Thursday, July 10, 2008

65. வேலை பார்க்கும் போது படித்துத் தான் தீரணுமா?

முதலில் ஒரு சின்ன ஜோக்.. பழசுதான்.. இருந்தாலும் இந்த இடத்துக்குப் பொருந்துகிறது..

ஒரு அலுவலகத்தில் வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பெரிய வி.ஐ.பி யின் சிபாரிசில் இண்டர்வியூவுக்கு ஒரு பையன் வந்திருந்தான். பையனின் தகுதிகளைப் பார்த்த போதே.. இவன் சிபாரிசின் பலத்திலே மட்டுமே வந்திருக்கிறான் என்று புரிந்து விட்டது. சரி, சம்பிரதாயமாகவாவது சில கேள்விகள் கேட்போம் என்று கேட்ட கேள்விகளுக்குக் கூட சரியான பதில்களைப் பையனால் சொல்ல இயலவில்லை..

கடைசியில் ஒரு கேள்வி. ரொம்ப எளிதுதான்.. "காஃபி" என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் சொல்லுங்கள்... ( முழுவதும் சரியாகச் சொல்லாவிட்டாலும் .. பையன் (VIP சிபாரிசு ஆயிற்றே..) ஒரே ஒரு எழுத்தாவது சரியாக சொல்லி விட்டால் அவனுக்கு வேலை கொடுத்து விடலாம் என்று எண்ணம்..)

நிதானமாக யோசித்துப் பையன் சொன்ன பதில்..


K..A...P....H....I

oOo

அதை விடுங்கள் அது ஒரு ஜோக்குதான்..

சில மாதங்களுக்கு முன் என் அலுவலகத்தில் வேலைக்கு ஆள் தேவைப் பட்டது.. IT .. தான் Java, Oracle. கொஞ்சம் மட்டும் தெரிந்திருந்தால் உடனே வேலை..

இண்டர் வியூவிற்கு ஒருவர் வந்திருந்தார்.. சுமார் 35 வயதிருக்கும்... சமீபத்தில் வேலை இழந்த்திருந்தார்.. புள்ளைக் குட்டிக்காரர்.. விரைவில் வேலையில் சேரவேண்டுமென்பது அவர் நிர்ப்பந்தம்.. சேமிப்பு கரையத் தொடங்கியிருந்தது...


ஐ.டி யில் 12 வருடங்கள் குப்பை கொட்டியதாக ஜாதகம் (resume) சொன்னது. .. அவர் பெயரில் ஒரு வித தெலுங்கு வாடை வீசினாலும்.. அவரே தனக்குத் தமிழ் தெரியும் என்று சொன்னார்.. என் பெயரிலிருந்து அவர் நான் தமிழாக இருக்கும் என்று ஊகித்துக் கொண்டு அவரே முன் வந்து சொன்ன செய்தி.. (இதெல்லாம் நாங்கள் இண்டர்வியூவில் கேட்கக் கூடாது.. அவரே சொன்னாலும் அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பது எங்கள் அலுவலக் நியதி..)



"நம்ம தமிழ் ஆளாச்சே.." எடுத்துக் கொள்ளலாம்.. எப்படியும் 12 வ்ருஷ அனுபவத்தில் 7 வ்ருஷம் OB அடித்ததாக எடுத்துக் கொண்டாலும் மிச்ச 5 வ்ருஷம் solid experience இருக்கும்.. வேலைக்கு எடுத்து விடலாம் என்று தான் நினைத்தேன்.. கேள்விகளை.. சின்னச்சின்னதாக எளிதாகக் கேட்டாலும்..



"அதெல்லாம் எப்பவோப் படிச்சது சார்.. மறந்து போயிடிச்சி.. உங்களுக்கு எப்ப்டி இதெல்லாம் நினைவிருக்கு " என்று அப்பாவியாகக் கேட்டார்..


"அதனாலென்ன பரவாயில்லை" யென்று அவர் வேலை பார்த்ததிலிருந்து கேட்டால்.. அதற்கும் அவர் சரியான பதில் சொல்ல இயல்வில்லை..


"நீங்க ப்ரொக்ராம் கொடுங்க சார்.. பண்ணிடுறேன்.. இந்த மாதிரி கேள்வி கேட்டால் .. டக்க்குனு பதில் சொல்ல முடியலை சார்.." என்றார்..


