Monday, March 12, 2007

40. சிறந்த நடிக நடிகையருக்குப் பரிசு


சமீபத்திய செய்தி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் சமீபத்தில் நடந்த பொழுது, கமிட்டியில் போடப்பட்ட தீர்மானமாக, மத்திய அமைச்சர் EVKS இளங்கோவன் கூறியது "மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் ஒரு விருது நிர்மாணிக்கப்பட்டு, தமிழின் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்."
சிவாஜி மிகச்சிறந்த நடிகர் தான். மறுப்பேதுமில்லை.. நானும் சிறு வயது முதல் அவர் ரசிகர் தான்.
அவர் பெயரில் ஒரு விருது தருவதும் நியாயம் தான்.. தவறில்லை..
எல்லா விருதுகளையும் எதுக்கு சினிமா நடிகர் நடிகைகளுக்குக் கொடுப்பானேன்?
நாட்டில் விருது பெறும் அளவுக்கு தொழில்களோ தொழிலாளர்களோ எதுவுமே இல்லையா?

ஒரு சிறந்த டாக்டருக்குக் கொடுக்கக் கூடாதா? ஒரு சிறந்த பொறியாளருக்குக் கொடுக்கக் கூடாதா? அல்லது ஒரு சிறந்த கொத்தனாருக்கு, தச்சருக்கு, ஆசிரியருக்கு, பாங்க் மேனேஜருக்கு, சிறந்த மாணவருக்கு .. இன்னும் யார் யாருக்கோ தரலாமே ஐயா !!!
இவங்களுக்கெல்லாம் சிவாஜி பெயரில விருது தந்தா சிவாஜிக்கும் பெருமை தான்!! அவங்களுக்கும் பெருமைதான்..
மறுபடி மறுபடி சினிமாக்காரங்களுக்கு என்னய்யா ஒரு விருது?
விருது தருகிறேன் என்ற பெயரில் ஒரு ரஜினியையோ, கமலையோ அல்லது சிநேகா, அசின், திரிஷா என்று யாராவது பெரிய நடிக நடிகையரை அழைக்கலாம்.. அவங்களுக்கு எப்போ தோதுப் பட்டுதோ அப்ப வரலாம்.. நாங்க விருதை வெச்சிக்கிட்டுக் காததிருக்கவும் தயார்... என்ன கூடவே ஒரு டீ.வீ கம்பெனிக்கும் சொல்லிவெச்சு.. அதில் எங்களையும் காட்டிக்குவோம்.. எலக்ஷன் நேரத்திலே கூப்பிடுவோம்.. முடிஞ்சால் வந்து மறக்க்காமல் பிரச்சாரத்துக்கு வந்திடுங்க...
இந்த மாதிரி எண்ணவோட்டங்கள் உங்கள் அறிவிப்பிலேயே தெரிகிறதே..
அது என்னவோ.. நம்ம தமிழ் நாட்டு கட்சிக்காரங்க எல்லாம்.. மக்களைப் சுத்த 'பழங்களாக' நினைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!
இதெல்லாம் மீறியும் நம்து இந்தியா வளரும் என்று நம்புவோம்...
படம்: ஒரு 'பழம்' பெரும் நடிகர்..

1 comment:

அபி அப்பா said...

ஆஹா! அற்புதம் அந்த பழம் பெரும் நடிகர்:-))). நல்ல கருத்துடைய பதிவு சீமாச்சு!