்கை நாதன்

தருமி said...

மேடையில் உக்கார வச்சிட்டா எதையும் யோசிக்காம பேசிடுவானுங்க போல ...

அரசூரான் said...

அண்ணே... எனக்க்கு அவ்வை சண்முகி படத்துல வர மணிவண்ணன் வசனம்தான் நினைவுக்கு வருது “ஓட்டை வாய்டா முதலி உனக்கு”

அரசூரான் said...

துறவிகளும் தொல்லைகளும்ன்னு தலைப்பை மாத்தி படிச்சிட்டேன்...ஹி...ஹி...ஹி

ILA (a) இளா said...

பாவம் ஏதோ மனுசப் பய உளறுதுன்னு விடாம..

சீமாச்சு.. said...

கோவியாருக்கு ஸ்பெஷல் நன்றி...

என்னடா நம்ம பதிவு 9 ஓட்டு வாங்கி 16 பின்னூட்ட்டமும் வாங்கிடிச்சேன்னு ஆச்சரியமா கன்னத்தில கையை வெச்சிக்கிட்டு யோசிச்சா... அபிஅப்பா வந்து “கோவியாரு உங்க இடுகையை பஸ்ஸுல விட்டுட்டாரு.. அதான் இங்க இவ்வளவு கூட்டம்” நு சொன்னாரு..

பஸ்ஸு விட்ட கோவியாருக்கு நன்றி...

என்னை இன்னும் பிரபலமாக்கின ஆதீனத்துக்கும் நன்றி !! (இந்த நன்றி அபிஅப்பா சொல்லச் சொன்னாரு..)

சீமாச்சு.. said...

//bandhu said...
சுத்த பேத்தல்! சரியான சாதிகளின் கணக்கு 154 வருகிறது என்றால் ஒரு ஓட்டை மேலும் போடவேண்டியிருக்குமோ?//

வாங்க பந்து.. வருகைக்கு நன்றி... இன்னொரு ஓட்டை போட்டுக்கச் சொன்னாலும் சொல்லுவாரு...

சீமாச்சு.. said...

@நிகழ்காலத்தில்
@பிரியமுடன் பிரபு
@வெறும்பய

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. நான் அடுத்த முறை மதுரை ஆதீனத்தைச் சந்திக்க நேர்ந்தால் உங்கள் கோரிக்கை நிறைவேற்ற ஆவன செய்கிறேன்

சீமாச்சு.. said...

@வானம்பாடிகள்..

வாங்க ஐயா.. உங்க கேரக்டர் பதிவுகளின் ரசிகன் நான்.. இவரையும் ஒரு கேரக்டரா எழுதிடுங்களேன்...

சீமாச்சு.. said...

அபிஅப்பா, பாலாசி, பேரரசன், சிங்கை நாதன், இளா, தருமிஐயா, யோஹன், அரசூரான்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..
என்னுடைய இந்தப் பதிவு இவ்வளவு கவனிப்பு பெறும் என்று நான் நினைத்ததில்லை

நன்றி

Anonymous said...

கே.கூ.

- அப்துல்லா

Anonymous said...

கே.கூ.

- அப்துல்லா

ஜெ. ராம்கி said...

மதுரைக்காரர் முன்னாள் பத்திரிக்கைகாரர். வெத்து பரபரப்புக்காக அவ்வப்போது ஏதையாவது அவிழ்த்து விடுவார். இந்தமுறை அவிழ்ந்தது வேஷ்டி.

chinnathambi said...

abi appa ?

neenga avvala periya vanmuraiyaalara? paavam saami viturunnga,

illana innum 2 vijay padamum sethuu pottu sammiya kinnurunga


link koduthhthukku thanks
kovi.kannan