"டக்குனு எல்லாம் சொல்ல வேண்டாம்.. கொஞ்சம் யோசிச்சாவது சொல்லுங்களேன்... அவ்வளவு சரியான விடை கூட வேண்டாம்... கொஞ்சம் நெருக்கமாக வந்தால் கூட போதும்... ஒரு ப்ரச்சினை (troubleshooting) யின் போது நீங்கள் எந்தெந்த கோணத்தில் சிந்திக்கிறீர்களென்பது தான் முக்கியம்.. சரியான் விடை முக்கியமில்லை" என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன்.. (நம்ம தமிழ் ஆளாச்சே..)


ஹூஹூம்... கடைசி வரை அவர் நிலைமை KAPHI கதை தான்..


பன்னிரெண்டு வருடங்கள் வேலை அனுபவமிருந்தும்.. அவர் எதுவுமே தியரி யோ அல்லது முன்னேற்றமோ படிக்க முயற்சி பண்ணவில்லை என்று தெரிந்தது... கேட்டால் நேரமில்லை என்றுதான் சொல்லியிருப்பார்.. கேட்டிருக்கவும் முடியாது.. இண்டர்வியூ சமயங்களில் தேர்வாளராக இருக்கும் போது என்ன வார்த்தைகள் பிரயோகிக்கிறோம் என்பது முக்கியம்.. ஏதாவது கேட்டால்.. அது நம் மீதே.. ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டதாக வழக்கு சந்திக்க நேரிடும் (அது தனிக் கதை..)


மனதில் வலியுடன் தான் அவரை அனுப்ப வேண்டியிருந்தது....

oOo

இப்போ மனதுக்கு இதமாக இந்த செய்தி.. இன்றைய தினமலரிலிருந்து.....

ஆமதாபாத் நூலகத்தில், அறைகளைக் கூட்டி, சுத்தம் செய்யும் பியூனாக வேலையில்சேர்ந்தார் அவர்; சும்மா இருந்த நேரங்களில் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தார்;அடுத்த சில ஆண்டுகளில் பட்டதாரி ஆனார்; பின் நூலகருக்கான சர்ட்டிபிகேட்படிப்பையும் முடித்தார். இப்போது அவர், நூலகராகவும் ஆகிவிட்டார். அவர் தான் கங்காராம வகேலா; குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நூலகத்தில் பணியாற்றிவருகிறார்.



நூலகத்துக்கு பியூன் வேலைக்கு ஆள் தேவையென்று 1981 ஆம் ஆண்டு விளம்பரம்பார்த்து விண்ணப்பித்தார் வகேலா. தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்தார்; தினமும்அறைகளை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்து, புத்தகங்களை அந்தந்த பிரிவுகளில்அடுக்கி வைக்க வேண்டும். தினமும் இதைச் செய்து வந்தவருக்கு சும்மா இருந்தநேரத்தில் புத்தகங்களைப் பிரித்துப் பார்க்கத் தூண்டியது. சில முக்கிய புத்தகங்கள்வேண்டுமானால் வகேலாவைக் கேட்டால் கிடைக்கும் என்ற அளவுக்கு அனுபவத்தைவளர்த்துக் கொண்டார்.


நூலகத்தில் உள்ள மற்றவர்கள் ஊக்கம் கொடுத்ததால், உள்ளூர் கல்லூரியில் குஜாராத்திஇலக்கியத்தை முக்கிய பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்தார்; அதில் படித்துத்தேர்ச்சியும் பெற்றார். அத்துடன் நிற்காமல் நூலகருக்கான சர்ட்டிபிகேட் கோர்சிலும் சேர்ந்து, அதையும் பெற்றார். இந்த நிலையில் 1998 ல் நூலகர் பிரகாஷ் ஓய்வு பெற்றார்அவர் சொன்னதன் பேரில் வகேலாவை தற்காலிக நூலகராக அமர்த்தினர் உயர்அதிகாரிகள். இப்போது அவர் நூலக புத்தகங்களை கம்பியூட்டர் மயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு விடுகிறார்..

3 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சீமாச்சு,உங்கள் புரொபைல் பாலகன் படம் என்ன 1970 களில் எடுக்கப்பட்டதா?

Subramanian said...

முயற்சி திருவினை ஆக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இதைவிட வேறென்ன வேண்டும்?

Vijay said...

நானும் ஆரம்பிச்சிட்டேன் சார், (படிக்கதான்) முடிச்ச உடனே அவசியம் சொல்றேன்.