Tuesday, July 08, 2008

63. உதவிய நெஞ்சங்களுக்கு உளமார்ந்த நன்றி...



சென்ற வாரம் முழுவதும் ஒரு பிரளயமாகப் போய்விட்டது. மனைவியின் நெருங்கிய உறவினர்.. படிப்பதற்காக அமெரிக்கா வந்த இளைஞர், எதிர் பாராத முறையில் மரித்து விட.. அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலையில்.... என்ன செய்வதென்று தெரியாமல்.. திகைத்து நின்றேன்..



உடனடியாகத் தோன்றியது நமது பதிவுலக நண்பர்கள் தான்.. கேள்விப்பட்டவுடன்.. அனைத்து நண்பர்களும்.. எனக்குத் தொலைபேசி.. தேவையான உதவிகளைச் செய்து தந்தனர்.



மறைந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் ச்டங்குகள் அவரது பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க ஆஸ்டின் நகரிலேயே நடத்தப்பட்டது...



உதவிய உள்ளங்களுக்கு நன்றி.. அனைவரையும் தொலைபேசியில் அழைத்து என் தனிப்பட்ட நன்றியைச் சொல்வேன். அதற்கு முன்.. இந்தப் பதிவு..





நிறைய நண்பர்கள்.. இவர்களை நண்பர்களாகப் பெற்றது.. இறைவன் செயல்..



செய்தியைச் சொன்ன உடனேயே.... பதிவெழுதி..சுவரொட்டியிட்ட கேஆரெஸ்..



பதிவைப் பார்த்த உடனேயே.. இரவு பதினோரு மணிக்கு மேலும் போன் செய்து நண்பர்களின் தொடர்பு தந்த அருமை நண்பர் டாக்டர் வீயெஸ்கே,



நண்பர்கள் தொலைபேசியையும் அவர்களிடம் எனது தேவையையும் சொல்லி உதவச்சொன்ன பதிவரும், மயிலாடுதுறை வாசியுமான எங்கள் பள்ளி முன்னாள் மாணவர் முத்துக்குமார்..



என் பெயரையே (அவர் பெயரை நான் தான் வைத்துக் கொண்டுள்ளேன்..) வைத்திருக்கும் எங்கள் ஊர்க்காரர் அன்பு வாசன் பிள்ளை, அவர் சகோதரர் நிரஞ்சன் பிள்ளை, அவர் நண்பரும் ஆஸ்டின் நகர சாய்பாபா மைய நிறுவனருமான அன்பு நண்பர் காங்கேயன்,



என்னை அழைத்து.. உதவி தேவையானால் எந்த நேரமும் அழைக்கத் தவறாதீர்கள் என வாக்களித்த் ஆஸ்டின் நகர நண்பர் சீனிவாசன்,



அமெரிக்க சூழல் சார்ந்த ஏராளமான செய்திகளை தந்து உதவிட்ட சக பதிவர் திருமதி பத்மா அரவிந்த், அவரது உறவினர் திருமதி சுஜாதா



வாகன உதவியும், உணவும், ஆறுதலும் அள்ளித்தந்த நண்பர் சேவியர், நண்பர் கணேஷ்குமார்..



இன்னும் நிறைய நல்ல நெஞ்சங்கள்...



இவர்களின் நட்பைப் பெற என்ன தவம் செய்தேனோ....





அனைவருக்கும் மனமார்ந்த் நன்றிகள்...





சோகமான நிகழ்ச்சியாயினும் ஒரு பெரிய அனுபவம் கிடைத்தது.. இது போல நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவெழுதி வைக்க வேண்டுமென்று நினைத்துள்ளேன்..



மனம் இன்னும் ஆறவில்லை.. முடிந்த போது எழுதுகிறேன்...

எங்கள் குடும்ப சோகத்தில் எனக்காக பிரார்த்தித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் !!








No comments: