Tuesday, February 07, 2006

தேர்தலில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் !!

இன்றைய தினமலரிலிருந்து....

தேர்தலில் போட்டியிட தியாகிகள் சங்கம் முடிவு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட நெல்லை மாவட்ட தியாகிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த தொகுதிகளில் தியாகிகள் சங்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காம் தியாகிகள் சங்க கூட்டம், சங்கத் தலைவர் முன்னாள் கலெக்டர் லட்சுமிகாந்தன் பாரதி தலைமையில் வரும் 11 ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தென்காசி மலர் ஐ.டி.ஐயில் கூடுகிறது. தியாகிகள் சங்க உறுப்பினர்களும், மற்றும் காந்தீயவாதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.



யாருக்காவது இந்த சங்க உறுப்பினர்களைத் தெரியுமா? என் குடும்பத்தினர் சார்பாக, அவர்களின் தேர்தல் செலவுகளுக்கு, என்னாலியன்ற நிதியுதவி செய்ய ஆசைப்படுகின்றேன்... அவர்களை அறிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லவும்.

நல்லவர்கள் நோக்கம் நிறைவேற ஆண்டவனை வேண்டுவோம்.