Sunday, May 22, 2011

117. வெட்கமில்லாதவர்களா இவர்கள்?

எங்க ஊர் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜ்குமார் பற்றி நான் பெருமையாக நினைத்த காலங்கள் உண்டு. அவருடைய செய்கைகளை நான் நேரில் இருந்து பார்த்த நிகழ்வுகள் உண்டு என்பதால் அவர் அந்த பெருமைக்கு உரியவர்தான் என நினைத்ததுண்டு.. தேர்தல் தோல்வி என்பது ஒருவரை எப்படி மாற்றும் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம்..

நான் மட்டுமல்ல. இவர்தான் எங்கள் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராகவேண்டும் என இவருக்கு வாக்களித்த 60,000 வாக்காளர்கள் இவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்..

இன்னொருவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால்.. அவரை மனதார வாழ்த்திவிட்டு தனது அலுவலகத்தை அவரிடம் நல்ல முறையில் ஒப்படைத்து வருவார் என நான் நினைத்தேன்.. இந்த மாதிரி சட்டமன்ற அலுவலக காம்பவுண்ட் சுவரை உடைத்து எடுத்துச் செல்வாரென்றும் அதனை நியாயப்படுத்திப் பேசுவார் என்றும் நான் நம்பவில்லை..

அவரை அடுத்த முறை சந்திக்கும் போது இது குறித்து நிச்சயம் கேட்டு பதில் எழுதுகிறேன்..


*******

தோல்வியைத் தழுவிய மயிலாடு துறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அலுவலகத்தில், தான் கட்டிய சுற்றுச் சுவரையும் இடித்து அதனை அள்ளிப்போட் டுக்கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

‘இப்படி எல்லாம் நடக்குமா?’ என்ற ஆச்சரியத்துடன் பலரிடம் விசாரித்தோம்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பாங்க் சாலையில் அரசுக்குச் சொந்தமான சட்டமன்ற அலுவலகக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் வெறும் முள்வேலியால் ஒரு தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார் அலுவலகத்தைச் சுற்றி தனது சொந்த செலவில் ஒரு சுற்றுச்சுவரை அமைத்தார்.

ஐந்து வருடங்கள் அந்த அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்த ராஜ்குமார், சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் பால. அருட்செல்வனிடம் 3,017 வாக்குகள் வித் தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

‘தொகுதிக்குப் புதியவரான தே.மு.தி.க. வேட்பாளர் பால. அருட்செல்வனை எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு ஒன்றும் பெரிய காரியமில்லை’ என்று தேர்தல் சமயத்தில் தெம்பாக வலம் வந்தவருக்கு மக்களின் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்துவிட, நொந்துபோனார் ராஜ்குமார்.


இதற்கிடையே, எம்.எல்.ஏ.வின் உத்தரவின் பேரில் அவரது ஆட்கள் அலுவலக ‘காம்பவுண்ட்’ சுவரை இடித்தனர்.

இந்நிலையில், பிரச்னைக்குரிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாரிடமே ‘ஏன் காம்பவுண்ட் சுவரை இடித்தீர்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினோம்.

“நானே அமைத்தேன். நானே எடுத்துக்கொண்டேன். இந்த ‘காம்பவுண்ட் சுவரை ரை அமைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ‘தற்காலிக சுற்றுச்சுவர்’ என்று அனுமதியை வாங்கித்தான் கட்டினேன். இப்போது அவர்களே எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

அதனால் சுவரை இடித்து ‘ரெடிமேட் காம்பவுண்ட் பிளேட்களை’ எடுத்தேன். இனி அரசு கட்டிக்கொள்ளட்டும். அலுவலகத்தை முறைப்படி காலி செய்து கொடுக்க வேண் டும் என்ற அடிப்படையில்தான், நான் சொந்த செலவில் கட்டிய ‘காம்பவுண்டை’ எடுத்துக்கொண்டு ஏற்கெனவே இருந்த நிலையில் ஒப்படைத்திருக்கிறேன். என்று கூறினார்.

செய்தி உதவி: குமுதம் ரிப்போர்ட்டர்



1 comment:

Rex said...

Childish act..For sure, he screwed his political career. Nothing Less. Poor guy.