Sunday, May 22, 2011

118. தேவை பிரம்ம ராட்சத பூதங்கள்!!!



நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுத் தோல்விக்குக் காரணங்களை அலசும் முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி ஒரு காரணமாகக் குறிப்பிட்ட ,

”தமிழ்நாட்டிற்கென்றே தனியான ‘ஜபர்தஸ்துகளை’ ஜனநாயக விரோதச் செயல்களைச் சாட்டைகளாகக் கொண்டு சர்வாதிகார ‘பாட்டை’ வகுத்துக் கொண்ட தேர்தல் கமிஷன் என்ற பிரம்மராட்சத பூதம்”

என்று தேர்தல் கமிஷனைக் குறிப்பிடுகிறார்.


தமிழகத்தின் சராசரி வாக்காளர்களால் பாராட்டப்பட்ட, ஏன் தெய்வமாகவே பார்க்கப்பட்ட தேர்தல் கமிஷனர் திரு பிரவீண் குமாரின் செய்கைகள் எந்த விதத்திலும் ஜனநாயக விரோதமானவில்லை என்பது ஊழலின் ஊற்றுக்கண்களுக்குத் தெரியப்போவதில்லை..

“மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்.. வாக்களித்தவர்களுக்கு என் நன்றி” என்று பெருந்தன்மையாகத் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தெரியாதவர்களுக்கு.. நன்மைதரும் தெய்வங்களெல்லாம் பிரம்ம ராட்சதர்களாகவேதான் தெரியும்..

தெரியட்டும்...

இந்தியாவில் நீதியையும் நேர்மையையும் ஊழலற்ற ஜனநாயகத்தையும் நிலைநாட்ட நமக்குத் தேவை பிரவீண்குமார் போன்ற (எதிரிகளுக்கு) பிரம்மராட்சச பூதங்கள் போலத் தோற்றமளிக்கும் தெய்வங்கள் தான் !!

2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆழ்வார்களை பேயாழ்வார், பூதத்தாழ்வார்-ன்னு சொல்லுறதில்லையா? ஏன்? எம்பெருமானைப் "பேய்" போல் பிடித்துக் கொள்கிறார்கள்! பேயை ஓட்டுறது ரொம்ப கஷ்டம்! :) அது போல கலீஞரு சொல்லுற "பூதம்" தமிழ்நாட்டை நல்லாப் பிடிச்சிக்கட்டும்! :)

சீமாச்சு.. said...

கேயாரெஸ்... எந்த ஒரு செய்தியிலும் பெருமாளையும் ஆழ்வார்களையும் கொண்டு வந்து அழகாக இணைப்பதில் உங்களை அடிச்சிக்க ஆள் கிடையாது..

நன்றி..